Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு கலைஞன் / எழுத்தாளன் / மனிதன் பற்றற்று இருக்க வேண்டுமா?



இளையராஜாவின் பொன்விதிகள்என்றொரு கட்டுரையில் ஜெயமோகன் இளையராஜா எந்தளவுக்கு உலக வாழ்வில் பற்றற்றவர், புற உலகின் அரசியல் பற்றின அக்கறையற்றவர், மிச்சம் வைக்காமல் தன்னை கலைக்கு ஒப்புக் கொடுத்தவர், அதற்கான ஒழுங்கைப் பேணுகிறவர் என்று சிலாகிக்கிறார். இதில் என்னைத் தூண்டிய விசயம் பற்று என்பதே. ஒரு கலைஞன் லௌகீகத்தில் பற்றற்றவன் எனும் தொன்மமானது இங்கு கா..சு காலத்தில் இருந்தே இருக்கிறது. (அதற்கு முன் சங்க கால கவிஞர்கள் பரிசிலுக்கு பாட்டெழுதினார்கள் என்னும் நம்பிக்கை இதன் எதிரிடையோ?) இன்று அரசவைப் புலவர்களின் இடத்தில் சினிமா கலைஞர்கள் வந்து விட்டமையால் ஜெயமோகன் ராஜாவை மட்டும் கா..சுவாக புனைகிறார் என நினைக்கிறேன். அல்லது அது அவர் கண்ட இளையராஜாவாக நிஜமாகக் கூட இருக்கலாம். என் ஆர்வம் கலைஞனின் பொன்விதிகளில் ஒன்றாக பற்றற்று இருத்தலைக் கூறலாமா என்பதே.


நான் என்னையே எடுத்துக் கொள்கிறேன். எழுத ஆரம்பித்தால் எனக்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது ஏன் வேலைக்குப் போவது கூட மறந்து போகும். ஒரு பேரழகி என் அருகே வந்து நிற்பது போக அவள் தன் செவ்வாய் திறந்து அருளினாலும் அச்சொற்கள் என் காதில் பட்டு இலையுதிர் மழைத்துளிகள் போலாகி விடும். (ஏனென்றால் நான் யார் சொல்லும் கேட்கக்கூடாது என ஹெட்போன் மாட்டி இசையை உச்சமாக ஒலிக்க விட்டிருப்பேன்.) இத்தனை வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்; இதுவரை என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை, வீடில்லை, சொத்தில்லை, தங்கமில்லை, ஒன்றுமேயில்லை. (என்னைப் போல எதுவுமே இல்லாதவர்கள் சாமான்யர்களிலும் பலர் இருக்கிறார்கள். அது நம் பொருளாதார அமைப்பின் சாபக்கேடு.) நான் வாங்க ஆசைப்படுவதும் பெரும்பாலும் கணினி, புத்தகம் என்று எழுத்து சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். (என்னைப் போல தினமும் எழுதுகிற படைப்பாளிகளின் விருப்பங்களும் என்னைப் போன்றே எழுத, வாசிக்க நேரம், வேளாவேளைக்கு சாப்பாடு, ஒரு துணை என்றளவிலே இருக்கும்.) என்னைப் போன்ற கலைஞர்கள் பற்றற்றவர்களா?


அதெப்டிங்க? நீங்க வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க, சாப்டுறீங்க, பெண் (அல்லது ஆண்) துணை இருக்குது, பற்றில்லாமல் இதெல்லாம் சாத்தியமாஎன யோசிப்பீர்கள். ரொம்ப நியாயமான கேள்வி. இதே கேள்வி இளையராஜாவுக்கும் பொருந்தும்


சரி, உலகப்பற்று அதிகமானோருடன் ஒப்பிடுகையில் ஒருஉன்னத கலைஞன்குறைவான லௌகீக அக்கறை கொண்டவன் என்று கூறலாமா? என்னுடைய பதில் இங்கு கூடுதல்-குறைவு எனும் இருமையில் எந்த பொருளும் இல்லை. எந்த கலைஞனும் பற்று கொண்டவனோ பற்றற்றவனோ அல்ல, ‘துறத்தல்என்பதே ஒரு போலித்தனம் என்பதே. துறந்தவன் எப்படி துறந்தவன் ஆகிறான், துறக்கும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் துறவி? பற்றற்றவன் எப்படி பற்றற்றவன் ஆகிறான், பற்றிக் கொள்ளும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் பற்றற்றவன்?

 

மாறாக, ஒரு இசைக்கலைஞனோ எழுத்தாளனோ இந்த உலகை ஒரே சமயம் பற்றிக் கொண்டும் துறந்து கொண்டும் இருக்கிறான் என நம்புகிறேன். இந்த உலகைப் பற்றிக் கொண்டு அதைக் கடந்து போகும் முயற்சியே கலை. அதே நேரம் அவன் இந்த உலகில் இருந்து பறந்து வானிற்கு செல்வதும் இல்லை. அவன் திரும்பவும் பூமிக்கே வருகிறான். மீண்டும் இங்கிருந்து தாவுகிறான், மீள்கிறான். இந்த ஊசலாட்டமே கலை அனுபவம், படைப்பனுபவம். ஹைடெக்கர் சொல்வதைப் போல இந்த உலகில்இருக்கிறஎவருமே இத்தகைய அனுபவத்தைப் பெறுகிறவர்களே. ஆனால் கலைஞன் இதை இன்னும் உக்கிரமாக, சிக்கலாக அறிகிறான், இன்னும் உன்னதமாக்குகிறான். வாழ்தலின் உன்னத மீமெய்யியல் (the sublime metaphysics of living) என்று படைப்பாக்கத்தைக் கூறலாம்.    


ஒருவன் கலைஞனாக இருப்பதன் முழுமுதற் தகுதியே அவன் இந்த உலகுடன் மிகுந்த பற்று கொண்டிருப்பதே. ஒரு பெண்ணை எப்படியாவது சுகிக்க வேண்டுமென உங்கள் உடல் தகிக்கிறதா, அதை உங்களால் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதா, அதை உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் கலைஞன் ஆகலாம். அப்படி கலைஞன் ஆக இந்த உடல்ரீதியான இச்சையை கடந்து போவதற்கு கலையை பயன்படுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுடலை ஒரு ஸ்வர ஜதி மூலம் தொடுகிறீர்கள். ஒரு நுட்பமான வரி மூலம் இன்னும் ஆழமாக, பிரம்மாண்டமாக உணர்கிறீர்கள். அப்போது அதை அடையவும் கடந்து போகவும் உங்களால் முடிகிறது. ஆனால் இங்கு முக்கியமானது உங்களுடைய கலையின்பமானது - உங்களை கலைக்குள் வைத்திருக்கும் அந்த சங்கதியானது - கடப்பதில் இல்லை என்பதே. மாறாக, அது உலகில் இருந்து கொண்டே இல்லாமல் போவதில் இருக்கிறது. இருத்தலுக்கும் இன்மைக்கும் நடுவே ஒரு இடைவெளி வருகிறது. அந்த இடைவெளியும் இருத்தலுக்குள்ளே தான் இருக்கிறது (ஏனென்றால் நீங்கள் உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள், ஒவ்வொரு நொடியும்.) பற்றியிருந்தாலோ பற்றற்றிருந்தாலோ நீங்கள் இந்த இடைவெளியை அறிய முடியாது. சொல்லப்போனால் இந்த இடைவெளியை அறியாமல் இங்கு யாரும் இல்லை, இருக்கவும் முடியாது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல அதன் உக்கிரம், தீவிரம், அளவு தான் மனிதர் இடையே வித்தியாசம்.


அதனால் தான் இளையராஜாவோ, ஒரு கலைஞனோ, எழுத்தாளனோ, சாமான்யனோ, ஒரு சாமியார் கூட இங்குசாமியார்அல்ல. ‘சாமியார்ஆக சாக வேண்டும் என்கிறேன். சாகையில் மட்டுமே உலகம் மறைகிறது. இடைவெளியும் மறைகிறது. இளையராஜா பற்றற்றவர் என்பது ஒரு மேலோட்டமான புரிதல் மட்டுமே. அவர் ஒரு கணம் உலகை மறக்கிறார். மீண்டும் நினைவு கொள்கிறார். இரண்டுக்கும் இடையே இந்த உலகில், அதன் இடைவெளியில், மிக அதிகமாக தன் இசை வழி திளைக்கிறார். இதுவே எழுத்தாளனுக்கும் நிகழ்கிறது. அது நிகழ அவன் ஒவ்வொரு கணமும் மிகுந்த பற்றுடன் இருக்க வேண்டும். ஆம், இளையராஜாவும்பற்றாளரே’, அதனாலே அவர் உன்னதமான கலைஞன். நான் ஒரு எழுத்தாளனாக இளைராஜாவிடம் இருந்து ஒரு பொன்விதியைப் பெற்றால் அதுஉலகில் இருஎன்பதே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...