முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இமையம் எனும் அசுரன்



குவெம்பு விருது பெறும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துக்களும் அன்பும்!
தனது எழுத்துக்கலை மீது இத்தனை நுட்பமான அறிவு கொண்ட மற்றொருவரை நான் கண்டதில்லை. அவருடைய எந்த நாவலை வேண்டுமெனிலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் துவக்கம் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். அதே போலத்தான் கதைக்களனை, அதில் வர வேண்டிய இரண்டாம் நிலை பாத்திரங்களை தேர்வு பண்ணுவது, இவர்களைத் தன் கதையின் அமைப்பின் இன்றியமையாத பகுதியாக்குவது, பிரதான பாத்திரங்களுக்கு நாவலுக்குள் சரியான இடமளிப்பது எனத் திட்டவட்டமாக வகுத்திருப்பார். ஒரு நாவலை நினைத்ததுமே அதன் பாத்திரங்கள் எழுந்து நம் கண்முன் நிற்பது இதனால் தான். இமையத்தின் புனைவுலகம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு பலமுறை எடிட்டிங் டேபிளில் முடுக்கி செறிவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைப் போன்றது. இதற்கு மேல் ஓர் அங்குலம் கூட வெட்டியெடுக்க இடமில்லை எனும்படிக்கு சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆணழகன் என அவரது நாவல்களின் வடிவத்தை சொல்வேன்.

இன்னொரு பக்கம் வசனங்களை ஒரு பாத்திரத்தின் பல்வேறு மனோலயங்களை, கதைசொல்லிக்கும் ஒரு பாத்திரத்துக்கும் பிற பாத்திரங்களுக்குமான எல்லைக்கோட்டை அழிக்கும்படியான அபாரமான பாய்ச்சல் கொண்டவையாக எழுதுவார். இந்த தஸ்தாவஸ்கிய எழுத்துப் பாய்ச்சல் வெகுவாக ஆராயத்தக்கது. இமையத்தின் நாவல்களின் உயிர், மானுட வாசம், ஈரம் இந்த வசனங்களில் இருந்தே எழுந்து வருகின்றன.

இறுதியாக அவர் தேர்வு செய்கிற வாழ்க்கை, அதன் அரசியல், அது தனித்துவமானது - இதுவே அதிகம் பேசப்படுவது. ஆனால் இமையம் இன்னும் அசுரத்தனமான ஆகிருதி கொண்ட படைப்பாளி. விரிவாக விவாதிக்கத்தக்கவர். தன்னை ஒரு சமூகத்தினுள் அடக்கிக் கொள்ள விரும்பாதவர். 

இதைப் போன்ற மேலும் பல போற்றத்தக்க விருதுகளை அவர் பெறட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.