The Talented Mr Ripley 1955இல் பேட்ரிஷியா ஹைஸ்மித்தால் எழுதப்பட்டு வெளியாகி வெற்றிபெற்ற த்ரில்லர் நாவல். அது மூன்று முறைகள் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் "நான்" எனும் பெயரில் வெளிவந்தது. அந்நாவலின் இணையத்தொடர் "Ripley" நெட்பிளிக்ஸில் வந்துள்ளது - எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக பிரதான பாத்திரம் ரிப்ளி ஒவ்வொரு காட்சியிலும் என்ன திட்டத்தை மனத்தில் வைத்திருக்கிறார் என்று நமக்குப் புரியாதவிதத்தில் காட்சிகளை எழுதியிருப்பார்கள். இது திரில்லர் கதையை சுவாரஸ்யமாக்க முக்கியமான உத்தி. ஒவ்வொரு 20 நிமிடமும் இவர் இதைத்தான் உத்தேசித்து அமைதியாக இருந்தாரா எனத் திகைப்படைவோம். அதை வெளிப்படுத்தாமலே கதையை நகர்த்துவது தனித்திறமைதான். இத்தொடரைப் பரிந்துரைத்த அருள் எழிலனுக்கு நன்றி.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்