முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏரோப்பிளேன் வேணுமா?

என்னுடைய நூல்கள் இரண்டும் இப்புத்தகக் கண்காட்சியில் தாமதமாகவே வருவதால் நானும் தாமதமாகவே வருவேன் என நினைக்கிறேன். வந்தால் நாலு படைப்பாளிகளையும் சில வாசகர்களையும் காண்பது உற்சாகமூட்டும்தான். ஆனால் வருடாவருடம் பேருந்தில் அலுங்கிக் குலுங்கி நசுங்குவது போல சின்ன பெட்டிக்குள் உறங்கிக்கொண்டு வரவேண்டும், எதாவதொரு பாடாவதி லாட்ஜில் தங்கவேண்டும் என்று நினைத்தாலே கசப்பாக இருக்கிறது. விடுப்பெடுக்க வேறு நிறைய எத்தனம் தேவை. அலுப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? 

கடந்த சில மாதங்களில் மட்டுமே இரண்டு புத்தக விழாக்கள் பெங்களூரில் நடந்துவிட்டன. என்னையோ என் வயதையொத்த பிற பெங்களூர் வாழ் எழுத்தாளர்களையோ ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கவில்லை. வருடாவருடம் ஒரே குழுவைத்தான் அழைப்பார்கள். நாங்கள் இந்த நகரத்தில் இன்னொரு இருபதாண்டுகள் வாழ்ந்தால் எங்களைத் தொடர்ந்து அழைப்பார்கள், அப்போது எழுதும் இளைஞர்களை விட்டுவிடுவார்கள். சரி மூத்த எழுத்தாளர்களிலும் பலதரப்பட்டவர்களை அழைக்க மாட்டார்கள். ஒரே தெருக்காரர்கள் திரும்பத் திரும்ப அப்பகுதியில் நடக்கும் கல்யாணத்துக்குப் போவதைப் போலவே நடக்கும். மூன்று சட்டைப் பேண்டுகளை பெட்டியில் பேக் செய்து கிளம்பினால்  ஒரே படைப்பாளியே இரண்டு வாரங்களில் மூன்று நான்கு விழாக்களில் பங்கேற்று ஒரே மாதிரிப் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட முடியும். இவர்கள் கூப்பிட்டால் அதைப் பார்த்து அவர்கள் அழைப்பார்கள், அவர்கள் அழைப்பதால் இவர்கள் கூப்பிடுவார்கள். கவுண்டமணி ஒரு படத்தில் மாடியில் ஒரு மனைவியையும் கீழ்த்தளத்தில் மற்றொரு மனைவியையும் வைத்துக்கொண்டு அங்கிங்கே தாவி படாதபாடு படுவதைப் போல ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களும் எவ்வளவுதான் செய்வார்கள்! ஒருங்கிணைப்பாளர்களைத்தான் சொல்லவேண்டும்.

 இலக்கியத் திருவிழாக்கள் தமிழைப் பொறுத்தமட்டில் எழுத்தை அல்ல வயதையும் தொடர்புகளையும் சார்ந்து படைப்பாளிகளை அழைக்கும் விவகாரமாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் குழுக்களைக் கட்டமைத்து அரசியல் செய்து தொடர்புகளால் எல்லா இடங்களிலும் அழைக்கப்படுபவர்கள் "போய் உன் தகுதியை வளர்த்துக் கொள், அழைக்கவில்லை என்று புலம்பாதே" என்று எகத்தாளம் செய்கிறார்கள். இவர்கள் காலில் விழுந்தும் இடம்பிடிக்கும் தகுதியே வேண்டாம். 

 மேலும், இந்த சனியன்கள் மீது வரவர கோபமே வரமாட்டேன் என்கிறது. ஒரு படத்தில் கவுண்டமணி காதுகேளாத ஒருவரிடம் பேச முயன்று பர்ஸைப் பார்த்தீங்களா என்று கேட்டு ஆட்டோக்காரரா என்று புரிந்துகொள்ளப்பட்டு வாழ்க்கை வெறுத்துப் போய் "காது கேட்காதா காதே இல்ல டாக்டர்" என்பாரே அப்படித்தான் இதுவும் வேடிக்கையாகி விட்டது. இவர்களிடம் நான் ஒரு எழுத்தாளர் என்றால் "என்ன ஏரோபிளேனில் போகணுமா?" என்று தமாஷ் பண்ணுவார்கள். இலக்கிய வாசிப்பென்றால் ஒன்றிரண்டு வெப்சைட்டுகளை வாசிப்பதும் குழு அரசியல் செய்வதும் தான் எனத் தீவிரமாக நம்புகிறார்கள். அதைத் தாண்டி ஒன்றுமே தெரியாது.

 அதனால் சென்னை புத்தக விழாவில் பதிப்பாளரின் அரங்கில் போய் அமர்வதே வாசகர்களைச் சந்திக்க ஒரே வழியாக உள்ளது. அங்கே யாரும் அழைக்கவும் தேவையில்லை, தடுக்கவும் போவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...