முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2024 எப்படி இருந்தது?



இந்த ஆண்டுக் கணக்கே போலியானதுதானோ என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஆம் என்றேன். ஆறுதலுக்காகவோ தன்னிரக்கத்துக்காகவோ பெருமைக்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். நமது சமீபத்தைய அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளலாம். நான் பின்னதற்காகவே 2024ஐப் பற்றி யோசித்தேன்.

ஒரு நாவலை எழுதி முடித்தேன், சில கட்டுரைகளை எழுதினேன், நல்ல புத்தகங்களை, கதைகள், கட்டுரைகளைப் படித்தேன் என்பதைத் தவிர குறைவாக எழுத்தில் பணியாற்றியதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரல்-மே மிக மோசமானதாக, கடும் நெருக்கடி கொண்டதாகவும், அதன் தாக்கம் அடுத்தடுத்த மாதங்களிலும் இருந்தது. வேலை, பணம் போன்ற கவலைகளும் அச்சமும் அலைகழித்தன. அதிலிருந்து என்னைக் கரைசேர்த்தது எழுத்துதான். ஆனால் எழுத்தை ஒரு தீர்வாக, மருந்தாக பயன்படுத்தக் கூடாது, எழுத்தை அதனளவில் ஏற்று ஈடுபட வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் இப்படித்தான் என் வாழ்க்கை இருந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களும் மேற்சொன்ன காரணங்களால் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
எழுத்துக்கு வெளியே குத்துச்சண்டைப் பயிற்சி, பவர் லிப்டிங் பயிற்சி மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் புத்துணர்ச்சியான பல தருணங்கள். இந்த செமஸ்டர் திரைக்கதை எழுதக் கற்பிக்கும் வகுப்பொன்றை கல்லூரியில் நடத்துகிறேன். அது பெரும் உற்சாகம் அளிக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி கதைகூறலை ஜாலியாக மாற்ற முயல்கிறேன். மாணவர்களிடம் நல்ல வரவேற்பு.
பாதி எழுதி முடித்த மூன்று நாவல்களும், திருத்தி முடிக்க வேண்டிய நாவலொன்றும் உள்ளன. அவற்றை 2025-26 ஆம் ஆண்டுகளில் முடிக்கவேண்டும்.
எனக்குச் சிறிது அதிர்ஷ்டமிருந்தால் வருமாண்டில் என் நடைமுறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அப்போதுதான் என்னால் முழுமையாக எழுத்தில் ஈடுபட முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.