முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் காலத்தின் மாபெரும் தணிக்கை இயக்கம்

கெ.என் செந்திலின் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை - 90% விஷ்ணுபுரத்தார் புக் பிரம்மாவின் விழாவை கபளிகரம் பண்ணியிருப்பதாக சொல்வது நியாயமில்லை. நியாயமே இல்லை. 60% என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். வேறு முகாமை சேர்ந்த முக்கிய படைப்பாளிகள், பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல ஒரு விழாவில் அம்மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அது நிகாழமல் போனதே அவலம். கெ.என் செந்தில் குறிப்பிடுவதைப் போல பா. வெங்கடேசனை நிச்சயமாக அழைத்திருக்க வேண்டும். சி.எஸ்.கெ, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் போன்றோரும் இங்கே இருக்கும் நல்ல படைப்பாளிகள். தேவதேவனை எப்படி அழைக்காமல் விட்டார்கள் எனப் புரியவில்லை? இப்படி பல “ஆச்சரியங்கள்”.


இன்னொரு பிரச்சினை கணிசமான படைப்பாளிகள் மீது பூஞ்சை போலப் படிந்துள்ள ‘இசைவு அழுத்தம்’. ஜெயமோகனுடன் இசைந்தோ போவதோ அவரைப் பகைத்துக் கொள்ளாமலோ இருந்தால் சில விருதுகள், வெளிநாடு போகும் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு, விஷ்ணுபுரம் பாராட்டு அரங்குகள், ஜெயமோகன் தம் படைப்புகளை சிலாகித்து எழுதும் கட்டுரைகள் என அனுகூலங்கள் கிடைக்கும், அவரை விமர்சித்தால் கையைக் கட்டித் தெருவில் நிற்க வேண்டியதுதான் என ஒரு அழுத்தம் இன்று வந்துவிட்டது. எழுத்தாளர்களில் திமுகவை எதிர்ப்பவர்கள் கூட பொதுவெளியில் திமுக ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும். ஜெயமோகன் ஒரு இலக்கிய ‘ஆளுங்கட்சி’. ஆளுங்கட்சியை அதிகாரிகள் அனுசரிப்பதைப் போல எழுத்தாளர்கள் அவரை அனுசரிப்பது ஒரு சுதந்திரமான சிந்தனைப் போக்குக்கு விரோதமானது; எழுத்து தனித்துவமாக மாறுவதற்கு மோதல் அவசியம். நான் உன்னைப் போல இல்லை, நீ செய்வது, சொல்வது, நினைப்பது தவறானது என நினைக்கிறேன், அதை நிரூபிக்கிறேன் என ஒரு படைப்பாளி நினைக்கும் போதே ஆற்றொழுக்காக புதிய படைப்பெழுத்து பெருகி ஓடுகிறது. ஒட்டி ஒழுகுவது, ஊமையாக இருப்பது, ஆதிக்கம் செய்யும் கருத்தியலுக்கு ஏற்ப எழுதுவது நம்மை நகல் எந்திரமாக்கி விடும். மறுத்து, எதிர்த்து இயங்கும் போது மட்டுமே நாம் அறிவுச்சூழலில், படைப்புச் சூழலில் உயிர்ப்பாக இருக்க முடியும் என நம்புகிறேன். விஷ்ணுபுரம் கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை, மெட்ராஸ் படத்தில் வரும் சுவரைப் போல, மறைமுக தணிக்கை இயக்கம் போல அது செயல்படுகிறது என்பதே நம் காலத்தின் பேரவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...