முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘அதிர்ஷ்டக்காரன்’


நேற்று அனேகமாக இந்த நேரத்தில் எனக்கு ஒரு வினோதமான விபத்து நடந்தது


நான் வீட்டுக்கு வந்து கழிப்பறைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஜீனோ என் பின்னாலே வந்தான். என்னைத் தாண்டி கழிப்பறையை நோக்கி ஓடினான். நான் அவனுடைய கழுத்துக் கயிற்றைக் கழற்றியிருக்கவில்லை. கழிப்பறைக்குள் எலி வந்து போன சந்தேகத்தில் குறுக்குமறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த அவன் சட்டென வெளியே வந்தான். என்ன நடக்கிறது என யோசித்துக்கொண்டு நான் அவனை நோக்கி வர அவனுடைய கயிற்றை நான் மிதித்துவிட்டேன். நான் சுதாரிக்குமுன் அவன் கயிற்றை இழுத்துக்கொண்டு பின்னால் ஓட நான் புரண்டு கீழே முன்னோக்கி விழுந்தேன். பொதுவாக இப்படி விழுகையில் நான் சரியாக லேண்ட் ஆகி விடுவேன் (அடிக்கடி விழுந்து பழக்கம்). ஆனால் இம்முறை நான் கழிப்பறையின் கதவருகே இருந்ததால் என் தலை நேராகப் போய் கதவில் மோதியது. நல்ல வலுவான கதவா அடியும் செமையான வலுவுடன் இருந்தது. எந்தளவுக்கு என்றால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வீட்டு உரிமையாளருக்கே கேட்டு விட்டது. நான் கதவை மூடாததால் அவர் உள்ளே வந்து பார்த்தார். நான் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே கிடக்கிறேன்.


இடது காதுக்கு மேலிருந்து தலைக்கு நடுவில் உள்ள பகுதியில் பலமான அடி. பில் ஹியூக்ஸ் என்ற ஒரு மட்டையாளருக்கு பந்து பட்டு அவர் செத்துப் போனாரே கிட்டத்தட்ட அந்த இடம். ஆனால் ஆச்சரியமாக எனக்கு கடும் தலைவலி இருந்ததே தவிர தலைசுற்றுவது, குழப்பம், வாந்தி போன்ற உபாதைகள் இல்லை. அதனால் ஆபத்தில்லை எனத் தோன்றியது. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடமும் பேசினேன். அவரும் பயப்பட வேண்டாம் என்றார்.


வாயை முழுக்கத் திறக்க முடியவில்லை. தலைவலிக்கு மாத்திரை மட்டும் போட்டுக்கொண்டேன். காலையில் எழுந்தால் அந்த வலியும் குறைந்திருந்தது. ஆனால் ஹெல்மெட் அணியும் போது வலி, சாப்பிடும் போது வலி, அவ்வளவு தான். மோதிய வேகத்திற்கு, வலுவிற்கு கொஞ்சம் முன்னே பின்னே பட்டிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். ஆனால் ஏதோ ஒரு தற்செயல் தப்பித்துவிட்டேன்


ஒருவேளை நான் இறந்திருந்தால் இந்த வழக்கு, அதை ஒட்டிய அலைச்சல், செலவுகள், செட்டிமெண்டுக்கான கடன் என எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் பாருங்கள் காலம் என்னை அப்படித் தப்பிக்க விடுவதாக இல்லை. நீ இருந்து அனுபவித்து விட்டுப் போ எனச்சொல்லி என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது. இந்த வருடத் துவக்கத்திலே எனக்கு சிறிதும் அதிர்ஷ்டம் இல்லையென்றால் எப்படி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...