Skip to main content

ஒரு கலைஞன் / எழுத்தாளன் / மனிதன் பற்றற்று இருக்க வேண்டுமா?



இளையராஜாவின் பொன்விதிகள்என்றொரு கட்டுரையில் ஜெயமோகன் இளையராஜா எந்தளவுக்கு உலக வாழ்வில் பற்றற்றவர், புற உலகின் அரசியல் பற்றின அக்கறையற்றவர், மிச்சம் வைக்காமல் தன்னை கலைக்கு ஒப்புக் கொடுத்தவர், அதற்கான ஒழுங்கைப் பேணுகிறவர் என்று சிலாகிக்கிறார். இதில் என்னைத் தூண்டிய விசயம் பற்று என்பதே. ஒரு கலைஞன் லௌகீகத்தில் பற்றற்றவன் எனும் தொன்மமானது இங்கு கா..சு காலத்தில் இருந்தே இருக்கிறது. (அதற்கு முன் சங்க கால கவிஞர்கள் பரிசிலுக்கு பாட்டெழுதினார்கள் என்னும் நம்பிக்கை இதன் எதிரிடையோ?) இன்று அரசவைப் புலவர்களின் இடத்தில் சினிமா கலைஞர்கள் வந்து விட்டமையால் ஜெயமோகன் ராஜாவை மட்டும் கா..சுவாக புனைகிறார் என நினைக்கிறேன். அல்லது அது அவர் கண்ட இளையராஜாவாக நிஜமாகக் கூட இருக்கலாம். என் ஆர்வம் கலைஞனின் பொன்விதிகளில் ஒன்றாக பற்றற்று இருத்தலைக் கூறலாமா என்பதே.


நான் என்னையே எடுத்துக் கொள்கிறேன். எழுத ஆரம்பித்தால் எனக்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது ஏன் வேலைக்குப் போவது கூட மறந்து போகும். ஒரு பேரழகி என் அருகே வந்து நிற்பது போக அவள் தன் செவ்வாய் திறந்து அருளினாலும் அச்சொற்கள் என் காதில் பட்டு இலையுதிர் மழைத்துளிகள் போலாகி விடும். (ஏனென்றால் நான் யார் சொல்லும் கேட்கக்கூடாது என ஹெட்போன் மாட்டி இசையை உச்சமாக ஒலிக்க விட்டிருப்பேன்.) இத்தனை வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்; இதுவரை என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை, வீடில்லை, சொத்தில்லை, தங்கமில்லை, ஒன்றுமேயில்லை. (என்னைப் போல எதுவுமே இல்லாதவர்கள் சாமான்யர்களிலும் பலர் இருக்கிறார்கள். அது நம் பொருளாதார அமைப்பின் சாபக்கேடு.) நான் வாங்க ஆசைப்படுவதும் பெரும்பாலும் கணினி, புத்தகம் என்று எழுத்து சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். (என்னைப் போல தினமும் எழுதுகிற படைப்பாளிகளின் விருப்பங்களும் என்னைப் போன்றே எழுத, வாசிக்க நேரம், வேளாவேளைக்கு சாப்பாடு, ஒரு துணை என்றளவிலே இருக்கும்.) என்னைப் போன்ற கலைஞர்கள் பற்றற்றவர்களா?


அதெப்டிங்க? நீங்க வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க, சாப்டுறீங்க, பெண் (அல்லது ஆண்) துணை இருக்குது, பற்றில்லாமல் இதெல்லாம் சாத்தியமாஎன யோசிப்பீர்கள். ரொம்ப நியாயமான கேள்வி. இதே கேள்வி இளையராஜாவுக்கும் பொருந்தும்


சரி, உலகப்பற்று அதிகமானோருடன் ஒப்பிடுகையில் ஒருஉன்னத கலைஞன்குறைவான லௌகீக அக்கறை கொண்டவன் என்று கூறலாமா? என்னுடைய பதில் இங்கு கூடுதல்-குறைவு எனும் இருமையில் எந்த பொருளும் இல்லை. எந்த கலைஞனும் பற்று கொண்டவனோ பற்றற்றவனோ அல்ல, ‘துறத்தல்என்பதே ஒரு போலித்தனம் என்பதே. துறந்தவன் எப்படி துறந்தவன் ஆகிறான், துறக்கும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் துறவி? பற்றற்றவன் எப்படி பற்றற்றவன் ஆகிறான், பற்றிக் கொள்ளும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் பற்றற்றவன்?

 

மாறாக, ஒரு இசைக்கலைஞனோ எழுத்தாளனோ இந்த உலகை ஒரே சமயம் பற்றிக் கொண்டும் துறந்து கொண்டும் இருக்கிறான் என நம்புகிறேன். இந்த உலகைப் பற்றிக் கொண்டு அதைக் கடந்து போகும் முயற்சியே கலை. அதே நேரம் அவன் இந்த உலகில் இருந்து பறந்து வானிற்கு செல்வதும் இல்லை. அவன் திரும்பவும் பூமிக்கே வருகிறான். மீண்டும் இங்கிருந்து தாவுகிறான், மீள்கிறான். இந்த ஊசலாட்டமே கலை அனுபவம், படைப்பனுபவம். ஹைடெக்கர் சொல்வதைப் போல இந்த உலகில்இருக்கிறஎவருமே இத்தகைய அனுபவத்தைப் பெறுகிறவர்களே. ஆனால் கலைஞன் இதை இன்னும் உக்கிரமாக, சிக்கலாக அறிகிறான், இன்னும் உன்னதமாக்குகிறான். வாழ்தலின் உன்னத மீமெய்யியல் (the sublime metaphysics of living) என்று படைப்பாக்கத்தைக் கூறலாம்.    


ஒருவன் கலைஞனாக இருப்பதன் முழுமுதற் தகுதியே அவன் இந்த உலகுடன் மிகுந்த பற்று கொண்டிருப்பதே. ஒரு பெண்ணை எப்படியாவது சுகிக்க வேண்டுமென உங்கள் உடல் தகிக்கிறதா, அதை உங்களால் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதா, அதை உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் கலைஞன் ஆகலாம். அப்படி கலைஞன் ஆக இந்த உடல்ரீதியான இச்சையை கடந்து போவதற்கு கலையை பயன்படுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுடலை ஒரு ஸ்வர ஜதி மூலம் தொடுகிறீர்கள். ஒரு நுட்பமான வரி மூலம் இன்னும் ஆழமாக, பிரம்மாண்டமாக உணர்கிறீர்கள். அப்போது அதை அடையவும் கடந்து போகவும் உங்களால் முடிகிறது. ஆனால் இங்கு முக்கியமானது உங்களுடைய கலையின்பமானது - உங்களை கலைக்குள் வைத்திருக்கும் அந்த சங்கதியானது - கடப்பதில் இல்லை என்பதே. மாறாக, அது உலகில் இருந்து கொண்டே இல்லாமல் போவதில் இருக்கிறது. இருத்தலுக்கும் இன்மைக்கும் நடுவே ஒரு இடைவெளி வருகிறது. அந்த இடைவெளியும் இருத்தலுக்குள்ளே தான் இருக்கிறது (ஏனென்றால் நீங்கள் உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள், ஒவ்வொரு நொடியும்.) பற்றியிருந்தாலோ பற்றற்றிருந்தாலோ நீங்கள் இந்த இடைவெளியை அறிய முடியாது. சொல்லப்போனால் இந்த இடைவெளியை அறியாமல் இங்கு யாரும் இல்லை, இருக்கவும் முடியாது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல அதன் உக்கிரம், தீவிரம், அளவு தான் மனிதர் இடையே வித்தியாசம்.


அதனால் தான் இளையராஜாவோ, ஒரு கலைஞனோ, எழுத்தாளனோ, சாமான்யனோ, ஒரு சாமியார் கூட இங்குசாமியார்அல்ல. ‘சாமியார்ஆக சாக வேண்டும் என்கிறேன். சாகையில் மட்டுமே உலகம் மறைகிறது. இடைவெளியும் மறைகிறது. இளையராஜா பற்றற்றவர் என்பது ஒரு மேலோட்டமான புரிதல் மட்டுமே. அவர் ஒரு கணம் உலகை மறக்கிறார். மீண்டும் நினைவு கொள்கிறார். இரண்டுக்கும் இடையே இந்த உலகில், அதன் இடைவெளியில், மிக அதிகமாக தன் இசை வழி திளைக்கிறார். இதுவே எழுத்தாளனுக்கும் நிகழ்கிறது. அது நிகழ அவன் ஒவ்வொரு கணமும் மிகுந்த பற்றுடன் இருக்க வேண்டும். ஆம், இளையராஜாவும்பற்றாளரே’, அதனாலே அவர் உன்னதமான கலைஞன். நான் ஒரு எழுத்தாளனாக இளைராஜாவிடம் இருந்து ஒரு பொன்விதியைப் பெற்றால் அதுஉலகில் இருஎன்பதே.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...