Skip to main content

லவ்வர்



எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் காட்சியைப் பார்த்ததும் ரொம்ப கிரிஞ்சாக 96 போல இருக்கும் போல என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் மணிகண்டன் பாத்திரத்தின் நிஜ சொரூபத்தைக் காட்டியதும் செமையான படம் என உட்கார்ந்து விட்டேன். காதலை மட்டுமல்ல எல்லா உறவுகளையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளும், தன்னுடைய போதாமைகளை உறவின் ஆறுதலில் கடப்பதற்காக முயன்று ஏமாற்றும் கொள்ளும் ஆணின் அகச்சித்திரம் நன்றாக இருந்தது. கூடவே அவனுக்கு ஈடுகொடுத்து தடுமாறும், துன்பப்படும், பிறகு விட்டுவிடலாம் என நினைக்கும் போதும் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கருதி குழப்பி மேலும் காயப்படுத்தும், காயப்படும் அந்த பெண்ணின் பாத்திரம். தெளிவாக யோசித்து இரு பாத்திரங்களையும் உருவாக்கி அவர்களுக்காக மேலும் மேலும் கதையை சிக்கலாக்கிக் கொண்டு திரும்ப வர முடியாத அவல நிலைக்கு அவர்களை நகர்த்தியதும் பிடித்திருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்கள், கெர்ள்களின் உலகில் இப்படியான நிஜ மனிதர்களின் பார்க்கவே கிடைப்பதில்லை. அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் போது நாயகன் மெதுவாக தூங்கி எழுந்து வர வேலைக்காரி பார்த்துவிட்டு கதற என்ன செய்வதென நிற்கும் இடமும் சிறப்பு. வேறு இயக்குநர்கள் என்றால் நாயகனை கதறி அழுது மாரில் அடித்து களேபரம் பண்ண வைத்திருப்பார்கள். இங்கு நாயகனோ ஆஸ்பத்திரியில் அம்மாவைப் பார்க்க வரும் பொறுப்பில்லாத அப்பாவைப் பார்த்து கத்தி தன் கோபத்தை தணித்துக் கொள்கிறான். காதலியை தேவடியா எனத் திட்டும் இடம் கூட சிறப்பு - எனக்குத் தெரிந்து மிக சாதாரணமாக ஆண்களால் பிரயோகிக்கப்படும் சொல். ஒரு பெண் மறுத்தவுடனே அவளைக் குறித்த ஐயம் வருவதும், தேவடியா என்பதும் நம் பண்பாட்டு உளவியலின் மையம். அதையும் சிறப்பாக காட்டியிருந்தார்கள்.
பிரிவை ஆண்களால் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள இயலாதது அது அவர்களுடைய ஈகோவுடன் சம்மந்தப்பட்டது என்பதால் தான் - நவீன உலகில் ஆணுக்கென்று நிலம் சார்ந்த உரிமையோ சமூக அந்தஸ்தோ இல்லை. நகரங்களில் அவனுக்கான சமூக அந்தஸ்து இல்லை. அழகாக சேலை அணிந்து வந்தாலோ, நவீன ஆடையில் ஜிங்கு ஜிங்கென நடந்தாலோ ஊரே ஒரு பெண்ணைக் கொண்டாடும். அவள் வேலை பார்த்து சம்பாதித்தால் இன்னும் அதிகமாக கொண்டாடும். (கூடவே தேவடியா என்றும் கூப்பிடும் என்பது வேறு பிரச்சினை.) ஆனால் ஆணுக்கு பணத்தையும் சொத்தையும் கடந்து எந்த அங்கீகாரமும் இல்லை. முன்பு இவையிரண்டும் மரபுவழியாக கிடைத்தது. இன்று அதற்காக அவன் ஆயுள் பூராவும் உழைத்தாலும் சுலபத்தில் கிடைப்பதில்லை. அப்போது அவனுக்கு பெண்ணுடலை உடமையாக்குவது தான் ஒரே வழியாக இருக்கிறது. ஒரு உறவை முறிப்பது அவனுடைய ஆண்மையை முறிப்பதைப் போல இருக்கிறது. ஒரு பெண்ணால் தன் உடலின் ஊடாக புது உலகம், உறவுகள் என நகர முடியும். தம் தோற்றத்தை மேம்படுத்துவது, சின்னச்சின்ன விசயங்களை மாற்றுவது என. அவர்களுக்கு இது தன்னிலை சார்ந்த பெரிய சிக்கல் அல்ல. நம் சமூகத்தில் ஆணுக்கு உடலே இல்லை (குறியீட்டு அளவில்). மனம் மட்டும் தான். அதனாலே அவன் பெண்ணின் கவனம் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் எனக் கிடந்து அடித்துக்கொள்கிறான். பொறாமையில், பாதுகாப்பின்மையில் தவிக்கிறான். வன்முறையை கையாள்கிறான். போதையில் சிக்கி கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் அழிகிறான். “நான் ஒன்றுமே இல்லை, யாருமே எனக்கு இல்லை” எனும் அங்கலாய்ப்பு நன்றாக இப்படத்தில் வந்துள்ளது. வேறெந்த தமிழ் சினிமாவிலும் இதைப் பார்த்த நினைவில்லை.
ஒரே பிரச்சினை கிளைமேக்ஸில் நாயகனோ நாயகியோ முழுமையாக மாறவில்லை என்பதுதான். அவர்கள் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வில் பெற்ற பாடத்தை, முதிர்ச்சியால், அதனால் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டியிருந்தால் நிறைவு ஏற்பட்டிருக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...