முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா இஸ்ரேலாகுமா?


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தியா பெரும்பான்மை யூதர்களின் வாக்குகளை மட்டும் கொண்டு ஸியோனிஸ்ட் கட்சிகளை மட்டும் ஆட்சியில் வர அனுமதிக்கும் இஸ்ரேலைப் போல ஆகும் என மாலன் அந்திமழை பேட்டியில் கூறுவதைக் கேட்டேன். இதெல்லாம் என்ன மாதிரி ஒப்பீடு? இஸ்ரேலின் வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், இனக்குழு அடையாளம், மதங்கள் வேறு இந்தியா வேறு. இஸ்ரேல் செயற்கையாக மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறிய நாடு. இந்தியாவோ மிக மிக சிக்கலான பரந்துபட்ட தேசம். காலனியவாதிகள் வருமுன்பே இந்து அடையாளம் அற்று பல்வேறு தொகுப்புகளாக வாழ்ந்து வந்த மக்கள் இந்தியர். எத்தனையோ நம்பிக்கைகள், பண்பாடுகள், தத்துவங்கள், மொழிகள், சாதிகள், மதங்களைக் கொண்ட தேசம் இது. இங்கு ராமர் பெயரிலான அரசியல் பிரச்சாரம் மகாராஷ்டிர தலித்துகளை பதற்றமாக்குகிறது. தென்னிந்தியர்களை அந்நியமாக்குகிறது. வைணவ தலைமையை சைவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சிவனுடன் விஷ்ணுவையும் வழிபட தயங்க மாட்டார்கள். கேரள சி.எம்.ஐ சபையினர் தம் ஏசுவின் பக்கத்தில் சங்கரரை வைத்திருக்கிறார்கள். பல பௌத்த கோயில்களை இந்துக்கோயில்களாக்கி எந்த பிரச்சினையும் இன்றி வழிபடுகிறோம் என விவேகானந்தர் மகிழ்ச்சியுடன் கோருகிறார். தமிழ்நாட்டு இஸ்லாமிய சடங்குகள், விழாக்களில் இந்துமத சாயல் உண்டு. இந்தியர்களின் மத அணுகுமுறை விசித்திரமானது - மிக மிக நீர்மையானது.
இப்படியான மக்கள் தொகுதியை நீங்கள் எப்படி யூதர்களுடன் ஒப்பிட முடியும்?
நமது பாராளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பாருங்கள் - ஒரு போதும் சர்வாதிகாரிகள் நீடித்ததோ மதவாதத்துக்காக மக்கள் பெருவாரியாக வாக்களித்ததோ இல்லை. 2014இல் பாஜக வளர்ச்சியின் பெயரிலும் 2019இல் தேசப் பாதுகாப்பின் பெயரிலும் பொய்ப் பிரச்சாரம் பண்ணி ஆட்சியைப் பிடித்தது. அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலே மோடியின் பிம்பம் முழுவதுமாக சரிந்து குப்பையில் கிடக்கிறது. மதவாத வெறிக்காக அவருக்கு வெற்றியை இந்த நாடு இதுவரை அளிக்காத போது இனிமட்டும் எப்படி அளிக்கும்? அதுவும் 200 தாண்டுவார்களா என்பதே கேள்வியாக இருக்கும் போது இவர் நிரந்தர இந்து பெரும்பான்மை ஆட்சி பற்றி பேசுவது அவரது ஆழ்மன ஆசையின் வெளிப்பாடு அன்றி வேறொன்றுமில்லை. ஆனால் அவர் அதை ரொம்ப பாந்தமாக பட்டும்படாமலும் விஷம் ஏற்றுவதைப் போல 'நடுநிலையாக' சொல்வார்.
மாலன் ஒருபக்கம் இப்படி பேசினால் மற்ற பாஜக எதிர்ப்பு தமிழ் சேனல்களில் பல வினோத சாத்தியங்களை பேசுகிறார்கள். ஜூன் 4 வரும் வரை பவாவை விட பயங்கரமாக கதை சொல்வார்கள் போல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...