முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய டிரெண்ட்


இதை எத்தனை பேர்கள் உணர்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கு ரஹ்மானின் அண்மைக்கால பாடல்கள் (கடந்த சில ஆண்டுகளாக) ஏதோ ராணுவ அணிவகுப்பு மெட்டைப் போல தோன்றுகின்றன. ஒரு எளிய மெட்டு, அதையே அடுத்தடுத்து சரணத்திலும் மீளப்பாடும்படியும் சில வாத்திய கருவிகளை அதே போல தட்டையாக ஒலிக்கவிட்டு முடித்துவிடுகிறார். (இதைப் பற்றி தன் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட பிரபாகர் வேதமாணிக்கம் ஒரு புதிய முறையை கொண்டு வர முயல்கிறார் ரஹ்மான் என்று சொல்லியிருந்தார்.)
ஆண்டுக்கு சராசரியாக பல பாடல்களை இப்படி உருவாக்கி கலர் கோழிக்குஞ்சுகளை போல வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். ரஹ்மான் பாட்டு என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது. யார் பாராட்டினாலும் இப்போது நான் கேட்க தயாராவதில்லை. டங் டங் டடன் டங் டங் டங் டடண் டங் இப்படியே எல்லா பாடல்களும் போகின்றன. ஐந்தாண்டுகள் முன்வரை அவரது பாடல்களில் நிறைய சிக்கலான அமைப்புகள், படிவம் படிவமான மாறுபாடுகள், ஸ்வரங்கள் வரும் (அது அவராக உருவாக்கியதோ இல்லையோ). இப்போது அவரது நாட்டுப்புற மெட்டுடன் வரும் ஹிந்துஸ்தானி ஸ்வரம் கூட டங் டடங் என்.ஸி.ஸி, ராணுவ அணிவகுப்பு மாதிரியே ஒலிக்கிறது.
சரி ரஹ்மானிடம் தான் பிரச்சினை என நினைத்தால் அண்மையில் பாலிவுட் பாடல்களும் அப்படியே உள்ளன. பல்லவியைத் தாண்டி மெட்டு பல்லி போல சுவரில் இருந்து விழுந்துவிடுகிறது. பட்டாம்பூச்சி போல பறப்பதில்லை. அனேகமான பாடல்கள் முதல் சில வரிகளைத் தாண்டி மனதுக்குள் நுழைவதில்லை. 30 வினாடிப் பாடலை மூன்று நிமிடங்களுக்கு நீட்டியதைப் போல. இது ஒரு புதிய போக்கு, டிரெண்ட் என நினைக்கிறேன். ரஹ்மான் இப்படித்தான் குப்பையாக எல்லாம் போகப் போகிறது, இத்தலைமுறைக்கு இதுவே பிடிக்கும் என முடிவு பண்ணி முன்கூறாகவே தன் இசையின் பாணியை மாற்றிவிட்டார் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.