முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலமும் ஒழுக்கமும்

புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள். 

முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதராகவே இருக்க முடியும். புத்தரும் அப்படியே மரித்திருக்க முடியும். அதனாலே புத்தரின் கால் பாதம் வழிபடப்படுகிறது - நம்மைப் போல சாதாரணமாக மட்டுமே இருக்க முடிந்தவர், அதனாலே அவர் மரணமும் உற்றார். பௌத்தம் அதன் வெவ்வேறு வடிவங்களில், பள்ளிகளில் வளர்ந்தபோது, வெகுமக்கள் மதமாகியபோது புத்தருக்கு ஆன்மா உண்டு எனும் கருத்தை சிலர் எட்டினர். ஏனெனில் ஆன்மா இல்லாதபோது, முக்தி நிலையற்றதாகும்போது மத நிறுவனங்களைக் கட்டமைக்க அது உதவாது. மெல்லமெல்ல பௌத்தம் வைதீகத்துக்கு அருகில் வந்தது அல்லது பௌத்தத்தை தழுவி உருவான வைதீகத்துடன் அது கைகோர்த்தது அப்படியே. இன்றும் வைதீக, கிறித்துவ மதங்களைச் சார்ந்தோர் ஆன்மா சார்ந்த நிரந்தர முக்தியின் பாலான சாராம்சவாத பௌத்தத்தையே விரும்புகிறார்கள். 

ஆனால் அசலான பௌத்தம் எதையும் நிரந்தரமாக, நிபந்தனைக்கு அப்பாலானதாக, முழுமையாக உருமாற்றுவதாக, நீடிப்பதாக ஏற்காது. அப்படி ஏற்காமையே விடுதலை என அது சொல்லும். புத்தரே நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் மனநிலைதான். நிபந்தனைக்குட்பட்டதெனத் தோன்றும் நிபந்தனையினால் ஆன நிலை. 

பௌத்தம் கோரும் ஒழுக்கமும் அறமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதே - ஒழுங்கீனம் சூனியமானது எனும்போது கிடைக்கும் தெளிவு அந்த சூனியத்தை மேலும் பற்றிக்கொள்ளாதிருக்கும் பொருட்டு சுயக்கட்டுப்பாட்டை விதிக்கக் கோருகிறது. கெட்டுப் போன உணவெனத் தெரிந்தபின் சாப்பிடாமல் தவிர்ப்பதைப் போல. இது மிகமிகச் சிக்கலானது. நம் மனத்திலும் உடலிலும் காலமே செயல்படுகிறது - காலம் என்பது காரண காரிய விசையின் உருவகம். அதனாலே நாம் எதாவது ஒன்றை நோக்கி சதா ஈர்க்கப்படுகிறோம் - நம் கண்கள், நாசி, புலன்கள், நம் உடல், சிந்தனை, உணர்வுகள் காலத்துள் இருப்பதாலே அசைவுற்றபடி உள்ளன. நீங்கள் காலத்தை சூனியமாக்கினால் அசைவு அர்த்தமிழக்கும். அப்போது நாம் விளையாட்டாக ஜாலியாக அசைய வேண்டியிருக்கும், சும்மா ஒரு இலை அசைவதைப் போல. இது மொழியின் அமைப்புக்கு ஏற்றது அல்ல, இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. காலம் என்பது 'ஒழுங்கீனத்தின்' இன்னொரு வடிவமெனில் காலத்துள் இருக்கும் நாம் 'ஒழுங்கீனத்தால்' அமைந்தவர்கள் ஆகிறோம். இவ்வளவு சிக்கலான ஒன்றை புலனடக்கம் என சுருக்கிக் கொள்ள முடியாது - கால-அடக்கமே புலனடக்கம். எனில் நாம் எங்கு சென்று அதை நாட முடியும்? நம் பாலுறுப்பு காலத்தினுள் அமைந்திருப்பதால் நம்மால் பாலுறுப்பை எப்படிக் கட்டுப்படுத்த இயலும்?

இக்கேள்விகளுக்கு அவரவருக்கான பதில்களை அவரவரே கண்டடைய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...