முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" - பிரவீணாவின் காதல் - பாலு

அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம்.

கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது.

பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா.

“விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர். 

“என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள்.

“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான்.

அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்னை சித்தப்பாதான் எடுத்து வளர்த்தாரு. அஞ்சு வயசு வரை ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் இருந்தேன். அவரு என் சித்தப்பாவான்னே தெரியல. அப்படித்தான் கூப்பிடச் சொன்னாங்க. வீட்டில மழை அதிகமா கொட்டுறப்போதான் நான் அதிகம் அடி வாங்குவேன். நான் ஏதாவது தப்பு பண்ணினா என்னைக் கூப்பிட்டு வெச்சு என் அம்மா ஒரு தேவடியான்னு திரும்பத் திரும்பச் சொல்லுவாரு. என்னைக் குட்டித் தேவடியான்னு கூப்பிடுவாரு. என்னைக் கிள்ளி அழ வைப்பாரு. நான் அழுறதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். என்னை இழுத்து சூடு வைப்பாரு. மழைல நிறைய நாள் முட்டி போட்டு நின்னிருக்கேன். அப்புறம் மெல்ல மெல்ல அதை நான் உள்ளுக்குள்ளே ரசிக்க ஆரம்பிச்சேன். அவரு திட்டணுமுன்னே ஏதாவது பண்ணுவேன். வயசுக்கு வந்த பிறகு ஒருநாள் என்னை என் அறைக்குள்ள தள்ளி பலாத்காரம் பண்ணினார். பிறகு எப்போலாம் என்னை நோக்கி கத்துறாரோ அப்போலாம் நான் உள்ளுக்குள்ள் ஈரமாயிடுவேன். என் கைகள் நடுங்கும். உடம்பு சூடாகும். நான் அறைக்குப் போய் தனியா அவருக்காகக் காத்திருப்பேன். நான் அனுமதிச்சாலும்கூட அவர் நான் அழணுமுன்னு விரும்புவார். அதுக்காக என்னை அடிப்பார். என் அம்மாவைப் பத்தி மோசமா பேசுவார். நான் அழுவேன். அழ அழ இன்னும் அதிகமா எக்ஸைட் ஆவேன். என் உடம்பு அவருக்காக ஏங்கும். ஒருநாள் அவர் என்னை பலாத்காரம் பண்றதை சித்தி பார்த்துட்டு, எதுவும் பேசாம என்னை ஹோம்ல கொண்டுபோய் சேர்த்துட்டாங்க” என்றாள்.

அவளின் இந்தத் துயரத்திலிருந்து திசைதிருப்புவதற்காக, “சாதிக்கை எப்படி மீட் பண்ணுனீங்க?” எனக் கேட்கிறான் சங்கர். சாதிக்குடனான காதலைப் பற்றிச் சொல்லி முடித்ததும் சங்கரிடம், “உனக்கு நெஜமாவே என்னைப் பிடிக்குமா? நான் நல்ல பொண்ணுன்னு நினைக்கிறீயா?” எனக் கேட்கிறாள்.

“ஆமா”

“அப்போ எனக்கொரு கிஸ் கொடு. வெறுப்பே இல்லாம கோவமே இல்லாம ஒரு கிஸ்” அவள் தன் கன்னத்தை நீட்டினாள். 

அவன் மென்மையாய் அவளை முத்தினான். அவள் மகிழ்ச்சியானாள்.

இந்த அத்தியாயத்தில் அபிலாஷ் எழுதிய இறுதி வரி மிக அபாரமானது. அந்த வரியைப் படித்ததும் அடுத்த சில மணி நேரத்திற்கு நாவலை மேற்கொண்டு படிக்க இயலாமல் மூடிவைத்தேன். உடனடியாக தோழி ஒருத்தியை அழைத்து மொத்த அத்தியாயத்தையும் படித்துக் காட்டினேன். அந்த இறுதி வரி:

‘பிறகு கண்கள் நிறைந்து பளபளக்க வாயைப் பொத்தியபடி அழுதாள்’.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.