Skip to main content

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (1)

புக் பிரம்மா இலக்கிய விழாவின் போது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை உணவகங்கள் இருந்த பகுதியில் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதாவது சென்னையில் அரங்கின் வெளியிலும் தேநீர்க் கடையிலும் நின்று பேசுவதை இங்கு ஆற அமர அமைதியான, வெக்கையற்ற இதமான சூழலில் இருந்து பேச முடிந்தது ஒரு செமையான அனுபவம். பதிப்பாளர்கள் தனியாக அங்கு நடந்த பதிப்புத்துறைக்கான அமர்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்ததால் அவர்களும் அரட்டையில் இணைந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட சென்னையில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.


நான் அங்கு உரையாடியதில் சில பொதுவான விசயங்களை இங்கு சிறு குறிப்புகளாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

****
தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எனும் லலித குமாரி நாவல் குறித்த கலந்துரையாடலில் ஒரு சுவாரஸ்யமான வசனத்தை சொன்னார். அந்த சொற்றொடர் ஒரு பஞ்ச் டயலாக்கைப் போல இருந்தது. “கவிதைகளை கவிஞரின் பெயராலும் நாவல்களை தனிப்பட்ட படைப்புகளாலும் அடையாளப்படுத்துகிறோம், நினைவுகொள்கிறோம்.” அதாவது நாம் பாரதியின், ஆத்மாநாமின், நகுலனின் கவிதைப் பற்றிப் பேசும் போது அந்த படைப்பாளிகளின் குறிப்பிட்ட கவிதையை அல்ல அவர்களுடைய பெயரே முதலில் வந்து விழுகிறது, அவர்களுடைய ஆகிருதியே நம் முன்னால் பெரிதாக எழுந்து நிற்கிறது. மனுஷ்யபுத்திரனும் தேவதேவனும் அவர்கள் எழுதிய ஒட்டுமொத்த சொற்களின் அடையாளமாகத் தோன்றுகிறார்கள். ஆனால் இது நாவலுக்கு நிச்சயமாக நிகழ்வதில்லை. எனக்கு தஸ்வாவஸ்கியின் / காப்காவின் நாவல்கள் பிடிக்கும் என்று ஒருவர் சொன்னதுடன் அவர் அப்படியே ஒரு குறிப்பிட்ட நாவலைப் பற்றியும், அதில் வரும் காட்சிகள், பாத்திரங்கள் பற்றியும் பேசி அதனுள் போய்விடுவார். அரிதாகவே தஸ்தாவஸ்கியின் / காப்காவின் தரிசனத்தைப் பற்றி பொதுவாகவோ அவர்களுடைய சில வாக்கியங்களைப் பற்றியோ பேசுகிறோம். நாவல்கள் நாவலாசிரியரை மறைய வைப்பதைப் போல கவிதைகள் கவிஞருக்கு செய்வதில்லை. அதனாலே நம் சூழலில் “கவிஞரே” என கனிவாக ஒருவரை அழைப்பதைப் போல “நாவலாசிரியரே” என அழைப்பதில்லை. இது ஏன் என்பதற்குள் வோல்காவோ விவாதத்தை நெறியாள்கை செய்தவரோ போகவில்லை.

நான் இதைப் பற்றி பின்னர் சர்வோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இது ஒரு முற்றிலும் புதிய பார்வை. நாவலானது தன்னளவில் முழுமையாக இருப்பதைப் போல, அது ஒரு பிரபஞ்சமாக தனதேயான உயிர்களுடன் சூழலுடன் உயிர்கொண்டிருப்பதைப் போல ஒரு கவிதையால் இயலாது, கவிதைகள் பெரிய மழையில் உள்ள துளிகளைப் போல தனித்தனியாகவும் நாவல் ஒரு கானகத்தைப் போன்றும் இருப்பதால் தான் இது நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது என்றேன். ஒரு நாவலுக்குள் எழுத்தாளர் தொலைந்து போவதைப் போல (எது அவருடைய கருத்து, எது கதாபாத்திரத்தின் கருத்து?) கவிதையில் சுலபத்தில் நிகழ்வதில்லை. கவிதையென்பது கவிதைசொல்லியின் பார்வை, கருத்து, அரசியல், கவிதைசொல்லி எப்போதுமே கவிஞர் தான், இருவரும் ஒரே பாலினம் அல்ல என்றாலும் கூட. பின்நவீன கவிதைகளில் மட்டுமே கவிதைசொல்லியே மிகுந்த தன்னுணர்வுடன் தன்னையே மறுத்து எழுதுகிறார். தமிழில் நாம் அரிதாகவே பின்நவீன கவிதைகளைக் காண்கிறோம். அதனாலே இங்கு கவிஞர்கள் என்றாலே அவர்களின் முகங்களே நமக்கு நினைவுக்கு வருகிறேன். அதனாலே இங்கு நாம் கவிஞர்களை அவ்வளவு கொண்டாடுகிறோம், ஆனால் கவிதை நூல்களை வாங்காமல் பதிப்பாளர்களை நொடிந்து போக வைக்கிறோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...