முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முரடர்களை ஆளும் மாபியா தலைவர்கள்

மணிப்பூர் கலவரத்தின் போது அப்பெண்களின் சகோதரரும் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். மேலும் பல குழந்தைகளும் வயசாளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் மக்களின் ‘மனசாட்சியை’ தட்டி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நிர்வாண ஊர்வலக் காணொளி மொத்த நாட்டையுமே உலுக்கிவிட்டது. ஏன்? நாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ / விவசாயக் குடி மனநிலை கொண்டவர்கள். நமக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக பெண்ணுடலே முக்கியம். அதுவும் பெண்ணின் கருப்பை, அவளுடைய கன்னிமை. ஏனென்றால் நிலத்தின் மீதான அதிகாரத்தை பெண்ணின் சந்ததி வழியாகவே நாம் நிலைநாட்ட முடியும். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் நமக்கில்லை. ஆகையால் பெண் என்பவள் பலவீனமானவள், பெண்ணுக்கு எதிரான குற்றமே ஆகக்கொடூரமான மன்னிக்க முடியாத குற்றம், அது அநாகரிகம், அநீதி என ஜல்லியடிக்கிறோம். மணிப்பூர் சம்பவத்தின் போதும் அதுவே நடந்தது - அப்பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்தை விட அவளுடைய உடலுக்கு நேர்ந்த அத்துமீறலே நம்மை அதிகம் உலுக்கியது. அதை விட அந்த நிர்வாணம், அது வெகு சாதாரணமாக அவமதிக்கப்பட்டது, அதன் அநாகரிகம் இவையே நம்மை நடுநடுங்க வைத்தது. நமக்கு கொஞ்சமாவது நீதியுணர்வு இருந்தால் கொல்லப்பட்ட அந்த ஆண்களுக்காகவும் சிறிது சிந்தித்திருப்போம். ஏனென்றால் இப்பெண்களால் இந்த காயங்களில் இருந்து வெளிவந்து வாழ முடியும், ஆனால் செத்துப் போன அவர்களின் சகோதரர்கள், தகப்பன்களால் முடியாது.

துரதிஷ்டவசமாக என்னதான நவீனமானவர்கள் என்று நாம் நம்மைப் பற்றிக் கருதினாலும் நம்மால் இந்த நிலச்சுவான்தார் / விவசாயக்குடி உளவியலில் இருந்து கடைசிவரை வெளிவர முடிவதில்லை. பெரும் அறிவுஜீவிகளில் இருந்து, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களால் கூட முடியவில்லை. அந்த மனநிலையின் முன்பே கடைசியில் பிரதமரும் பணிந்திட, அநீதிக்கு எதிராக ‘கொந்தளிக்க’ நேர்ந்தது.
அமெரிக்காவில் ஒரு கறுப்பின ஆணின் கழுத்தில் மிதித்துக் கொன்ற போது பெரும் மக்கள் கூட்டம் திரண்டு எதிர்த்துப் போராடியது. இந்தியாவில் ஒரு பெண் மீது கைவைத்தால் மட்டுமே மக்கள் சஞ்சலப்படுவார்கள். நூறு ஆண்களின் கழுத்தில் ஒரே சமயம் மிதித்துக் கொன்றாலும் கண்டுகொள்ள மாட்டோம். எந்த சிவில் உணர்வும், சமத்துவத்தில் நம்பிக்கையும் இல்லாத சுரணை கெட்டவர்களின் நாடு இது. ஜீக்குத் தெரியும் இந்தியர்களின் ‘பாஞ்சாலி சபத மனநிலையை’ சீண்டினால் ஒருவேளை நிர்பயா விசயத்தில் காங்கிரஸுக்கு நடந்ததும் பாஜகவுக்கும் இப்போது நடக்கக் கூடும் என. அதனாலே அவர் ‘குரல் கொடுத்தார்’.
இந்த பண்பாடற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஏன் நீதி, பேதி, சத்யமேவ ஜெயதே எனக் கூவுகிறோம் என்பதுதான் எனக்கு எப்போதும் மர்மமாக உள்ளது! இந்த பண்பற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ‘உங்களை நினைத்து அவமானமாக இருக்கிறது பிரதமரே’ என ஏன் கூக்குரலிடுகிறோம் என மர்மமாக உள்ளது! இதைவிட சிறந்த பொருத்தமான ஒரு பிரதமரோ ஒரு கட்சியோ நமக்கு அமைய முடியாது. எங்கள் ஊரில் சொல்வார்கள் ஈனாம்பேச்சிக்கு மரப்பட்டி கூட்டு என்று. கொடூரர்களும் மூடர்களும் நிறைந்த நம் நாட்டை ஒரு மாபியா தலைவனே ஆள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...