முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் அற்புத ஆட்டமும் இந்தியாவின் கால்நடுக்கமும்


டி20 உலகக்கோபையின் முதற் போட்டியில் நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியாவின் துவக்க வீரர்கள் பதற்றமாக ஆடி சொதப்பிட, நிச்சயமாக தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தை கோலி - பாண்டியாவின் துணையுடன் - இறுதி வரை போராடி வென்றளித்தார். அதுவும் ஹாரிஸ் ரவுபின் 19வது ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்களையும் மறக்க முடியுமா? கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான். இந்த ஆட்டநிலையை அவர் இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றால் கோப்பை நமக்குத் தான் எனத் தோன்றுகிறது.

அதே நேரம் இப்போட்டி முழுக்க பெரிய ஆட்டத்தில் மோதுகிற கால் நடுக்கம் தெளிவாக இந்தியாவுடம் புலப்பட்டது. இன்று கிட்டத்தட்ட choke ஆனார்கள். ஒருவேளை அரை இறுதியிலும் choke ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கோலியின் இன்றைய இன்னிங்ஸ் போல சில அதிசயங்கள் முக்கியமான போட்டிகளில் நடந்தாலே இந்தியாவால் முன்னேற முடியும். 

ஒப்பிடுகையில் பாகிஸ்தான் இன்னும் மேலான தன்னம்பிக்கையுடன் ஒழுங்குடன் ஆடினார்கள். இறுதி வரை கலங்கவில்லை. ஆனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் - சிங்கைத் தவிர - துவக்க ஓவர்களில் நீளத்தை fullஆகப் போடவில்லை. சற்று தள்ளி பந்தை லெங்த்தில் போட்டதாலே தொடர்ந்து எட்ஜ் வாங்காமல் பந்துகள் மட்டையை பறக்கும் முத்தம் மட்டும் இட்டுச் சென்றன. இல்லாவிடில் புவனேஸ்வருக்கு 3 விக்கெட்டுகள் முதல் 5 ஓவர்களுக்குள் கிடைத்திருக்கும். அதே போல வெவ்வேறு கட்டங்களில் எப்படியாவது சாதிக்க வேண்டும் எனும் மிகை விருப்பத்தில் வேகவீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். அதனாலே 130க்குள் ஆட்டம் இழந்திருக்க வேண்டிய பாகிஸ்தான் 159ஐ எட்டியது.

 மட்டையாட்டத்திலும் விக்கெட் கொடுக்கக் கூடாதே எனும் பயத்தில் மிகவும் தடுப்பாட்டத்த நிலைக்கு போனோம். அதனால் பாகிஸ்தான் வீரர்களால் தம் விருப்பப்படி பந்து வீசி கட்டுப்படுத்த முடிந்தது  இந்திய அணி இப்படி தன் மீது தானே தேவையில்லாத அழுத்தத்தை போட்டுக் கொள்வது ஒரு பிரச்சினை. கோலியும் ஹர்த்திக்குமே விதிவிலக்குகள். அவர்கள் உணர்ச்சிவயப்படாமல் தோனி ஸ்டைலில் கூலாக ஆட்டத்தை இறுதி வரை எடுத்து சென்றனர். வென்றனர். அதனாலே ஆட்டமுடிவில் ரோஹித் ஓடி வந்து கோலியைத் தூக்கிக் கொண்டார், அவரது கண்கள் ஈரத்தில் மினுங்கின. இன்றைய போட்டியில் கோலி இல்லாமல் நிலைமை தலைகீழாகியிருக்கும் என அவர் அறிவார். 

இந்தியா இப்படி நெருக்கடி சமயங்களில் பயந்து நடுங்குவதை நிறுத்தினால்  இந்த உலகக்கோப்பை தொடர் பட்டாசாக இருக்கும். வரும் ஆட்டங்களில் தெரியும் இவர்கள் துணிந்தாடுவார்களா அல்லது நெருப்புக் கோழி போல தலையைப் புதைத்துக் கொண்டு கோலி தம்மைக் காப்பாற்ற மாட்டாரா என எதிர்பார்த்திருப்பார்களா என.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...