முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12த் பெயில்


 
 

அதில் என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் படம் முடியும் போது அது வாழ்க்கையைப் பற்றியோ விழுமியங்களைப் பற்றியோ ஒன்றுமே சொல்வதில்லை. .பி.எஸ் தேர்வில் வெல்வது எவ்வளவு கடினம், அதற்கு எத்தனை பேர்கள் முயல்கிறார்கள் என சொல்ல பத்து நிமிடம் போதுமே. அப்புறம் எனக்கு வேறொரு கேள்வியும் எழுந்தது - இவ்வளவு பயங்கரமான .பி.எஸ் தேர்வில் எப்படி அண்ணாமலை - சின்ன வரலாற்றுத் தகவல் கூட தெரியாமல் மேடைகளில் தவறாகப் பேசும் அண்ணாமலை -எப்படி வென்றார்? அவரே ஜெயிக்க முடியுமெனில் பத்து லட்சம் பேர்களில் இருபது பேர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற தேர்வு என ஏன் இந்த படத்தில் சொல்கிறார்கள்? மிகத்தீவிரமான ஒழுக்கமும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார்கள். ஆனால் சில நேர்முகங்களில் அண்ணாமலை பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்  சொல்லும் விபரங்கள் வித்தியாசமாக உள்ளன - அவர் பகலில் தூங்கி எழுவதே மாலை மூன்று மணிக்குத் தான். இரவில் போதை காளானை எடுத்துக்கொள்கிறார். இப்பழக்கம் அவருக்கு பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டு விட்டது. இப்படியான ஒருவராலே .பி.எஸ் ஆக முடியுமெனில் “12த் பெயிலில்ஏன் இன்னொரு விதமாக சொல்கிறார்கள்? இதில் யார் சொல்வது பொய்? எனக்கு இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது!

வு மில்லில் கஷ்டப்பட்டு இரவில் 2 மணிநேரம் மட்டும் தூங்கி உழைத்து வென்றவர்கள், நேர்மைக்காக வாழ்பவர்கள் இன்று இருக்கிறார்களா என்றே சந்தேகம் உள்ளது. .ஸி.ஆரில் இந்த .பி.எஸ், ..எஸ்கள் தாம்சம்பாதித்தபல நூறு கோடிகளைக் கொண்டு கட்டிய பங்களாக்கள் உள்ளன என ஜூ.வியில் ஒரு ரிப்போர்ட் படங்களுடன் வந்தது. நேர்மையாளர்கள் இவர்களிடம் தான் சலூட் அடித்து நிற்கிறார்கள். நேர்மையான .பி.எஸ் அதிகாரியாகி நேர்மையற்ற கீழதிகாரிகளைத் திருத்தப் போவதாக “12த் பெயிலின்நாயகன் சொல்கிறான் - எனில் அவருக்கு மேலே உள்ள சீனியர் அதிகாரிகள், அமைச்சர்களை யார் திருத்துவது? அவரைப் போன்ற ஊழல்வாதி .பி.எஸ்களை யார் திருத்துவது? ஊழல் ஒரு பொருளாதார அமைப்பின் பிரச்சினை. அதற்குத் தீர்வு நேர்மை என்பதைப் போன்ற அபத்தம் வேறுண்டா? இந்த படம் இவ்வளவு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே சினிமா நம்மை எப்படி தொடர்ந்து ஏமாற்றுகிறது என்பதற்கு அத்தாட்சி.


எனக்கு என்னமோ அண்ணாமலை தான் நம் காலத்தின் மிகப்பெரியநம்பிக்கை நாயகன்எனத் தோன்றுகிறது. அவரைப் போன்றவர்கள் எப்படி சில ஆண்டுகளிலே .பி.எஸ் ஆகி முதல்வருக்கும், பெரிய தலைவர்களுக்கு ஒற்றறிந்து கொடுத்து நம்பிக்கையைப் பெற்று, எதிரிகளின் பலான காணொளிகளைப் பதிவு பண்ணி மிரட்டி அதிகாரத்தை நிறுவி, பிறகு அப்பதவியையும் விட்டு ஒரு மாநிலத்தின் தலைவர் ஆகிறார்கள் என யாராவது படம் எடுத்தால் அபாரமாக இருக்கும். அந்த படத்துக்குஹலோ பிரதர்எனத் தலைப்பு வைக்கலாம்.

 

பின்குறிப்பு: இப்படம் உண்மைக்கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என எனக்கு ஏற்கனவே தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...