முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" - பிரவீணாவின் காதல் - பாலு

அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம்.

கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது.

பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா.

“விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர். 

“என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள்.

“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான்.

அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்னை சித்தப்பாதான் எடுத்து வளர்த்தாரு. அஞ்சு வயசு வரை ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் இருந்தேன். அவரு என் சித்தப்பாவான்னே தெரியல. அப்படித்தான் கூப்பிடச் சொன்னாங்க. வீட்டில மழை அதிகமா கொட்டுறப்போதான் நான் அதிகம் அடி வாங்குவேன். நான் ஏதாவது தப்பு பண்ணினா என்னைக் கூப்பிட்டு வெச்சு என் அம்மா ஒரு தேவடியான்னு திரும்பத் திரும்பச் சொல்லுவாரு. என்னைக் குட்டித் தேவடியான்னு கூப்பிடுவாரு. என்னைக் கிள்ளி அழ வைப்பாரு. நான் அழுறதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். என்னை இழுத்து சூடு வைப்பாரு. மழைல நிறைய நாள் முட்டி போட்டு நின்னிருக்கேன். அப்புறம் மெல்ல மெல்ல அதை நான் உள்ளுக்குள்ளே ரசிக்க ஆரம்பிச்சேன். அவரு திட்டணுமுன்னே ஏதாவது பண்ணுவேன். வயசுக்கு வந்த பிறகு ஒருநாள் என்னை என் அறைக்குள்ள தள்ளி பலாத்காரம் பண்ணினார். பிறகு எப்போலாம் என்னை நோக்கி கத்துறாரோ அப்போலாம் நான் உள்ளுக்குள்ள் ஈரமாயிடுவேன். என் கைகள் நடுங்கும். உடம்பு சூடாகும். நான் அறைக்குப் போய் தனியா அவருக்காகக் காத்திருப்பேன். நான் அனுமதிச்சாலும்கூட அவர் நான் அழணுமுன்னு விரும்புவார். அதுக்காக என்னை அடிப்பார். என் அம்மாவைப் பத்தி மோசமா பேசுவார். நான் அழுவேன். அழ அழ இன்னும் அதிகமா எக்ஸைட் ஆவேன். என் உடம்பு அவருக்காக ஏங்கும். ஒருநாள் அவர் என்னை பலாத்காரம் பண்றதை சித்தி பார்த்துட்டு, எதுவும் பேசாம என்னை ஹோம்ல கொண்டுபோய் சேர்த்துட்டாங்க” என்றாள்.

அவளின் இந்தத் துயரத்திலிருந்து திசைதிருப்புவதற்காக, “சாதிக்கை எப்படி மீட் பண்ணுனீங்க?” எனக் கேட்கிறான் சங்கர். சாதிக்குடனான காதலைப் பற்றிச் சொல்லி முடித்ததும் சங்கரிடம், “உனக்கு நெஜமாவே என்னைப் பிடிக்குமா? நான் நல்ல பொண்ணுன்னு நினைக்கிறீயா?” எனக் கேட்கிறாள்.

“ஆமா”

“அப்போ எனக்கொரு கிஸ் கொடு. வெறுப்பே இல்லாம கோவமே இல்லாம ஒரு கிஸ்” அவள் தன் கன்னத்தை நீட்டினாள். 

அவன் மென்மையாய் அவளை முத்தினான். அவள் மகிழ்ச்சியானாள்.

இந்த அத்தியாயத்தில் அபிலாஷ் எழுதிய இறுதி வரி மிக அபாரமானது. அந்த வரியைப் படித்ததும் அடுத்த சில மணி நேரத்திற்கு நாவலை மேற்கொண்டு படிக்க இயலாமல் மூடிவைத்தேன். உடனடியாக தோழி ஒருத்தியை அழைத்து மொத்த அத்தியாயத்தையும் படித்துக் காட்டினேன். அந்த இறுதி வரி:

‘பிறகு கண்கள் நிறைந்து பளபளக்க வாயைப் பொத்தியபடி அழுதாள்’.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...