முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழி தேவையில்லாத சமூகம்


பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்பதில் இருந்து அரசு வழுவிக்கொள்ள அவரவர் தேவைக்கேற்ப பாடங்களைத் தேர்வு பண்ணும் 'உணவக மெனுகார்ட்' நடைமுறை வரும், பல்வேறு பாடத்திட்டங்கள், கஸ்டமைஸ்ட் பாடத்திட்டங்கள் வரும். 12 வயதுக்கு மேல் தொழில் செய்து கல்வி கற்கும் சூழல் ஊக்கப்படுத்தப்படும். 

இந்த களேபரத்தின் இடையே, மாணவர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய கட்டாய மொழிக் கொள்கைகள் சாத்தியமாகாது. மாணவர்கள் தமக்குத் தேவையெனக் கருதும் மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது மாறிக்கொண்டே வரும். பெங்களூரில் பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு கன்னடாவில் வாசிக்கத் தெரியாது. எதிர்காலத்தில் இந்தி, சமஸ்கிருதம், உள்ளூர் மொழி எதையும் படிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தைக் கூட செயலியே நமக்காக எழுதும் எனும்போது அதையும் முறையாகப் படிக்க மாட்டார்கள். முழுக்க மாறுபட்ட வினோதமான மேலோட்டமான சமூகம் ஒன்று உருவாகும். இப்போதைய தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினாலே இப்போக்கின் சாயலை உணர முடியும். 

 சி.பி.எஸ்.ஸி கல்வித்திட்டம் பற்றி அண்ணாமலை சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஒரே மாறுபாடு சி.பி.எஸ்ஸியே எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது என்பது. ஒன்றிய அரசின் பண்பாட்டு தேசியம் தற்காலிக மேகமூட்டம் மட்டுமே. உ.தா., புதிய கல்விக்கொள்கைக்குப் பிறகு முதலாமாண்டு மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடம் இருக்கும். மாநில மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும்படி பு.க.கொ பெயருக்கு கூறினாலும் அதற்கு எதிராகவே உள்ளது. திறன்சார் கல்வி, வேலை உத்தரவாதம் அளிக்கும் கல்வி எனும் பெயரில் மொழியை, பண்பாட்டுப் பாடங்களை அது ஒழித்து வருகிறது. இந்தியா முழுக்க எத்தனை மொழியாசிரியர்கள் இப்போது உள்ளார்கள், எத்தனை பேர்களை அரசு புதிதாக வேலையில் அமர்த்துகிறது எனக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். இன்று தம் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கவே பெற்றோர்கள் பெரும்பாடு பட்டாக வேண்டும் 

பாஜகவும் திமுகவும் மோதிக்கொள்வது ஒரு தற்காலிக முரண்பாட்டுக்காகவே. கல்வியை தனியாரிடம் முழுமையாகக் கொடுக்காமல் அரசே அதில் பங்குதாரராக இருந்தால் மட்டுமே இம்மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்து கொள்கை வகுக்க முடியும். மொழிக்கொள்கைக்கு முன்பு அதற்குத் தோதான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இப்போதைக்கு கவனம் திருப்பும் விவாதம் மட்டுமே இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...