முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்-பெண் விஷச்சூழல்

ஆண்களைப் போல மாறும் விருப்பமும் அதனாலே ஆண்களிடத்து பொறாமை, பதற்றம், அச்சம், ஈர்ப்பும்  கொள்வதுமே இன்றைய நவீனப் பெண் மனம். பிராயிடிய மொழியில் சொல்வதானால் அப்பாவை வெறுத்துக் கொன்று மேலேற முடியாமல் அவர் குறித்த விருப்பமாக அதை மாற்றிக்கொள்கிறார்கள். எல்லா ஆண்களையும் அதிகாரக் குறியீடாகக் கண்டு போலச் செய்வது எப்படியெனவும், தமது தனித்துவத்தை தக்க வைப்பது எப்படியென்றும் தத்தளிக்கிறார்கள் என லக்கானிய மொழியிலும் இதை விளக்கலாம். பெண்கள் பரஸ்பரம் பொறாமைகொண்டு மோதுவதும் ஒற்றுமையின்றி இருப்பதும் தப்பில்லை. அது ஒருவிதத்தில் தம்மைக் கொண்டாட, கவனித்துப் பாதுகாக்க உதவுகிறது. கூட்டுசேர்ந்து சுயத்தையும் சுய-பராமரிப்பையும் இழப்பதைவிட அது மேலானது. நீங்கள் எழுத்தாளர்களை, கலைஞர்களை, சிந்தனையாளர்களைப் பாருங்கள் அவர்களால் கூட்டத்தோடு கோவிந்தா போடமுடியாது. ஆனால் அப்படி இருந்தால் அதிகாரமும் பொருளாதார முன்னேற்றமும் சமூகப்பிரதிநுத்துவமும் கிடைக்காது. வறுமையில் தவிக்க நேரிடும். இருந்தாலும் ஆன்ம-ரீதியாக பெண்நிலையே மேலானது. ஆண்நிலை தமக்கும் பிறரும் விரோதமானது, ஆதிக்கமானது, சுரண்டலை சாத்தியப்படுத்துவது, சுருக்கமாக அது டாக்ஸிக்கானது.

 இந்த நூற்றாண்டில் பெரிய நெருக்கடியே பெண்கள் ஆண்களாக மாறி தம் தனித்துவத்தை இழப்பதே. இது ஏற்படுத்தும் அழுத்தத்தால் ஆண்கள் பரவலாக பெண்களை போலச் செய்கிறார்கள், வேலை விசயத்தில் மட்டும் ஆண்களைப் போல இருக்கிறார்கள். இப்படி இது ஒரு விஷச்சூழலை ஏற்படுத்திவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.