முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீழ்ச்சி


ஒரு சிந்தனையாளர், கோட்பாட்டாளர், அறிவுஜீவியின் வீழ்ச்சி அவர் தன் சயசிந்தனைக்காகவோ வளர்ச்சிக்காகவோ அன்றி செயல்படாமல் ஒரு இயக்கம், அமைப்பின் பிறழ்வுகளை நியாயப்படுத்த வேலை செய்யும்போது, அதற்கான செயல்திட்டமாக தன் சிந்தனைகளைப் போலியாக பயன்படுத்தும்போது ஆரம்பிக்கிறது. இதைவிட மோசமான வீழ்ச்சி அவர் பெரும் பணமும் புகழும் படைத்த மனிதர்களை தன் பிரதிநிதி எனக் கருதி அவர்களுடைய ஆபாசங்களை மூடிமறைக்க, பாராட்ட தன் அறிவிஜீவி பிம்பத்தைப் பயன்படுத்தும்போது நடக்கிறது. அவர் மெல்ல மெல்ல தன்னை இழந்து ஒரு மாய அதிகார வலையின் கைப்பாவையாகிறார். அவரது குரலுக்கும் மனசாட்சிக்கும் தொடர்பறுந்து போகிறது. முக்கியமாக அவர் அப்பழுக்கற்றவராக தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காட்டிக்கொள்ளவும், தான் பாதிக்கப்பட்டவர் என நிரூபிக்கவும் போராடத் தொடங்குவார். ஊழல்வாதிகளின், சீரழிவாளர்களின் அறிவுலக அடியாளாக மாறுவார்.
தமிழில் பெரும்பாலும் இது சினிமா, அரசியல் தளங்களில் நடக்கிறது. சினிமாவிலோ அரசியலிலோ நேரடியாகப் பங்கேற்பதை, அதனால் அத்துறைகளை ஆதரிப்பதை நான் கூறவில்லை. வெளியில் இருந்து இத்துறைகளின் ஊழல்களை, சமரசங்களைக் கூவிக்கூவி ஆதரிக்க தம் அறிவுஜீவித்தனத்தை, வாசிப்பை, மொழித்திறனை பயன்படுத்துவதை, ஆனால் தம்மை அத்துறைகளுக்கு வெளியே வைத்து அப்பழுக்கானவராக வைத்துக்கொள்ளும் இரட்டை வேடக்காரர்களைச் சொல்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.