முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழி தேவையில்லாத சமூகம்


பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்பதில் இருந்து அரசு வழுவிக்கொள்ள அவரவர் தேவைக்கேற்ப பாடங்களைத் தேர்வு பண்ணும் 'உணவக மெனுகார்ட்' நடைமுறை வரும், பல்வேறு பாடத்திட்டங்கள், கஸ்டமைஸ்ட் பாடத்திட்டங்கள் வரும். 12 வயதுக்கு மேல் தொழில் செய்து கல்வி கற்கும் சூழல் ஊக்கப்படுத்தப்படும். 

இந்த களேபரத்தின் இடையே, மாணவர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய கட்டாய மொழிக் கொள்கைகள் சாத்தியமாகாது. மாணவர்கள் தமக்குத் தேவையெனக் கருதும் மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது மாறிக்கொண்டே வரும். பெங்களூரில் பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு கன்னடாவில் வாசிக்கத் தெரியாது. எதிர்காலத்தில் இந்தி, சமஸ்கிருதம், உள்ளூர் மொழி எதையும் படிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தைக் கூட செயலியே நமக்காக எழுதும் எனும்போது அதையும் முறையாகப் படிக்க மாட்டார்கள். முழுக்க மாறுபட்ட வினோதமான மேலோட்டமான சமூகம் ஒன்று உருவாகும். இப்போதைய தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினாலே இப்போக்கின் சாயலை உணர முடியும். 

 சி.பி.எஸ்.ஸி கல்வித்திட்டம் பற்றி அண்ணாமலை சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஒரே மாறுபாடு சி.பி.எஸ்ஸியே எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது என்பது. ஒன்றிய அரசின் பண்பாட்டு தேசியம் தற்காலிக மேகமூட்டம் மட்டுமே. உ.தா., புதிய கல்விக்கொள்கைக்குப் பிறகு முதலாமாண்டு மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடம் இருக்கும். மாநில மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும்படி பு.க.கொ பெயருக்கு கூறினாலும் அதற்கு எதிராகவே உள்ளது. திறன்சார் கல்வி, வேலை உத்தரவாதம் அளிக்கும் கல்வி எனும் பெயரில் மொழியை, பண்பாட்டுப் பாடங்களை அது ஒழித்து வருகிறது. இந்தியா முழுக்க எத்தனை மொழியாசிரியர்கள் இப்போது உள்ளார்கள், எத்தனை பேர்களை அரசு புதிதாக வேலையில் அமர்த்துகிறது எனக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். இன்று தம் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கவே பெற்றோர்கள் பெரும்பாடு பட்டாக வேண்டும் 

பாஜகவும் திமுகவும் மோதிக்கொள்வது ஒரு தற்காலிக முரண்பாட்டுக்காகவே. கல்வியை தனியாரிடம் முழுமையாகக் கொடுக்காமல் அரசே அதில் பங்குதாரராக இருந்தால் மட்டுமே இம்மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்து கொள்கை வகுக்க முடியும். மொழிக்கொள்கைக்கு முன்பு அதற்குத் தோதான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இப்போதைக்கு கவனம் திருப்பும் விவாதம் மட்டுமே இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...