ஒரு கான்ஸ்டபிள் தேநீர்க் கடைக்குள் அவசரமாக நுழைந்து டீ மாஸ்டரிடம் தோளைத் தொட்டு பிரியமாக சிரிக்க சிரிக்க எதையோ கேட்கிறார். உடல்மொழியில் ஒரு குழைவு. அப்படியே ஒரு கையால் அன்றைய கலக்ஷனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றொரு கையால் துடைத்துக் கொண்டு பைக்கில் ஏறி சிரித்தபடி கிளம்புகிறார். அங்கு அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி கவலையில்லை. அவரது மனிதநேயமும் பண்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஊழல் என்றவுடன், ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவுடன் வருகிற குற்றவுணர்வுடன் ஒரு சகோதரத்துவம், அன்பு, சமத்துவமும் கூடவே வந்துவிடுகிறது. தான் அந்த மிகப்பெரிய அரசு எந்திரத்தின் பகுதியெனினும் தானும் பணத்தின் தேவையுள்ள ஒரு சாதாரண மனிதன் எனும் உணர்வு. ஊழல் அதிகார வர்க்கத்தை சாமானியன் ஆக்குகிறது.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்