முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியுசிலாந்த் எனும் சீரியல் கில்லர் அணி


நான் நியுசிலாந்தின் விசிறி அல்லன். ஆனால் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 388 இலக்கை விரட்டிப் போய் 383ஐ எட்டிய அவர்கள் ஆடிய ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன். இந்த உலகக்கோப்பையின் சிறந்த போட்டி அதுதான். அதுவும் 32வது ஓவரில் டாம் லேதம் அவுட் ஆகாமல் ரச்சின்னுக்கு துணை கொடுத்து 40வது ஓவர் வரை நின்றிருந்தால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்கள் தேவை எனும் நிலை வந்திருக்கும். தேவையில்லாமல் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு அவர் போனதில் ஆட்டத்தின் நிலை மாறியது. ஆனாலும் நீஷம் ஒரு மரண இன்னிங்ஸ் அடித்தாரே அதற்கு ஈடே இல்லை. அந்த காலத்து குளூசினரை நினைவுபடுத்தினார்.
நியுசிலாந்தின் மட்டையாட்ட வரிசையில் உள்ள ஒரெ திறமையாளர் ரச்சின் ரவீந்திரா. (அவர் நேற்று அபாரமான சதத்தை அடித்தார்.) மிச்ச வீரர்கள் மூன்று நான்கு ஷாட்களுக்கு மேல் ஆடத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுடைய சிறப்பு தனிச்சிறப்பு எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டி கூலாக மட்டையாடுவார்கள் ஆடுவார்கள் என்பது. நேற்றைய போட்டியிலும் பெர்குஸனுக்கு காயம் ஏற்படாமல், இரண்டு கேட்சுகளையும் ரச்சினும் மிச்சலும் விடாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை 340க்குள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். நிச்சயமாக ஜெயித்திருப்பார்கள். இவ்வளவு துரதிஷ்டம் இருந்தாலும் கவலைப்படாமல் ஆடிய ஆட்டம் No Country for Oldmen படத்தின் சீரியல் கில்லரான ஆண்டன் சிகரை நினைவுபடுத்தியது.
இந்த உலகக்கோப்பையின் சிறந்த அணி இந்தியாவுக்கு அடுத்த படியாக நியுசிலாந்துதான்; திறமையை விட நிதானமே பெரிது என நிரூபிக்கிறார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.