ஒரு கான்ஸ்டபிள் தேநீர்க் கடைக்குள் அவசரமாக நுழைந்து டீ மாஸ்டரிடம் தோளைத் தொட்டு பிரியமாக சிரிக்க சிரிக்க எதையோ கேட்கிறார். உடல்மொழியில் ஒரு குழைவு. அப்படியே ஒரு கையால் அன்றைய கலக்ஷனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றொரு கையால் துடைத்துக் கொண்டு பைக்கில் ஏறி சிரித்தபடி கிளம்புகிறார். அங்கு அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி கவலையில்லை. அவரது மனிதநேயமும் பண்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஊழல் என்றவுடன், ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவுடன் வருகிற குற்றவுணர்வுடன் ஒரு சகோதரத்துவம், அன்பு, சமத்துவமும் கூடவே வந்துவிடுகிறது. தான் அந்த மிகப்பெரிய அரசு எந்திரத்தின் பகுதியெனினும் தானும் பணத்தின் தேவையுள்ள ஒரு சாதாரண மனிதன் எனும் உணர்வு. ஊழல் அதிகார வர்க்கத்தை சாமானியன் ஆக்குகிறது.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்