முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகனில்" சில சிறந்த உரையாடல்கள் - பாலு

”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்”

*

“புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்”

*

“செக்ஸை கடந்து போறது ஈஸி”

“அதெப்படி ஈஸி?”

“நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.”

“அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே”

“இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.”

“அதெப்படி இருக்கும்?”

“செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு வாழலாம். யோசிச்சுப் பாரேன், எந்தப் பொண்ணு பத்தியும் யோசிக்காம வாழ்ந்தா எவ்வளவு ஃப்ரீயா இருக்கும்.”

*

“நாம பார்க்கிற சினிமா, கேட்கிற கதை, பார்க்கிற ஓவியங்கள், அப்புறம் பொண்ணுங்க தங்களை அலங்கரிச்சுக் காட்டிக்கிற விதம் இதுதான் செக்ஸி, அழகுன்னு நமக்கு ஒரு அபிப்ராயத்தை உண்டாக்குது. ஆனா அது செயற்கையா உருவான ஒரு பிம்பம். யோசிச்சு பாரேன், தொப்புள்னா என்ன? ஒரு சின்னக் குழி, அதைப் பார்த்தா நமக்கு ஏன் ஆசை வரணும். அம்மாவோட முலையைப் பார்த்தா ஆசை வருமா?

“இல்ல”

“எதைப் பார்த்தா ஆசை வரணும்னு நாமதான் தீர்மானிக்கிறோம். சிலருக்கு பொம்பளைக்க கால் முடிய பார்த்தாலே நட்டுக்கும். அது செக்ஸி, அது ஏதோ பிரமாதமான ஒண்ணுன்னு அவன் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு. இதெல்லாம் நாமளே உருவாக்கிறது”

*

“சந்தோஷம்னா என்ன?”

“ஜாலியா பிடிச்சதை பண்ணிட்டு இருக்கிறது”

“இல்ல. ஜாலியா என்னதான் பண்ணினாலும் அது முடியும்போது அதிருப்தியா இருக்கும். அதனால்தான் குடிக்கிறவன் குடிச்சிக்கிட்டே இருக்கான். பொண்ணு பிடிக்கறவன் ஒவ்வொரு பொண்ணா தேடி அலஞ்சிக்கிட்டே இருக்கான். சந்தோஷம்னா ரொம்ப முக்கியமான வேலைகளை மட்டும் பண்றது.”

*

“நாத்திகமும் ஒரு மதம் போலத்தான். என்ன, கடவுளுக்கு பதில் தர்க்கம்”

“பிறகு எதுதான் சரி?”

“கடவுள் இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள நாத்திவாதிகளுக்கு உள்ளுக்குள் சிரமமாய் இருக்கிறது. அதனால் தர்க்கம் மூலம் இன்னொரு கடவுளை சிருஷ்டிக்கிறார்கள்.”

*

“நம்ம யங் ரைட்டர்ஸ்ட ஒரு பிரச்சனை சார். நல்லா இஅல்லேன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. நல்லா இருக்குன்னாலும் நம்ப மாட்டாங்க. ஆனால் நிறைய படிக்கிறவங்க, எழுதித் தேர்ச்சி பெற்றவங்களைவிட எழுத்தனுபவமோ வாசிப்போ இல்லாதவங்ககிட்ட இருந்துதான் சிறந்த படைப்புகள் வர வாய்ப்பதிகம்”

*

“நாம முழு இருட்டில் உட்கார்ந்திட்டு இருக்கும்போது என்ன நினைப்போம்? நம்மள சுத்தி இருட்டு மட்டும்தான் இருக்குதுன்னு. இருட்டுதான் ஒரே நிஜம்னு தோனும். ஆனா அது உண்மையா? ஸ்விட்ச்சை போட்டா உடனே வெளிச்சம் வந்திடும். அதுவரை தெரியாத பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுவரை நாம நினைச்சிக்கிட்டிருந்தது உண்மையான உலகம் இல்லைன்னு புரியும். அதுவரைக்கும் பொய்யையே உண்மைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோமுன்னு புரியும்.”

(Some of the best conversations from 'ரசிகன்’ நாவல் by Abilash Chandran)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...