முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆஸ்திரேலியாவின் ஹராகிரி



இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியாவுக்கு வென்று இந்தியாவுக்கு எதிராக தொடரை சமன் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பிருந்தது. இரண்டாவது நாள் அடித்திருந்த 63 ரன்களுடன் ஒரு 150 ரன்கள் கூட அடித்திருந்தால் போதும், அந்த இலக்கை அடைய இந்தியா தத்தளித்திருக்கும். அவர்களின் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஐம்பது சொச்சம் ரன்களுக்கு அந்த விக்கெட்டுகளை மொத்தமாக பறிகொடுத்து வெற்றிவாய்ப்பை தொலைத்தனர். (ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னதைப் போல) நாளின் முதல் ஒருமணி நேரத்தில் பெரோஷா கோடா மைதானத்தில் ஆடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது, அப்போது சற்று பொறுத்தாடினாலே போதும், மிச்ச செஷன்களில் அடித்தாடுவது சற்று சுலபமாகும். ஆஸ்திரேலியா டிராவெஸ் ஹெட்டை இழந்த பின்னர் ஸ்மித், லேபுஷேன் ஜோடியின் ஆட்டத்தின் போதும் அதை சரியாகவே செய்தது. ஆனால் அஷ்வின் ஓவர் தெ விக்கெட் வந்து ஒரு பந்தை லெங்க்தில் சற்று வேகமாக வீசிய போது அது அங்குள்ள இளகலான மண்ணில் பட்டு எகிறி திரும்பியது. லேபுஷேன் அத்துடன் ஸ்வீப் செய்வதை நிறுத்தி தடுத்தாடத் தொடங்கினார். ஸ்மித்தின் பதற்றமானார். ஏனென்றால் அவர்கள் அதுவரை அவ்வப்போது தடுப்பது, இறங்கி அடிப்பது, ஸ்வீப் செய்வது என சரளமாக ஆடி வந்தன. அந்த ஒரு பந்து அவர்கள் மனதுக்குள் தடுத்தாடுவது மற்றும் ஸ்வீப் செய்வது குறித்த நம்பிக்கையை குலைத்தது. இப்போது அவர்கள் குழம்பிப் போய் தேவையில்லாத ஷாட்களை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் கண்மூடித்தனமாக ஸ்வீப் அடித்து விக்கெட்டுகளைக் கொடுத்ததைக் காண பரிதாபமாக இருந்தது. வர்ணனையாளர்கள் திரும்பத் திரும்ப சொன்னதைப் போல ஒரு ஆஸி அணி இவ்வளவு குருட்டுத்தனமாக அவலமாக ஆடி இதுவரை நாம் பார்த்ததில்லை. அவர்களுடைய கேப்டன் கம்மின்ஸ் தான் சந்தித்த முதல் பந்தில் அடித்த அந்த கேவலமான ஸ்லாக் ஸ்வீப் அவர்கள் எந்தளவுக்கு அவநம்பிக்கையுடன், கவனமின்மையுடன் ஆடினார்கள் என்பதற்கு சான்று.
அதன் பிறகு இந்தியா நூறு சொச்சம் ரன்களை எடுப்பதைத் தடுக்க முடியும் எனும் நம்பிக்கையை ஆஸியினர் முழுக்க இழந்திருந்ததால் அவர்கள் ஆடியது ஏதோ கட்டாய திருமணத்தின் போது அழுதபடி மணப்பெண் அமர்வதைப் போல இருந்தது.
இன்று ஆஸியினர் மட்டையாடியது ஜப்பானியரின் தற்கொலை சடங்கான ஹராகிரியை ஒத்திருந்தது. வாளை எடுத்து வயிற்றைக் கிழித்து கொடூரமாக ரத்தம் வழிய வழிய சாவது அது. இது ஒரு கூட்டு ஹராகிரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...