Skip to main content

காலமும் ஒழுக்கமும்

புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள். 

முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதராகவே இருக்க முடியும். புத்தரும் அப்படியே மரித்திருக்க முடியும். அதனாலே புத்தரின் கால் பாதம் வழிபடப்படுகிறது - நம்மைப் போல சாதாரணமாக மட்டுமே இருக்க முடிந்தவர், அதனாலே அவர் மரணமும் உற்றார். பௌத்தம் அதன் வெவ்வேறு வடிவங்களில், பள்ளிகளில் வளர்ந்தபோது, வெகுமக்கள் மதமாகியபோது புத்தருக்கு ஆன்மா உண்டு எனும் கருத்தை சிலர் எட்டினர். ஏனெனில் ஆன்மா இல்லாதபோது, முக்தி நிலையற்றதாகும்போது மத நிறுவனங்களைக் கட்டமைக்க அது உதவாது. மெல்லமெல்ல பௌத்தம் வைதீகத்துக்கு அருகில் வந்தது அல்லது பௌத்தத்தை தழுவி உருவான வைதீகத்துடன் அது கைகோர்த்தது அப்படியே. இன்றும் வைதீக, கிறித்துவ மதங்களைச் சார்ந்தோர் ஆன்மா சார்ந்த நிரந்தர முக்தியின் பாலான சாராம்சவாத பௌத்தத்தையே விரும்புகிறார்கள். 

ஆனால் அசலான பௌத்தம் எதையும் நிரந்தரமாக, நிபந்தனைக்கு அப்பாலானதாக, முழுமையாக உருமாற்றுவதாக, நீடிப்பதாக ஏற்காது. அப்படி ஏற்காமையே விடுதலை என அது சொல்லும். புத்தரே நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் மனநிலைதான். நிபந்தனைக்குட்பட்டதெனத் தோன்றும் நிபந்தனையினால் ஆன நிலை. 

பௌத்தம் கோரும் ஒழுக்கமும் அறமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதே - ஒழுங்கீனம் சூனியமானது எனும்போது கிடைக்கும் தெளிவு அந்த சூனியத்தை மேலும் பற்றிக்கொள்ளாதிருக்கும் பொருட்டு சுயக்கட்டுப்பாட்டை விதிக்கக் கோருகிறது. கெட்டுப் போன உணவெனத் தெரிந்தபின் சாப்பிடாமல் தவிர்ப்பதைப் போல. இது மிகமிகச் சிக்கலானது. நம் மனத்திலும் உடலிலும் காலமே செயல்படுகிறது - காலம் என்பது காரண காரிய விசையின் உருவகம். அதனாலே நாம் எதாவது ஒன்றை நோக்கி சதா ஈர்க்கப்படுகிறோம் - நம் கண்கள், நாசி, புலன்கள், நம் உடல், சிந்தனை, உணர்வுகள் காலத்துள் இருப்பதாலே அசைவுற்றபடி உள்ளன. நீங்கள் காலத்தை சூனியமாக்கினால் அசைவு அர்த்தமிழக்கும். அப்போது நாம் விளையாட்டாக ஜாலியாக அசைய வேண்டியிருக்கும், சும்மா ஒரு இலை அசைவதைப் போல. இது மொழியின் அமைப்புக்கு ஏற்றது அல்ல, இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. காலம் என்பது 'ஒழுங்கீனத்தின்' இன்னொரு வடிவமெனில் காலத்துள் இருக்கும் நாம் 'ஒழுங்கீனத்தால்' அமைந்தவர்கள் ஆகிறோம். இவ்வளவு சிக்கலான ஒன்றை புலனடக்கம் என சுருக்கிக் கொள்ள முடியாது - கால-அடக்கமே புலனடக்கம். எனில் நாம் எங்கு சென்று அதை நாட முடியும்? நம் பாலுறுப்பு காலத்தினுள் அமைந்திருப்பதால் நம்மால் பாலுறுப்பை எப்படிக் கட்டுப்படுத்த இயலும்?

இக்கேள்விகளுக்கு அவரவருக்கான பதில்களை அவரவரே கண்டடைய முடியும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...