முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிரத்னம் - உணர்வு மொழியில் இருந்து தன்னையே 'வெளியேற்றியவர்'






மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒரு சுற்றுலாப் பிரதேசத்தைப் பார்ப்பதைப் போலக் காண வைக்கும் படமே. மணிரத்னத்தின் வரவுடனே சினிமா கதையில் இருந்தும், பாத்திரத்தின் உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் இருந்து துண்டிக்கப்பட்டு "வெளியேற்றப்பபடுகிறது". அத்துடன் பார்வையாளர்களும் கதைக்கும், பாத்திரத்தின் பிரச்சினைகளுக்கும் அப்பாலிருந்து காட்சிகளை ரசிக்கப் பழகுகிறார்கள். இதை ஒரு fetishism என்று சொல்லலாம் (மார்க்ஸ் சொல்வதுபடி பார்த்தால் ஒரு பண்டத்தின் மதிப்பை பணத்தின் வழியாக சந்தை வெளியேற்றி அதை நேரடி மதிப்பற்றதாக்குவது; செக்ஸில் ஒரு பெண்ணின் பாதத்தில் சுகத்தைக் கண்டு அவளது ஆளுமையை, முகத்தை நிராகரிப்பது - இதைப் போல சினிமாவை பிரதான பாத்திரத்தின் அகத்துக்கு அப்பால் ரசிப்பது.). மணிரத்னத்துக்கு இணையாக இதைத் தமிழ்ப் புனைவில் செய்தவர் என்று சுஜாதாவைச் சொல்லலாம். அதனாலே இருவரும் இணையும்போது அது பொருத்தமாக வெற்றிகரமாக அமைந்தது. அவர்கள் இருவரின் கச்சிதமும் ஸ்டைலும் 'வெளியேற்றத்தில்' இருந்தே கிளைக்கின்றன.

இன்று "சாய் வித் சித்ராவில்" இயக்குநர், விமர்சகர், திரைப்படக் கல்வியாளர் ஹரிஹரனின் நேர்முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஹரிஹரன் இதை அவதானித்ததைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன். அவர் மணிரத்னத்தை பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தின் பிள்ளை என்கிறார். மணிரத்னம் தன் காட்சிகளை விளம்பரப்படங்களின் பாணியில் அமைக்கிறார் என்கிறார். (ராஜீவ் மேனனும் தன் படங்களில் இதைச் செய்வதைக் காணலாம்.)
அவர் மேலும் மணிரத்னத்தைப் பற்றி ஒரு ஜோக் சொன்னார். மணிரத்னத்தின் கால்ப் உதவியாளர் அவரிடம் அவரது ஆட்டத்தின் பாங்கைப் பற்றிச் சொல்கிறார்: sir, your shots are beautiful. They are great. But your direction is wrong.

ஆனால் மணிரத்னத்துக்கு இணையாக நவீன உருவகங்களை கதாபாத்திரங்களின் மன-அமைப்புக்கும், ஆளுமைக்கும் சட்டகத்தில் கொண்டு வந்து, ஒளியமைப்பின் வழியாகக் காட்டியவர்கள் அவருக்கு முன்பு அனேகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். (பாலச்சந்தரும் பிறரும் கூட அவ்வளவு புதுமையாக, நவீனமாக காட்சி மொழியை அமைக்கவில்லை.) "இருவரில்" ஆனந்தன் மொட்டைமாடியில் இருந்து கீழே பார்க்கையில் அவர் பார்வையில் விரியும் ரசிகர்களின் திரளும், மெல்லமெல்ல அவன் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிற விதமும் முன்பு யாரும் தமிழில் காட்டாத காட்சி. இந்த அபாரமான கற்பனைக்கு ஈடான ஐடியாக்களும் தத்துவப் பார்வையும் இருந்திருந்தால் அவர் உலகளவில் கொண்டாடப்பட்டிருப்பார். அவர் தன்னையே "வெளியேற்றிக்" கொண்டார் என்று தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...