முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பரகலா பிரபாகரின் பேட்டி

நிர்மலா சீத்தாராமனின் கணவரும் பொருளாதார நிபுணரும்  மற்றும் எழுத்தாளருமான பரகலா பிரபாகரை கரண் தாப்பர் எடுத்த பேட்டி ரொம்ப ஜாலியாக இருந்தது. பளார் பளாரென அடிப்பதைப் போன்ற கருத்துக்கள். அவர் ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்தவை இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நடக்கப் போவதாக எச்சரிக்கிறார். முதல் நிலையில் நைச்சியமாகப் பேசி வழிக்கு கொண்டு வரப்பார்ப்பது, அடுத்து தனிமைப்படுத்துவது, எச்சரிப்பது, கடைசியாக வெளியேற்றுவது. இந்த நிலைகளில் முதலிரண்டு நிலைகளில் இந்தியா இப்போது இருப்பதாக கூறுகிறார். சரியான பார்வை.

ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வை தான்; அவர் கவனிக்காமல் விடும் ஒன்று உண்டு  - பாஜகவின் லட்சியம் இஸ்லாமியரை ஒடுக்குவது அல்ல. அவர்களுக்கு இஸ்லாமியர் பொருட்டே அல்ல. அவர்கள் இந்து மதத்தை அரசியல்படுத்தி புறவயப்படுத்த விரும்புகிறார்கள். கடவுளைக் கொன்று அவரிடத்தில் தலைவர்களையும், மத் நம்பிக்கைகளை ஒழித்து அவற்றின் இடத்தில் தம் அரசியல் கொள்கைகளையும் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆக பாஜக முதலில் ஒழிக்க முயல்வது தீவிரமான இந்துக்களைத் தான். அவர்களின் நம்பிக்கையைத் தான். மேற்சொன்ன விசயங்களை இஸ்லாமியரோ கிறித்துவர்களோ பண்ணினால் பாஜக அவர்களை அள்ளி அவரணைத்துக் கொள்ளும். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் சிறுபான்மையினருக்கு இடமளிக்காதது மேம்போக்கான ஒன்றே - எல்லா கட்டங்களிலும் சிறுபான்மையினருடன் இணக்கமாக போக பாஜகவால் முடியும் - தமது நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படும் பட்சாத்தில். எங்களுடைய ஒரே தெய்வம் பாரத பிரதமர், எங்களுடைய ஒரே நம்பிக்கை பாஜகவின் கொள்கை என அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில். இப்போதைய யுத்தம் முற்போக்குக்கும் பிற்போக்குக்கும் நடுவில் அல்ல. கடவுளுக்கும் கடவுளற்ற தலைவர்கள், மத குருமார்களுக்கும் இடையிலே. 

ஹிட்லரும் இதையே தான் ஜெர்மனியில் செய்தார். அவர் இனப்பற்றை அரசியல் பற்றாக உருமாற்றினார். மதம், இனம், குடும்பம் ஆகிய உறவுநிலைகளை தலைவர், கட்சி, கொள்கை என உருமாற்றிக் காட்டினார். இதுவே ஆக ஆபத்தான நிலை. 

பிரபாகர் கணிப்பதைப் போல பாஜக இந்தி பெல்ட்டில் 60% இடங்களை இழந்தால், தென்னிந்தியாவில் துடைத்து எறியப்பட்டால் அல்லது அதிகாரத்தையே இழந்தால் அது மகிழ்ச்சியான சேதியாகவே இருக்கும். ஆனால் இப்போதைக்கு அது ஒரு கனவைப் போல இருக்கிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.