முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (1)

புக் பிரம்மா இலக்கிய விழாவின் போது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை உணவகங்கள் இருந்த பகுதியில் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதாவது சென்னையில் அரங்கின் வெளியிலும் தேநீர்க் கடையிலும் நின்று பேசுவதை இங்கு ஆற அமர அமைதியான, வெக்கையற்ற இதமான சூழலில் இருந்து பேச முடிந்தது ஒரு செமையான அனுபவம். பதிப்பாளர்கள் தனியாக அங்கு நடந்த பதிப்புத்துறைக்கான அமர்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்ததால் அவர்களும் அரட்டையில் இணைந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட சென்னையில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.


நான் அங்கு உரையாடியதில் சில பொதுவான விசயங்களை இங்கு சிறு குறிப்புகளாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

****
தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எனும் லலித குமாரி நாவல் குறித்த கலந்துரையாடலில் ஒரு சுவாரஸ்யமான வசனத்தை சொன்னார். அந்த சொற்றொடர் ஒரு பஞ்ச் டயலாக்கைப் போல இருந்தது. “கவிதைகளை கவிஞரின் பெயராலும் நாவல்களை தனிப்பட்ட படைப்புகளாலும் அடையாளப்படுத்துகிறோம், நினைவுகொள்கிறோம்.” அதாவது நாம் பாரதியின், ஆத்மாநாமின், நகுலனின் கவிதைப் பற்றிப் பேசும் போது அந்த படைப்பாளிகளின் குறிப்பிட்ட கவிதையை அல்ல அவர்களுடைய பெயரே முதலில் வந்து விழுகிறது, அவர்களுடைய ஆகிருதியே நம் முன்னால் பெரிதாக எழுந்து நிற்கிறது. மனுஷ்யபுத்திரனும் தேவதேவனும் அவர்கள் எழுதிய ஒட்டுமொத்த சொற்களின் அடையாளமாகத் தோன்றுகிறார்கள். ஆனால் இது நாவலுக்கு நிச்சயமாக நிகழ்வதில்லை. எனக்கு தஸ்வாவஸ்கியின் / காப்காவின் நாவல்கள் பிடிக்கும் என்று ஒருவர் சொன்னதுடன் அவர் அப்படியே ஒரு குறிப்பிட்ட நாவலைப் பற்றியும், அதில் வரும் காட்சிகள், பாத்திரங்கள் பற்றியும் பேசி அதனுள் போய்விடுவார். அரிதாகவே தஸ்தாவஸ்கியின் / காப்காவின் தரிசனத்தைப் பற்றி பொதுவாகவோ அவர்களுடைய சில வாக்கியங்களைப் பற்றியோ பேசுகிறோம். நாவல்கள் நாவலாசிரியரை மறைய வைப்பதைப் போல கவிதைகள் கவிஞருக்கு செய்வதில்லை. அதனாலே நம் சூழலில் “கவிஞரே” என கனிவாக ஒருவரை அழைப்பதைப் போல “நாவலாசிரியரே” என அழைப்பதில்லை. இது ஏன் என்பதற்குள் வோல்காவோ விவாதத்தை நெறியாள்கை செய்தவரோ போகவில்லை.

நான் இதைப் பற்றி பின்னர் சர்வோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இது ஒரு முற்றிலும் புதிய பார்வை. நாவலானது தன்னளவில் முழுமையாக இருப்பதைப் போல, அது ஒரு பிரபஞ்சமாக தனதேயான உயிர்களுடன் சூழலுடன் உயிர்கொண்டிருப்பதைப் போல ஒரு கவிதையால் இயலாது, கவிதைகள் பெரிய மழையில் உள்ள துளிகளைப் போல தனித்தனியாகவும் நாவல் ஒரு கானகத்தைப் போன்றும் இருப்பதால் தான் இது நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது என்றேன். ஒரு நாவலுக்குள் எழுத்தாளர் தொலைந்து போவதைப் போல (எது அவருடைய கருத்து, எது கதாபாத்திரத்தின் கருத்து?) கவிதையில் சுலபத்தில் நிகழ்வதில்லை. கவிதையென்பது கவிதைசொல்லியின் பார்வை, கருத்து, அரசியல், கவிதைசொல்லி எப்போதுமே கவிஞர் தான், இருவரும் ஒரே பாலினம் அல்ல என்றாலும் கூட. பின்நவீன கவிதைகளில் மட்டுமே கவிதைசொல்லியே மிகுந்த தன்னுணர்வுடன் தன்னையே மறுத்து எழுதுகிறார். தமிழில் நாம் அரிதாகவே பின்நவீன கவிதைகளைக் காண்கிறோம். அதனாலே இங்கு கவிஞர்கள் என்றாலே அவர்களின் முகங்களே நமக்கு நினைவுக்கு வருகிறேன். அதனாலே இங்கு நாம் கவிஞர்களை அவ்வளவு கொண்டாடுகிறோம், ஆனால் கவிதை நூல்களை வாங்காமல் பதிப்பாளர்களை நொடிந்து போக வைக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...