Skip to main content

நீலகண்டம்




முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின்நீலகண்டம்இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனேநீலகண்டத்தைப்படித்தேன்.

 எந்தவித இரக்கத்தையும் தன்னிரக்கத்தையும் கோராமல் ஊனத்தைப் பார்க்க முயல்வது இந்நாவலின் ஒரு சிறப்பு. மனிதர்கள் அடிப்படையில் தன்னலம் மிக்கவர்களே. அதுவும் குடும்ப அமைப்புக்குள் - அது தியாகத்தைக் கோருவதாலே - அவர்கள் மிகவும் மூர்க்கமாக மாறுவார்கள். குறிப்பாக அந்த மாற்றுத்திறனாளிக் குழந்தையின் அம்மாவின் பாத்திரம் தன் குடும்பத்தினருடன் உறவை சீர்படுத்தியதும் அவர்களின் கைப்பாவையாக மாறி தன் மாற்றுத்திறனாளிக் குழந்தையைக் கைவிட முன்வருகிற இடம் வெகுசிறப்பு. அதுவும்



அவரது சாதிப் பின்னணியும், அதனாலே தன் கணவனிடத்து அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தும் ஆதிக்க பாவனைகளும், அது ஒரு தவறென அவருக்குத் தோன்றாதிருப்பதும் நாவலில் சரியாக வந்திருக்கின்றன. இந்த இடங்களை சுனில் எந்தமனிதநேய நெஞ்சுநக்கலும்’, செண்டிமெண்டல் நாடகீயங்களும் இல்லாமல் சித்தரித்திருக்கிறார். இது எதார்த்தத்துக்கு வெகுநெருக்கமாக இருக்கிறது


இந்த நாவலுக்குள் மூன்று நாவல்கள் உள்ளன: ஒன்று பெற்றோரின் தத்தளிப்புகளை, நெருக்கடிகளை, குற்றவுணர்வைப் பேசுவது. இரண்டாவது, மாற்றுத்திறனாளிக் குழந்தையின் மனநிலையை மொபைல் விளையாட்டுகள், எதார்த்தத்தைப் போன்றே தோன்றும் பகற்கற்பனையான மனவோட்டங்களைச் சித்தரிப்பது. மூன்றாவது, பின்நவீன கதையாடல்களின் தனியான ஒரு தடம். இவற்றில் இரண்டாவதே மிகவும் சிரமமானது என்பதாலே நாவலாசிரியரை அதற்காக வெகுவாகப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது

குழந்தைக்கும் அவளது அப்பாவுக்கும் இடையில் எவ்வளவு முயன்றாலும் எட்ட முடியாத ஒரு தொலைவு தோன்றுகிறது. நாவல் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசத் துவங்கி  - எட்டாவது அத்தியாயத்தில் இருந்து - தடம் புரள்கிறது. பின்னர் பத்துக்கு மேற்பட்ட அத்தியாயங்களில் கதை இந்த அப்பா பாத்திரத்தின் அலுவலக, குடும்ப, பரம்பரைக் கதைகள், பின்நவீன கதையாடல்கள் என அவருடைய குற்றவுணர்வு, நெருக்கடிகள் குறித்த ஒரு தனிப்பயணமாகிறது. இதில் செட்டியார்களிடையே குழந்தையை தத்தெடுக்கிற மரபான சடங்கு, மனவளர்ச்சியற்ற குழந்தைகள் இறந்து தெய்வமாவது போன்ற இடங்கள் நாவலின் கதையின் ஒரு இணைக் கதையாடலாகிறது, அதாவது பிரச்சினையை மீள மீளக் காட்டுகிறது, ஆனால் மேலும் சிக்கலாக்கவில்லை


ஒரு உதாரணத்திற்கு, மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதில் பீஷ்மர் போன்றவர்கள் செய்கிற எதிர்பாராத தவறுகள் ஒரு பெரும் பாவமாக உருமாறி அவர்களையும், அடுத்தடுத்த வாரிசுகளையும் வந்து திரும்ப அடிக்கையில் அதன் நியாயமும் அபத்தமும் கதையைத் தீவிரமாக்குகிறது. ஒரு சிறு பிழையின் பெரும் ரத்தக்களறியான விளைவை, துரோகங்களைக் காண்கிறோம். ஜெயமோகனின்ரப்பரில்துவக்கத்திலே அந்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தின் மூத்தவர் தன் முன்னேற்றத்துக்காக செய்கிற சிறிய பாவங்கள் (இயற்கையை அழிப்பது), அவருக்கு முன்பு அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நாயர்கள் செய்த தீண்டாமைக் குற்றங்கள் சித்தரிக்கப்படும். இவற்றின் விளைவு நாவலின் முடிவில் பாத்திரங்களுக்கு நிகழ்வனவற்றுடன் முடிச்சிடப்படும். அப்போது விளைவுகள் வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிற அளவுக்கு இருக்கும். அப்படியொரு சிக்கலை நோக்கிநீலகண்டத்தின்குடும்பக் கதைகள், தொன்மங்களில் வரும் குற்றவுணர்வு சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட திசைகளில் பயணித்ததால் சுனிலால் அதில் அக்கறை செலுத்த முடியவில்லை என நினைக்கிறேன்ஆனால் கடைசி சில அத்தியாயங்களில் தான் அதுவரை குறிப்புணர்த்திய கதையாடல்களுடன் கிளைமேக்ஸை அழகாக முடிச்சிட்டு நிறைவைத் தந்து விடுகிறார்


இந்நாவலின் மற்றொரு குறையென்றால் அது மாற்றுத்திறனாளி உடலை மற்றமையாகப் பார்க்கும் போக்கே. மற்றொரு பிரச்சினை விக்கிரமாதித்யன் வேதாளம் உரையாடல் பகுதிகளில் (நாவலுக்குள் வரும் மூன்றாவது நாவல்) சுனில் அறப்பிறழ்வு பற்றி ஒரு தத்துவச் சிக்கலை எழுப்ப முயல்கிறார். ஆனால் அது தீவிரமாக நிகழவில்லை


ஒருவேளை இவ்வளவு பேராவலுடன் நாவலின் களத்தை அவர் அமைக்காவிடில் இன்னும் வலுவாக அவரால் மாற்றுத்திறனாளிகளின், அவர்களுடைய பெற்றோரின் உலகைப் பேசியிருக்க முடியும். ஆனால் பேராவல் தானே உன்னதமான நாவல்களை எழுத நம்மை உந்தித் தள்ளுகிறது. அதனால் தவறில்லை. இந்த சிறுகுறைகளைக் கடந்து பார்த்தால் தமிழில் நான் படித்த நாவல்களில் என்னால் மறக்கவே முடியாத, பல படங்களில் மனசாட்சியைப் பற்றி உலுக்கிற நாவலாகநீலகண்டம்உள்ளது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...