முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படித்த வேலை பார்க்கும் தகுதியுள்ள மனைவிக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுக்கலாமா?


 

நல்ல தீர்ப்பு! படித்து வேலையில் இருக்கும் அல்லது உயர்படிப்பு முடித்த பெண்களுக்கு பராமரிப்புத் தொகையை மாதாமாதம் கொடுப்பது அவசியமில்லை. பட்டப்படிப்பை முடிக்காதவர்களுக்கு கொடுக்கலாம், அது நியாயம். அதுவும் கணவர் நன்கு படித்து அதிகம் சம்பாதிக்கையில் மட்டுமே. கல்யாணத்துக்காக ஒரு பெண் தன் தொழில் வாழ்வை, அனுபவத்தை அத்தனைக் காலம் தியாகம் பண்ணியதால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனும் வாதம் தவறானது - அவருக்கு மாதம் 50,000-100000 சம்பாதிக்கும் வாய்ப்பிருந்து அதைக் கணவருக்காக விட்டொழித்தார் எனில் அது அவரது தவறே. கல்யாண வாழ்க்கை ஒரு சமரசம் - வேலையை சில தேவைகளுக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பது அவர் முடிவுதான். அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். கல்யணத்தின்போது கணவர் வற்புறுத்தினால் அந்த கணமே அவரை விவாகரத்து பண்ணலாமே. அல்லது கல்யாணத்திற்கு முன்பே பேசி முடிவு செய்யலாமே. இம்மாதிரி தனிப்பட்ட முடிவுகளுக்காக வாழ்நாள் முழுக்க பராமரிப்புச் செலவைக் கோருவது நியாயமற்றது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்க்கரீதியாக, கல்வித் தகுதி சார்ந்து இதைப் பார்ப்பது ஒரு நல்ல மாற்றம்.

தகுதியில்லாதவர்களுக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுப்பதிலுள்ள வேறு இரு சிக்கல்களையும் குறிப்பிட வேண்டும்:
பணம் கொடுப்பதை வாழ்நாளில் எப்போதும் தவறவிட்டாலும் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் ஆண்கள் இதைத் தவிர்க்க வேறுவழியின்றி பெரும் செட்டில்மெண்டைத் தர முன்வருவார்கள். இதற்காகவே சிலர் இப்போது இடைக்கால பரமாரிப்புத் தொகை கேட்டு விண்ணப்பித்து பெற்றும் விடுகிறார்கள். இது ஆண்களை மிரட்டி சமரசத்துக்குப் பணிய வைக்க உதவுகிறது. இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் அசமத்துவத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்தை அதன் நடைமுறைப் பயன்பாட்டில் பாரபட்சமாக்குகிறது.
அடுத்து, பராமரிப்புத் தொகையை ஒரு பெண் கோரும்போது அவரது சொத்துக்கணக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையை நீதிமன்றம் சோதிப்பதில்லை. அதை நிரூபிக்கும் பொறுப்பு ஆணுக்கு வந்துவிடுகிறது. அதேபோல, ஆன்லைனில் வேலை செய்யும் பெண் தான் வேலையில் இல்லையென்று கூறினால் அவரது கணவரால் அதை நிரூபிக்க முடியாது. வேலையில் இல்லாத பெண் பராமரிப்புத் தீர்ப்புக்குப் பின்பு வேலை பெற்று சம்பாதித்தாலும் அதை அவரிடம் இருந்து பிரியும் கணவரால் சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாது. விவாகரத்துக்குப் பின்பு அவரவர் வழியில் தனித்தனி உலகங்களில் வாழ்கிற, வெவ்வேறு நகரங்களில் இருக்கிற தம்பதியினருக்கு இது சிக்கல். சதா முன்னாள் மனைவியை கணவர் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் வேலைக்குப் போகிறாரா இல்லையா என்பதை ஆள் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும். அதை ஆதாரத்துடன் நீதிமன்றத்திடம் கொண்டு சேர்த்தாலே நீதிமன்றம் தீர்ப்பை ரத்துப் பண்ணும். பட்டறிவு இல்லாத, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இம்மாதிரி ஏமாற்ற வாய்ப்புகள் இருக்காது. மேற்தட்டினர் சுலபத்தில் செட்டில்மெண்ட் கொடுத்து முடித்துவிடுவார்கள். இது மேல்மத்திய, மத்திய வர்க்கப் பிரச்சினையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.