கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை உருவாக்குவது எப்படி என்று தெரியாததாலே என்று தோன்றியது. (திரைக்கதையில் இதை எப்படி செய்ய வேண்டும் என பாக்கியராஜ் தன் நூலில் சொல்லியிருப்பார்.) நான் என்னுடைய நாவல் எழுதும் வகுப்பில் பாத்திரங்களை உருவாக்குவது எப்படி என விளக்கும் போது இதை சொல்லிக் கொடுத்தேன்.
பாத்திர அமைப்புக்கும் பாத்திர இயல்புக்குமான வித்தியாசம் என்னவென்று விளக்கிக் கொண்டிருந்தேன். ஒருவர் வேலையில்லாத இளைஞர், இன்ன வயதுக்காரர், இன்ன வர்க்கம், சாதி, மதத்தை சேர்ந்தவர், இன்னவிதமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர், இப்படியான தோற்றம் கொண்டவர் எல்லாம் அவரது பாத்திர அமைப்புக்கு பொருந்தும். இதை ஒரு பாத்திரத்தின் வெளிக்கூடு என்று சொல்லலாம். இவற்றை பரிசீலித்தாலே கதை சட்டென நம் கதையில் வந்து விழுந்துவிடும். என்னிடம் வகுப்பில் ஏதாவது ஒரு தேசலான ஒற்றை வரியை தம் நாவலுக்காக கொண்டு வருவோரிடம் மேற்சொன்ன கேள்விகளை நான் கேட்டதும் ரத்தமும் சதையுமான ஒரு பாத்திரம் கண்முன் தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன்.
என் நாவல் வகுப்பில் இணைய தொடர்பு கொள்ளுங்கள்: 9790929153.
