முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் காலத்தின் மாபெரும் தணிக்கை இயக்கம்

கெ.என் செந்திலின் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை - 90% விஷ்ணுபுரத்தார் புக் பிரம்மாவின் விழாவை கபளிகரம் பண்ணியிருப்பதாக சொல்வது நியாயமில்லை. நியாயமே இல்லை. 60% என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். வேறு முகாமை சேர்ந்த முக்கிய படைப்பாளிகள், பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல ஒரு விழாவில் அம்மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அது நிகாழமல் போனதே அவலம். கெ.என் செந்தில் குறிப்பிடுவதைப் போல பா. வெங்கடேசனை நிச்சயமாக அழைத்திருக்க வேண்டும். சி.எஸ்.கெ, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் போன்றோரும் இங்கே இருக்கும் நல்ல படைப்பாளிகள். தேவதேவனை எப்படி அழைக்காமல் விட்டார்கள் எனப் புரியவில்லை? இப்படி பல “ஆச்சரியங்கள்”.


இன்னொரு பிரச்சினை கணிசமான படைப்பாளிகள் மீது பூஞ்சை போலப் படிந்துள்ள ‘இசைவு அழுத்தம்’. ஜெயமோகனுடன் இசைந்தோ போவதோ அவரைப் பகைத்துக் கொள்ளாமலோ இருந்தால் சில விருதுகள், வெளிநாடு போகும் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு, விஷ்ணுபுரம் பாராட்டு அரங்குகள், ஜெயமோகன் தம் படைப்புகளை சிலாகித்து எழுதும் கட்டுரைகள் என அனுகூலங்கள் கிடைக்கும், அவரை விமர்சித்தால் கையைக் கட்டித் தெருவில் நிற்க வேண்டியதுதான் என ஒரு அழுத்தம் இன்று வந்துவிட்டது. எழுத்தாளர்களில் திமுகவை எதிர்ப்பவர்கள் கூட பொதுவெளியில் திமுக ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும். ஜெயமோகன் ஒரு இலக்கிய ‘ஆளுங்கட்சி’. ஆளுங்கட்சியை அதிகாரிகள் அனுசரிப்பதைப் போல எழுத்தாளர்கள் அவரை அனுசரிப்பது ஒரு சுதந்திரமான சிந்தனைப் போக்குக்கு விரோதமானது; எழுத்து தனித்துவமாக மாறுவதற்கு மோதல் அவசியம். நான் உன்னைப் போல இல்லை, நீ செய்வது, சொல்வது, நினைப்பது தவறானது என நினைக்கிறேன், அதை நிரூபிக்கிறேன் என ஒரு படைப்பாளி நினைக்கும் போதே ஆற்றொழுக்காக புதிய படைப்பெழுத்து பெருகி ஓடுகிறது. ஒட்டி ஒழுகுவது, ஊமையாக இருப்பது, ஆதிக்கம் செய்யும் கருத்தியலுக்கு ஏற்ப எழுதுவது நம்மை நகல் எந்திரமாக்கி விடும். மறுத்து, எதிர்த்து இயங்கும் போது மட்டுமே நாம் அறிவுச்சூழலில், படைப்புச் சூழலில் உயிர்ப்பாக இருக்க முடியும் என நம்புகிறேன். விஷ்ணுபுரம் கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை, மெட்ராஸ் படத்தில் வரும் சுவரைப் போல, மறைமுக தணிக்கை இயக்கம் போல அது செயல்படுகிறது என்பதே நம் காலத்தின் பேரவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...