முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12த் பெயில்


 
 

அதில் என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் படம் முடியும் போது அது வாழ்க்கையைப் பற்றியோ விழுமியங்களைப் பற்றியோ ஒன்றுமே சொல்வதில்லை. .பி.எஸ் தேர்வில் வெல்வது எவ்வளவு கடினம், அதற்கு எத்தனை பேர்கள் முயல்கிறார்கள் என சொல்ல பத்து நிமிடம் போதுமே. அப்புறம் எனக்கு வேறொரு கேள்வியும் எழுந்தது - இவ்வளவு பயங்கரமான .பி.எஸ் தேர்வில் எப்படி அண்ணாமலை - சின்ன வரலாற்றுத் தகவல் கூட தெரியாமல் மேடைகளில் தவறாகப் பேசும் அண்ணாமலை -எப்படி வென்றார்? அவரே ஜெயிக்க முடியுமெனில் பத்து லட்சம் பேர்களில் இருபது பேர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற தேர்வு என ஏன் இந்த படத்தில் சொல்கிறார்கள்? மிகத்தீவிரமான ஒழுக்கமும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார்கள். ஆனால் சில நேர்முகங்களில் அண்ணாமலை பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்  சொல்லும் விபரங்கள் வித்தியாசமாக உள்ளன - அவர் பகலில் தூங்கி எழுவதே மாலை மூன்று மணிக்குத் தான். இரவில் போதை காளானை எடுத்துக்கொள்கிறார். இப்பழக்கம் அவருக்கு பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டு விட்டது. இப்படியான ஒருவராலே .பி.எஸ் ஆக முடியுமெனில் “12த் பெயிலில்ஏன் இன்னொரு விதமாக சொல்கிறார்கள்? இதில் யார் சொல்வது பொய்? எனக்கு இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது!

வு மில்லில் கஷ்டப்பட்டு இரவில் 2 மணிநேரம் மட்டும் தூங்கி உழைத்து வென்றவர்கள், நேர்மைக்காக வாழ்பவர்கள் இன்று இருக்கிறார்களா என்றே சந்தேகம் உள்ளது. .ஸி.ஆரில் இந்த .பி.எஸ், ..எஸ்கள் தாம்சம்பாதித்தபல நூறு கோடிகளைக் கொண்டு கட்டிய பங்களாக்கள் உள்ளன என ஜூ.வியில் ஒரு ரிப்போர்ட் படங்களுடன் வந்தது. நேர்மையாளர்கள் இவர்களிடம் தான் சலூட் அடித்து நிற்கிறார்கள். நேர்மையான .பி.எஸ் அதிகாரியாகி நேர்மையற்ற கீழதிகாரிகளைத் திருத்தப் போவதாக “12த் பெயிலின்நாயகன் சொல்கிறான் - எனில் அவருக்கு மேலே உள்ள சீனியர் அதிகாரிகள், அமைச்சர்களை யார் திருத்துவது? அவரைப் போன்ற ஊழல்வாதி .பி.எஸ்களை யார் திருத்துவது? ஊழல் ஒரு பொருளாதார அமைப்பின் பிரச்சினை. அதற்குத் தீர்வு நேர்மை என்பதைப் போன்ற அபத்தம் வேறுண்டா? இந்த படம் இவ்வளவு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே சினிமா நம்மை எப்படி தொடர்ந்து ஏமாற்றுகிறது என்பதற்கு அத்தாட்சி.


எனக்கு என்னமோ அண்ணாமலை தான் நம் காலத்தின் மிகப்பெரியநம்பிக்கை நாயகன்எனத் தோன்றுகிறது. அவரைப் போன்றவர்கள் எப்படி சில ஆண்டுகளிலே .பி.எஸ் ஆகி முதல்வருக்கும், பெரிய தலைவர்களுக்கு ஒற்றறிந்து கொடுத்து நம்பிக்கையைப் பெற்று, எதிரிகளின் பலான காணொளிகளைப் பதிவு பண்ணி மிரட்டி அதிகாரத்தை நிறுவி, பிறகு அப்பதவியையும் விட்டு ஒரு மாநிலத்தின் தலைவர் ஆகிறார்கள் என யாராவது படம் எடுத்தால் அபாரமாக இருக்கும். அந்த படத்துக்குஹலோ பிரதர்எனத் தலைப்பு வைக்கலாம்.

 

பின்குறிப்பு: இப்படம் உண்மைக்கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என எனக்கு ஏற்கனவே தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.