Skip to main content

பெண் வெறுப்பு எனும் வெற்று குறிப்பான்


பெண்களின் குற்றங்களைப் பற்றி, பெண் சார்பு, பாரபட்ச திருமண, வரதட்சிணை, வன்கொடுமை தடுப்பு சட்டங்களைப் பற்றி பேசினால் பெண் வெறுப்பாளன் என முத்திரை குத்துகிறார்கள். பெண்ணைப் பிடிக்கலைன்னா அதை அறுத்துக்கோ என பேஸ்புக்கில் சில பெண்களே எழுதுகிறார்கள். (இதே மொழியை ஒரு ஆண் பயன்படுத்தினால் அவனை சிறையில் தள்ளி விடுவார்கள். சரி அது போகட்டும்!)
என்னைப் பொறுத்தவரையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை - பெண்ணியம் வளர்ந்த வந்த ஆரம்ப காலங்களில் பெண்ணியவாதிகளை பொது சமூகம் ஆண் வெறுப்பாளர்கள் என்றே அழைத்தது. அந்த கால படங்களில் இவ்வாறே பெண்ணுரிமை போராளிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெண்ணியம் இயல்பாக்கம் செய்யப்பட்டது. தாராளவாத சந்தைப் பொருளாதாரமும் சமூக இயக்கங்களும் பெண்ணிய விழுமியங்களை நவீன வாழ்வின் கட்டாயங்களில் ஒன்றாக்கின. அப்போது ஆண்களும் பெண்ணியம் பேச ஆரம்பித்து போலி பெண்ணியவாதிகள் ஆகினர். ஆண் வெறுப்பாளன் எனும் பட்டம் மறைந்தது. இதுவே இப்போது ஆண் உரிமை பேசும் ஆண்களுக்கும் நடக்கிறது. அவர்கள் 'பெண் வெறுப்பாளர்கள்' ஆகிறார்கள்.
ஆண்களோ நான் உண்மையைத் தானே பேச்னேன், நான் எப்போ பெண்ணை வெறுத்தேன் என குழம்புகிறார்கள். ஆனால் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் - ஆணியமும் ஒருநாள் இயல்பாக்கம் பெறும். அன்று பெண்கள் ஆணியம் பேசுவார்கள் (போலி பெண்ணியம் போல போலி ஆணியம் உருவாகும்)
இதையே பின்நவீனத்துவம் வெற்று குறிப்பான் என்கிறது. பெண் வெறுப்பு குறிப்பீடு இல்லாத வெற்றான ஒரு குறிப்பான். அது இப்படி மிதந்து கொண்டிருக்கும். அவ்வப்போது யார் தலையிலாவது அமரும். பிற்போக்காளன், சாதியுணர்வாளன், ஆதிக்க மனோபாவம் கொண்டவன், மதவாதி என்பன வேறு வெற்று குறிப்பான்கள். மேற்சொன்ன சங்கதிகளை வாழ்வில் பின்பற்றிக் கொண்டே ஒரு அதிகாரத்துக்காக யாரையாவது செருப்பால் அடிப்பதற்கு இந்த வெற்று குறிப்பான்கள் நமக்கு பயன்படுகின்றன. கொள்கை, கோட்பாடு, மனிதநேயம், சமத்துவம் போன்றவை வாழ்வோடு எந்த தொடர்பும் இல்லாத வெறும் சொற்கள் எனத் தோன்றுவது இந்த சூழலாலே.
எல்லாமே பேச்சளவில், எழுத்தளவில் நின்று போகிற ஆபாசமான சீரழிவான சூழலில் நாம் இன்று வாழ்கிறோம். எதை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப திரித்து பயன்படுத்தலாம் என மக்கள் நினைக்கிறார்கள். பெண்கள் பெண்ணியத்தை தரையில் கிடக்கிற சாணியை எடுத்து பிடிக்காதவர்கள் மீது அடிப்பதைப் போல அடிக்கிறார்கள். ஏன் அடிச்சே என்று கேட்டால் நான் பாதிக்கப்பட்டவள், நீதான் என்னை இப்படி அடிக்க வச்சே என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...