முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முரடர்களை ஆளும் மாபியா தலைவர்கள்

மணிப்பூர் கலவரத்தின் போது அப்பெண்களின் சகோதரரும் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். மேலும் பல குழந்தைகளும் வயசாளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் மக்களின் ‘மனசாட்சியை’ தட்டி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நிர்வாண ஊர்வலக் காணொளி மொத்த நாட்டையுமே உலுக்கிவிட்டது. ஏன்? நாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ / விவசாயக் குடி மனநிலை கொண்டவர்கள். நமக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக பெண்ணுடலே முக்கியம். அதுவும் பெண்ணின் கருப்பை, அவளுடைய கன்னிமை. ஏனென்றால் நிலத்தின் மீதான அதிகாரத்தை பெண்ணின் சந்ததி வழியாகவே நாம் நிலைநாட்ட முடியும். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் நமக்கில்லை. ஆகையால் பெண் என்பவள் பலவீனமானவள், பெண்ணுக்கு எதிரான குற்றமே ஆகக்கொடூரமான மன்னிக்க முடியாத குற்றம், அது அநாகரிகம், அநீதி என ஜல்லியடிக்கிறோம். மணிப்பூர் சம்பவத்தின் போதும் அதுவே நடந்தது - அப்பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்தை விட அவளுடைய உடலுக்கு நேர்ந்த அத்துமீறலே நம்மை அதிகம் உலுக்கியது. அதை விட அந்த நிர்வாணம், அது வெகு சாதாரணமாக அவமதிக்கப்பட்டது, அதன் அநாகரிகம் இவையே நம்மை நடுநடுங்க வைத்தது. நமக்கு கொஞ்சமாவது நீதியுணர்வு இருந்தால் கொல்லப்பட்ட அந்த ஆண்களுக்காகவும் சிறிது சிந்தித்திருப்போம். ஏனென்றால் இப்பெண்களால் இந்த காயங்களில் இருந்து வெளிவந்து வாழ முடியும், ஆனால் செத்துப் போன அவர்களின் சகோதரர்கள், தகப்பன்களால் முடியாது.

துரதிஷ்டவசமாக என்னதான நவீனமானவர்கள் என்று நாம் நம்மைப் பற்றிக் கருதினாலும் நம்மால் இந்த நிலச்சுவான்தார் / விவசாயக்குடி உளவியலில் இருந்து கடைசிவரை வெளிவர முடிவதில்லை. பெரும் அறிவுஜீவிகளில் இருந்து, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களால் கூட முடியவில்லை. அந்த மனநிலையின் முன்பே கடைசியில் பிரதமரும் பணிந்திட, அநீதிக்கு எதிராக ‘கொந்தளிக்க’ நேர்ந்தது.
அமெரிக்காவில் ஒரு கறுப்பின ஆணின் கழுத்தில் மிதித்துக் கொன்ற போது பெரும் மக்கள் கூட்டம் திரண்டு எதிர்த்துப் போராடியது. இந்தியாவில் ஒரு பெண் மீது கைவைத்தால் மட்டுமே மக்கள் சஞ்சலப்படுவார்கள். நூறு ஆண்களின் கழுத்தில் ஒரே சமயம் மிதித்துக் கொன்றாலும் கண்டுகொள்ள மாட்டோம். எந்த சிவில் உணர்வும், சமத்துவத்தில் நம்பிக்கையும் இல்லாத சுரணை கெட்டவர்களின் நாடு இது. ஜீக்குத் தெரியும் இந்தியர்களின் ‘பாஞ்சாலி சபத மனநிலையை’ சீண்டினால் ஒருவேளை நிர்பயா விசயத்தில் காங்கிரஸுக்கு நடந்ததும் பாஜகவுக்கும் இப்போது நடக்கக் கூடும் என. அதனாலே அவர் ‘குரல் கொடுத்தார்’.
இந்த பண்பாடற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஏன் நீதி, பேதி, சத்யமேவ ஜெயதே எனக் கூவுகிறோம் என்பதுதான் எனக்கு எப்போதும் மர்மமாக உள்ளது! இந்த பண்பற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ‘உங்களை நினைத்து அவமானமாக இருக்கிறது பிரதமரே’ என ஏன் கூக்குரலிடுகிறோம் என மர்மமாக உள்ளது! இதைவிட சிறந்த பொருத்தமான ஒரு பிரதமரோ ஒரு கட்சியோ நமக்கு அமைய முடியாது. எங்கள் ஊரில் சொல்வார்கள் ஈனாம்பேச்சிக்கு மரப்பட்டி கூட்டு என்று. கொடூரர்களும் மூடர்களும் நிறைந்த நம் நாட்டை ஒரு மாபியா தலைவனே ஆள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.