முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் காலத்தின் மாபெரும் தணிக்கை இயக்கம்

கெ.என் செந்திலின் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை - 90% விஷ்ணுபுரத்தார் புக் பிரம்மாவின் விழாவை கபளிகரம் பண்ணியிருப்பதாக சொல்வது நியாயமில்லை. நியாயமே இல்லை. 60% என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். வேறு முகாமை சேர்ந்த முக்கிய படைப்பாளிகள், பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல ஒரு விழாவில் அம்மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அது நிகாழமல் போனதே அவலம். கெ.என் செந்தில் குறிப்பிடுவதைப் போல பா. வெங்கடேசனை நிச்சயமாக அழைத்திருக்க வேண்டும். சி.எஸ்.கெ, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் போன்றோரும் இங்கே இருக்கும் நல்ல படைப்பாளிகள். தேவதேவனை எப்படி அழைக்காமல் விட்டார்கள் எனப் புரியவில்லை? இப்படி பல “ஆச்சரியங்கள்”.


இன்னொரு பிரச்சினை கணிசமான படைப்பாளிகள் மீது பூஞ்சை போலப் படிந்துள்ள ‘இசைவு அழுத்தம்’. ஜெயமோகனுடன் இசைந்தோ போவதோ அவரைப் பகைத்துக் கொள்ளாமலோ இருந்தால் சில விருதுகள், வெளிநாடு போகும் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு, விஷ்ணுபுரம் பாராட்டு அரங்குகள், ஜெயமோகன் தம் படைப்புகளை சிலாகித்து எழுதும் கட்டுரைகள் என அனுகூலங்கள் கிடைக்கும், அவரை விமர்சித்தால் கையைக் கட்டித் தெருவில் நிற்க வேண்டியதுதான் என ஒரு அழுத்தம் இன்று வந்துவிட்டது. எழுத்தாளர்களில் திமுகவை எதிர்ப்பவர்கள் கூட பொதுவெளியில் திமுக ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும். ஜெயமோகன் ஒரு இலக்கிய ‘ஆளுங்கட்சி’. ஆளுங்கட்சியை அதிகாரிகள் அனுசரிப்பதைப் போல எழுத்தாளர்கள் அவரை அனுசரிப்பது ஒரு சுதந்திரமான சிந்தனைப் போக்குக்கு விரோதமானது; எழுத்து தனித்துவமாக மாறுவதற்கு மோதல் அவசியம். நான் உன்னைப் போல இல்லை, நீ செய்வது, சொல்வது, நினைப்பது தவறானது என நினைக்கிறேன், அதை நிரூபிக்கிறேன் என ஒரு படைப்பாளி நினைக்கும் போதே ஆற்றொழுக்காக புதிய படைப்பெழுத்து பெருகி ஓடுகிறது. ஒட்டி ஒழுகுவது, ஊமையாக இருப்பது, ஆதிக்கம் செய்யும் கருத்தியலுக்கு ஏற்ப எழுதுவது நம்மை நகல் எந்திரமாக்கி விடும். மறுத்து, எதிர்த்து இயங்கும் போது மட்டுமே நாம் அறிவுச்சூழலில், படைப்புச் சூழலில் உயிர்ப்பாக இருக்க முடியும் என நம்புகிறேன். விஷ்ணுபுரம் கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை, மெட்ராஸ் படத்தில் வரும் சுவரைப் போல, மறைமுக தணிக்கை இயக்கம் போல அது செயல்படுகிறது என்பதே நம் காலத்தின் பேரவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.