முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல்



பதிப்பகங்கள் நூலக நூல் கொள்முதலுக்காக முறைகேட்டில் ஈடுபட்டு, அதற்கான கோடிக்கணக்கான பண மதிப்பிலான ஊழலை செய்யும் போது அதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் லஞ்சம் கொடுக்க முடியாத சிறுபதிப்பகங்களும் முறையே பாதிக்கப்படுகின்றனர். எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்காது - இல்லாத புத்தகத்துக்கு பொய்யான தலைப்பில் ஆர்டர் கொடுத்தாலோ ஒரு பதிப்பகம் முறைகேட்டினால் ஆர்டர் பெற்றாலோ அது கறுப்புப் பணத்தை உற்பத்தி பண்ணும், கறுப்புப் பணத்தை எழுத்தாளருக்கு ராயல்டியாக கொடுக்க முடியாது, மேலும் இல்லாத எழுத்தாளருக்கு எங்கே போய் பணம் சேரும்? இந்த அபத்தமான சூழலை காப்கா கூட கற்பனை பண்ணியிருக்க முடியாது.
வாசகர்களுக்கும் ஒரே நூலை இருபது முப்பது பிரதிகள் அலமாரியில் இருந்தாலோ அல்லது பொய்யான தலைப்பில் இருந்தாலோ பயனில்லை. சேக்கிழாரின் கம்பராமாயணம் என ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டால் அதை வைத்து வாசகருக்கு சேக்கிழாரையும் புரிந்துகொள்ள இயலாது, கம்பனையும் படிக்க முடியாது. பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
அடுத்து, விலை. ஊழலினால் சரிசமமாக பதிப்பகங்களுக்கு நூலக ஆணை கிடைக்காமல் அவை நஷ்டத்தை சமாளிக்க புத்தக விலையை ஏற்றுவது வாசகரை பாதிக்கும். மெல்ல மெல்ல இதனால் சிறுபதிப்பாளர்கள் அழிவர்.
இப்படி எல்லாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் குற்றம் இது. ஏற்கனவே நொடிந்து போயிருக்கும் பதிப்பகத் துறையில் ஒரு சிலர் ஊழல் செய்வது ஏழைகளின் சோற்றில் கைவைப்பதைப் போன்றது. இது நியாயம் அல்ல. இத்தகையோரை அரசு தண்டிப்பதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். ஊழலற்ற வெளிப்படையான அணுகுறையை கொள்முதலில் கொண்டு வர வேண்டும். புத்தக தலைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் நல்ல பதிப்பகங்களைத் தேர்வு பண்ணி அவர்களிடம் இருந்து ஒரே எண்ணிக்கையில் நூல் வாங்க வேண்டும்.
பி.கு: அப்படியெல்லாம் அட்டையில் பெயர் மாறிவிடும் என நான் நம்பவில்லை. பெயரில் பிழை வரலாம், ஆனால் ஒரேயடியாக மாறியதெல்லாம் இதுவரை நம் வரலாற்றிலேயே நடந்ததில்லை. இது மோசடி வேலைதான் என்பது என் நம்பிக்கை. வேறு சிலரும் கூட இப்படி அட்டையில் தலைப்பையோ பெயரையோ மாற்றி அச்சடித்து நூலக ஆணைக்கு கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதே ஆதாரத்துடன் பார்க்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...