முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலையற்றுப் போகும் மனிதன்



 நான் அவளை உணவகத்தில் சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் முன்கூட்டியே சென்று காத்திருப்பேன். இது அவளாக சொல்லிச் செய்ததல்ல. நானாக செய்தேன். அவள் வந்ததும் கால் மேல் காலை இட்டபடி தன் பார்வையைத் தாழ்த்தி என்னை இனி எனக்கு உயர்வதற்கு இடமே, வானையும் கடந்து வளர்ந்து சென்றுவிட்ட அடிமுடி அறியா பிறவி நான் என்பதாகப் பார்ப்பாள். அடுத்து உடனே இயல்பாகி புன்னகைப்பாள். நான் உடனே உடைந்து விடுவேன். அவள் இப்படி செய்யும்போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்த்துவிடும். இப்படி அவளிடம் ஓராயிரம் பாவனைகள் உண்டு. அவள் வந்து அமர்ந்ததும் நான் அவளது காலை என் கையால் தொட்டு விரலில் முத்தமிடுவது வழக்கம். பப்களில் நான் மண்டியிட்டு அவளது கால் பெருவிரலைச் சப்புவதும் உண்டு, அவள் மெல்ல உதைக்கும்போது என் தலை மேஜையின் விளிம்பில் படும், உச்சம் பெற்றதைப்போல சிரிப்பாள், அது அவ்வளவு அற்புதமான ஒரு தருணம்.

நாங்கள் முதன்முதலாக உணவகத்தில் சந்தித்தது ஒரு மகத்தான நிகழ்வு. என்னால் அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது.
அவள் நகரத்துக்கு வந்ததும் தன் தோழியின் விடுதி அறையில் தன் பொருட்களை வைத்து உடைமாற்றிவிட்டு, புர்காவின் விளிம்புக்கு மேலாக தன் அழகான ஆடையின் அலங்காரம் தெரியும்படி எடுத்துவிட்டபடி, முகத்தில் கிளிட்டரும், இளஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் அணிந்து என்னை விடுதிக்கு எதிரே உள்ள மோமோஸ் கடை வாசலில் சந்தித்தபோது நாங்கள் சந்தித்த பத்தாவது நிமிடத்தின் தொடர்ச்சியே அது என அவளிடம் சொன்னேன். அவள் தானும் அப்படியே உணர்ந்ததாகச் சொன்னாள்.
இரண்டாவது நாளே அவளை ஓர் உயர்தர உணவகத்து அழைத்தேன். நான் பப்பென்றுதான் சொன்னேன். அவள் அதற்கு “உன்னை அங்கே டான்ஸ் பண்ணுகிறவர்கள் மிதித்துவிட்டால் என்ன செய்வது ஹிட்லர்?” எனச் சிரித்தாள். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன். பெண்களின் கால்கள் கவனமானவை. அப்புறம் ஸ்டாப் காலிங் மீ ஹிட்லர்.” “ஒருவேளை நீ வழுவழுப்பான காலொன்றில் தடுக்கி விழுந்து பல நடனமாடும் கால்களிடம் ஒரு புட்பாலைப்போல சிக்கிக்கொண்டால்? நான் எப்படி உன்னைக் காப்பாற்றி என் பக்கம் கொண்டு வருவது? எனக்கு பைசைக்கிள் கிக் தெரியாதே.” நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்று சொன்னதற்கு “இளம்பெண்கள் உன்னைப் பயன்படுத்துவதற்காக அழைத்துப்போய் அங்கே யாரையாவது பிடித்துக்கொள்வார்கள். நான் அப்படி அல்ல. நீ வந்தால் உன் மொத்த பொறுப்பும் எனக்குத்தான்.” என்பாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்று பிரசித்தமான உணவகம் ஒன்றை சொன்னேன். நான் மெல்லமெல்ல அழுவதை முடித்தபோது பரிசாகரர் ஒரு தட்டில் முழு கோழி தந்தூரியை வெண்துணி மூடியால் மறைத்துக்கொண்டுவந்து எங்கள் முன்னால் திறந்து காட்டினார். ஆவி பறந்து மேலெழுந்து கலைகிறது. அவள் “வாவ்” என்றாள். அங்கே என் தலை வீற்றிருந்தது. நானும் அவளுமாக என் தலையைக் கத்தியாலும் முள்கரண்டியாலும் வெட்டியெடுத்து பரஸ்பரம் ஊட்டினோம். என் தசை எவ்வளவு சுவையாக இருக்கிறது, அதுவும் கன்னக் கதுப்பு, அதற்கு மேலே உள்ள சிறிய எலும்புகள், பின்னந்தலை ஆஹா ஆஹா. ஒரு மனிதன் தலையற்றுப் போகும்போது ஏன் இவ்வளவு பரவசத்தில் ஆர்ப்பரிக்கிறான்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.