முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்த்துகள்



நான் சென்னையில் இருந்திருந்தால் இந்த எழுத்தாளர்கள் ஆவணப் பட விழாவுக்கு நிச்சயமாக சென்று மகிழ்ந்திருப்பேன். ஒரு இலக்கிய விட்டேந்தித்தனம் இப்போது வந்துவிட்டாலும் மகிழ்ந்திருப்பேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று கூட, உரையாட நல்ல வாய்ப்பு. திருவுருவாக்கத்திற்கும் தான் - இலக்கிய சூழல் நிலைக்க நம் முன்னோடிகளை திருவுருவாக்குவதே தீர்வு. சும்மா விமர்சித்து ஓயாமல் சண்டையிடுவதால் தான் இப்படி பிச்சையெடுக்கும் நிலையில் படைப்பாளிகள் இங்கிருக்கிறார்களோ? பிரான்ஸில் முன்பு நிலைமை இப்படி இருந்ததென சொல்வார்கள். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் மோதல், சாதல், காதல் எல்லாம் இராது. இந்திய ஆங்கில எழுத்தாளர்களும் அப்படித்தான் - சண்டை போடவே மாட்டார்கள். எப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியிலே குடியிருப்பதாலோ என்னவோ நாவலை வெளியிட்டு புரொமோஷனுக்கு "எட்ரா வண்டிய" எனக் கிளம்பும் வரை கைப்புள்ள இருக்கிற இடம் தெரியாது. தமிழில் துரதிஷ்டவசமாக நீண்ட காலமாக பிரெஞ்சு சூழல் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் மாறுவது, சுயவளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நம் புத்தகங்கள் பரவலாக மக்களிடம் போக வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள ஜெ.ஸி.பி மாதிரியான விருதுகள் தமிழிலும் தோன்ற வேண்டும். இங்கு இல்லாத பணமா? அதற்கு திருவுருவாக்கம் அவசியம். 

இந்த ஆவணப்படத் திருவிழாவில் முதல்வரும் அமைச்சர்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும். பிக்பாஸில் கமல் செய்வதைப் போல முதல்வர் தினமும் ஒரு நூல் விதம் 100 நாட்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்து காணொளியாக வெளியிடலாம். அமைச்சர்களும் செய்யலாம். அதற்கு பெரிய படிப்பாளியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை  அத்தகைய ஆதரவே இலக்கியத்தை பொதுஜனத்திடம் கொண்டு சேர்க்கும்.

அதுவரை நம்மிடம் உள்ள கட்டமைப்பை வைத்தே இலக்கிய சூழலை வளர்க்க வேண்டி உள்ளது. அதையே மனுஷ்யபுத்திரன் செய்துவருகிறார். அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!

பின்குறிப்பு: ஏதோ சச்சரவு, சர்ச்சை என்றார்கள். ஒரு இலக்கிய அந்நியனாக இருக்கும் என் கண்ணில் இயல்பாகவே அது படவில்லை. யார் வீட்டு எழவோ பாய் போட்ட எழவோ என்று இருந்துவிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...