முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து எனும் சண்டைக் கலை


நேற்றைய அபுனைவு வகுப்பே இறுதியானது. அதில் எப்படி மூன்றே படிகளில் ஒரு வலுவான வாதத்தை, கட்டுரையின் கட்டுமானத்தை உருவாக்கலாம் என்று சசியிடம் செய்து காட்டினேன். அவரையே சொல்ல வைத்து ஐந்து நிமிடங்களில் அது ஒரு முழுமையான கட்டுரையாவது நிகழ்த்தியே பார்த்தோம். அப்போது அவர் சொன்னார், "நாம் வாசகர்களை செட்டிங் பண்றோம்" என்று. ஆம், முழுக்க உண்மையே. வாசகர்கள் வேறு எங்கும் நழுவி விடாமல் நாம் வரைந்த கோட்டுக்குள் நிறுத்தி பூட்டுவதே கட்டுரை எழுத்தின் அடிப்படை. அவர்கள் எங்கெல்லாம் பழுதுகளைக் கண்டுபிடிப்பார்கள் என உணர்ந்து அதற்கான இடைவெளிகளையும் தர்க்கம் வழியாக மூடி விட வேண்டும். அவ்விதத்தில் இது குத்துச்சண்டை, சிலம்பம், களரியைப் போன்றது. கட்டுரைக்குள் நாமும் எதிராளியும் எப்போதுமே இருக்கிறோம். அவர் அசையும் முன்பே நாம் அசைவதாலே, அவரை நம் அடவுகளால் கட்டுப்படுத்துவதாலே நாம் எழுத்தாளர்.

கட்டுரையில் ஒரு கட்டத்தில் எதிர்பாராத ஒரு எதிர்பாரா கோணத்திற்கு நம் விவாதங்கள் பயணிக்கும். இதை நான் திட்டமிடவே இல்லையே என வியப்போம். அது அந்த எதிராளி முழுக்க மறைந்து நாம் அவரது கோணத்தில் சிந்தித்து அதற்கு ஏற்ப சிந்தனையை வேறொரு இடத்தில் நகர்த்துவதாலே. அது எழுத்தில் ஒரு சுகமான பகுதி. ஒரு கண்டுபிடிப்பு. உருமாற்றம். வளர்ச்சி. அதற்கு எழுத்துக்குள் முன் எண்ணங்கள் இன்றி செயல்பட முடிய வேண்டும்.

இறுதி வகுப்பு இப்படி சுவாரஸ்யமாக முடிந்தது.

நான் தினமும் புனைவெழுதுவதால் ஒரு மூடுண்ட மனநிலைக்குப் போய் விடுகிறேன். அதிகமாக பயணிக்கவோ எழுதவோ நான் விரும்பவில்லை. அப்படிப் பேசும் போது எதிர்த்தரப்பு கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே தான் இருக்கிறார்கள். அதனாலே நான் மனதளவில் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறேன். இதற்கு விடுதலை அளிப்பது எழுத்துக்கலை வகுப்புகளே. மாணவர்கள், இளம் படைப்பாளிகளுடன் உறவாட, நட்பை உருவாக்க, கண்ணாடிக் கூண்டை விட்டு வெளியே வர இது உதவுகிறது.

அதனால் அடுத்து நாவல் வகுப்பு விரைவில் ஆரம்பமாகும். விருப்பமுள்ளோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...