முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து எனும் சண்டைக் கலை


நேற்றைய அபுனைவு வகுப்பே இறுதியானது. அதில் எப்படி மூன்றே படிகளில் ஒரு வலுவான வாதத்தை, கட்டுரையின் கட்டுமானத்தை உருவாக்கலாம் என்று சசியிடம் செய்து காட்டினேன். அவரையே சொல்ல வைத்து ஐந்து நிமிடங்களில் அது ஒரு முழுமையான கட்டுரையாவது நிகழ்த்தியே பார்த்தோம். அப்போது அவர் சொன்னார், "நாம் வாசகர்களை செட்டிங் பண்றோம்" என்று. ஆம், முழுக்க உண்மையே. வாசகர்கள் வேறு எங்கும் நழுவி விடாமல் நாம் வரைந்த கோட்டுக்குள் நிறுத்தி பூட்டுவதே கட்டுரை எழுத்தின் அடிப்படை. அவர்கள் எங்கெல்லாம் பழுதுகளைக் கண்டுபிடிப்பார்கள் என உணர்ந்து அதற்கான இடைவெளிகளையும் தர்க்கம் வழியாக மூடி விட வேண்டும். அவ்விதத்தில் இது குத்துச்சண்டை, சிலம்பம், களரியைப் போன்றது. கட்டுரைக்குள் நாமும் எதிராளியும் எப்போதுமே இருக்கிறோம். அவர் அசையும் முன்பே நாம் அசைவதாலே, அவரை நம் அடவுகளால் கட்டுப்படுத்துவதாலே நாம் எழுத்தாளர்.

கட்டுரையில் ஒரு கட்டத்தில் எதிர்பாராத ஒரு எதிர்பாரா கோணத்திற்கு நம் விவாதங்கள் பயணிக்கும். இதை நான் திட்டமிடவே இல்லையே என வியப்போம். அது அந்த எதிராளி முழுக்க மறைந்து நாம் அவரது கோணத்தில் சிந்தித்து அதற்கு ஏற்ப சிந்தனையை வேறொரு இடத்தில் நகர்த்துவதாலே. அது எழுத்தில் ஒரு சுகமான பகுதி. ஒரு கண்டுபிடிப்பு. உருமாற்றம். வளர்ச்சி. அதற்கு எழுத்துக்குள் முன் எண்ணங்கள் இன்றி செயல்பட முடிய வேண்டும்.

இறுதி வகுப்பு இப்படி சுவாரஸ்யமாக முடிந்தது.

நான் தினமும் புனைவெழுதுவதால் ஒரு மூடுண்ட மனநிலைக்குப் போய் விடுகிறேன். அதிகமாக பயணிக்கவோ எழுதவோ நான் விரும்பவில்லை. அப்படிப் பேசும் போது எதிர்த்தரப்பு கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே தான் இருக்கிறார்கள். அதனாலே நான் மனதளவில் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறேன். இதற்கு விடுதலை அளிப்பது எழுத்துக்கலை வகுப்புகளே. மாணவர்கள், இளம் படைப்பாளிகளுடன் உறவாட, நட்பை உருவாக்க, கண்ணாடிக் கூண்டை விட்டு வெளியே வர இது உதவுகிறது.

அதனால் அடுத்து நாவல் வகுப்பு விரைவில் ஆரம்பமாகும். விருப்பமுள்ளோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.