முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘அதிர்ஷ்டக்காரன்’


நேற்று அனேகமாக இந்த நேரத்தில் எனக்கு ஒரு வினோதமான விபத்து நடந்தது


நான் வீட்டுக்கு வந்து கழிப்பறைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஜீனோ என் பின்னாலே வந்தான். என்னைத் தாண்டி கழிப்பறையை நோக்கி ஓடினான். நான் அவனுடைய கழுத்துக் கயிற்றைக் கழற்றியிருக்கவில்லை. கழிப்பறைக்குள் எலி வந்து போன சந்தேகத்தில் குறுக்குமறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த அவன் சட்டென வெளியே வந்தான். என்ன நடக்கிறது என யோசித்துக்கொண்டு நான் அவனை நோக்கி வர அவனுடைய கயிற்றை நான் மிதித்துவிட்டேன். நான் சுதாரிக்குமுன் அவன் கயிற்றை இழுத்துக்கொண்டு பின்னால் ஓட நான் புரண்டு கீழே முன்னோக்கி விழுந்தேன். பொதுவாக இப்படி விழுகையில் நான் சரியாக லேண்ட் ஆகி விடுவேன் (அடிக்கடி விழுந்து பழக்கம்). ஆனால் இம்முறை நான் கழிப்பறையின் கதவருகே இருந்ததால் என் தலை நேராகப் போய் கதவில் மோதியது. நல்ல வலுவான கதவா அடியும் செமையான வலுவுடன் இருந்தது. எந்தளவுக்கு என்றால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வீட்டு உரிமையாளருக்கே கேட்டு விட்டது. நான் கதவை மூடாததால் அவர் உள்ளே வந்து பார்த்தார். நான் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே கிடக்கிறேன்.


இடது காதுக்கு மேலிருந்து தலைக்கு நடுவில் உள்ள பகுதியில் பலமான அடி. பில் ஹியூக்ஸ் என்ற ஒரு மட்டையாளருக்கு பந்து பட்டு அவர் செத்துப் போனாரே கிட்டத்தட்ட அந்த இடம். ஆனால் ஆச்சரியமாக எனக்கு கடும் தலைவலி இருந்ததே தவிர தலைசுற்றுவது, குழப்பம், வாந்தி போன்ற உபாதைகள் இல்லை. அதனால் ஆபத்தில்லை எனத் தோன்றியது. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடமும் பேசினேன். அவரும் பயப்பட வேண்டாம் என்றார்.


வாயை முழுக்கத் திறக்க முடியவில்லை. தலைவலிக்கு மாத்திரை மட்டும் போட்டுக்கொண்டேன். காலையில் எழுந்தால் அந்த வலியும் குறைந்திருந்தது. ஆனால் ஹெல்மெட் அணியும் போது வலி, சாப்பிடும் போது வலி, அவ்வளவு தான். மோதிய வேகத்திற்கு, வலுவிற்கு கொஞ்சம் முன்னே பின்னே பட்டிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். ஆனால் ஏதோ ஒரு தற்செயல் தப்பித்துவிட்டேன்


ஒருவேளை நான் இறந்திருந்தால் இந்த வழக்கு, அதை ஒட்டிய அலைச்சல், செலவுகள், செட்டிமெண்டுக்கான கடன் என எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் பாருங்கள் காலம் என்னை அப்படித் தப்பிக்க விடுவதாக இல்லை. நீ இருந்து அனுபவித்து விட்டுப் போ எனச்சொல்லி என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது. இந்த வருடத் துவக்கத்திலே எனக்கு சிறிதும் அதிர்ஷ்டம் இல்லையென்றால் எப்படி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.