முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகனில்" சில சிறந்த உரையாடல்கள் - பாலு

”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்”

*

“புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்”

*

“செக்ஸை கடந்து போறது ஈஸி”

“அதெப்படி ஈஸி?”

“நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.”

“அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே”

“இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.”

“அதெப்படி இருக்கும்?”

“செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு வாழலாம். யோசிச்சுப் பாரேன், எந்தப் பொண்ணு பத்தியும் யோசிக்காம வாழ்ந்தா எவ்வளவு ஃப்ரீயா இருக்கும்.”

*

“நாம பார்க்கிற சினிமா, கேட்கிற கதை, பார்க்கிற ஓவியங்கள், அப்புறம் பொண்ணுங்க தங்களை அலங்கரிச்சுக் காட்டிக்கிற விதம் இதுதான் செக்ஸி, அழகுன்னு நமக்கு ஒரு அபிப்ராயத்தை உண்டாக்குது. ஆனா அது செயற்கையா உருவான ஒரு பிம்பம். யோசிச்சு பாரேன், தொப்புள்னா என்ன? ஒரு சின்னக் குழி, அதைப் பார்த்தா நமக்கு ஏன் ஆசை வரணும். அம்மாவோட முலையைப் பார்த்தா ஆசை வருமா?

“இல்ல”

“எதைப் பார்த்தா ஆசை வரணும்னு நாமதான் தீர்மானிக்கிறோம். சிலருக்கு பொம்பளைக்க கால் முடிய பார்த்தாலே நட்டுக்கும். அது செக்ஸி, அது ஏதோ பிரமாதமான ஒண்ணுன்னு அவன் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு. இதெல்லாம் நாமளே உருவாக்கிறது”

*

“சந்தோஷம்னா என்ன?”

“ஜாலியா பிடிச்சதை பண்ணிட்டு இருக்கிறது”

“இல்ல. ஜாலியா என்னதான் பண்ணினாலும் அது முடியும்போது அதிருப்தியா இருக்கும். அதனால்தான் குடிக்கிறவன் குடிச்சிக்கிட்டே இருக்கான். பொண்ணு பிடிக்கறவன் ஒவ்வொரு பொண்ணா தேடி அலஞ்சிக்கிட்டே இருக்கான். சந்தோஷம்னா ரொம்ப முக்கியமான வேலைகளை மட்டும் பண்றது.”

*

“நாத்திகமும் ஒரு மதம் போலத்தான். என்ன, கடவுளுக்கு பதில் தர்க்கம்”

“பிறகு எதுதான் சரி?”

“கடவுள் இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள நாத்திவாதிகளுக்கு உள்ளுக்குள் சிரமமாய் இருக்கிறது. அதனால் தர்க்கம் மூலம் இன்னொரு கடவுளை சிருஷ்டிக்கிறார்கள்.”

*

“நம்ம யங் ரைட்டர்ஸ்ட ஒரு பிரச்சனை சார். நல்லா இஅல்லேன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. நல்லா இருக்குன்னாலும் நம்ப மாட்டாங்க. ஆனால் நிறைய படிக்கிறவங்க, எழுதித் தேர்ச்சி பெற்றவங்களைவிட எழுத்தனுபவமோ வாசிப்போ இல்லாதவங்ககிட்ட இருந்துதான் சிறந்த படைப்புகள் வர வாய்ப்பதிகம்”

*

“நாம முழு இருட்டில் உட்கார்ந்திட்டு இருக்கும்போது என்ன நினைப்போம்? நம்மள சுத்தி இருட்டு மட்டும்தான் இருக்குதுன்னு. இருட்டுதான் ஒரே நிஜம்னு தோனும். ஆனா அது உண்மையா? ஸ்விட்ச்சை போட்டா உடனே வெளிச்சம் வந்திடும். அதுவரை தெரியாத பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுவரை நாம நினைச்சிக்கிட்டிருந்தது உண்மையான உலகம் இல்லைன்னு புரியும். அதுவரைக்கும் பொய்யையே உண்மைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோமுன்னு புரியும்.”

(Some of the best conversations from 'ரசிகன்’ நாவல் by Abilash Chandran)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.