முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறாமைப் பதிவு

 எனக்கு ஒரு விசயத்தில் சினிமாக்காரர்கள் மீது பொறாமை உண்டு - நாம் ஒரு நாவலை எழுதிவிட்டு அதைச் சநதைப்படுத்த தனியாக போராடிக்கொண்டு இருக்க வேண்டும். எதாவது இலக்கிய அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சிறிய வட்டத்துக்குள்தான் அது நிகழும். ஆனால் ஒரு சிறிய படமென்றாலும் அதற்கான புரொமோஷனுக்கு 30-50 லட்சங்களையாவது அவர்கள் செலவிட்டு கலாட்டா, சன் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் தொடர்ச்சியாக பேட்டியளிக்கிறார்கள். அனேகமாக எல்லா பத்திரிகைகளும் அதைச் சந்தைப்படுத்த உதவுகின்றன. கூடுதலாகச் சமூகவலைதளங்களிலும் சினிமா செய்திகளுக்கு கவனம் அதிகமாகக் கிடைக்கும். கூடுதலாக சொச்சம் பணமிருந்தால் யுடியூப் வாயர்களையும் விலைக்கு வாங்கலாம். இந்தச் சந்தைப்படுத்தல் செலவை பட்ஜெட்டில் இன்று உட்படுத்துவதால் பி.ஆர்.ஓ மூலம் அடுத்தடுத்து ஒருங்கிணைத்து விடுகிறார்கள். கூடுதலாக, இசை வெளியீடும், பாடல்களும் பெரிய விளம்பரம் - எப்படியெல்லாம் எல்லார் காதிலும் நுழைந்துவிடும். இதெல்லாம் நடந்து படம் ஓடினால் இலக்கிய பத்திரிகைகளும் பாராட்டி எழுதுவார்கள். இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தி மாலை சூட்டுவார்கள். படம் ஓடினாலும் இல்லாவிட்டாலும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். ஒருவர் தினமும் தனியாரில் போய் ஆடுமாடு மேய்த்து 5-10 ஆண்டுகளில் சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் நாற்பது நாட்களில் சம்பாதிப்பார்கள். (புகழெல்லாம் சொல்லவே வேண்டாம்.) என்னதான் படமெடுப்பதும், முதலீடு பெறுவதும் சவால்தான் என்றாலும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

ஒரு எழுத்தாளர் புத்தகத்தை எழுதி அது நன்றாக விற்று அவர் கையில் பணம் வரவே சில ஆண்டுகள் ஆகும். அதை வைத்து ஒரு பயணம் போகவோ நாலு நாள் நன்றாகச் சாப்பிடவோ முடியாது (சுதந்திரமாக விருப்பப்படி எழுத முடியும் என்பதைத்தாண்டி எதுவுமே இல்லை.) அதுவும் தமிழ்நாட்டில்.
ஒரு இயக்குநரோ நடிகரோ நினைத்தால் துணை முதல்வரையோ முதல்வரையோ நேரில் சந்திக்கலாம். வேண்டுகோள் வைக்கலாம். ஒரு எழுத்தாளர் நினைத்தால் - டிரம்ப் அளவுக்கு பயங்கரமான தொடர்புவலைகள் இல்லாதபட்சத்தில் - ஒரு அமைச்சரைக் கூட சுலபத்தில் பார்க்க முடியாது.
எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாக்காரர்களுக்கு பயங்கரமாக டப் கொடுப்பவர்கள் யுடியூப், இன்ஸ்டா பிரபலங்களே. எதிர்காலத்தில் அவர்கள் சினிமா பிரபலங்களின் இடத்தை எடுத்துக்கொள்ளவும், கட்சி ஆரம்பித்து எம்.பி ஆகவும் கூடும். தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பார்கள்.
நேற்று மெக்ஸிக எழுத்தாளர் அக்டாவியோ பாஸ் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் அவரது கட்டுரை நூல் ஒன்று வெளியான போது பத்து மில்லியன் பிரதிகள் விற்றது என்கிறார்கள். ஸ்பானிய மொழிக்காரர்கள் எவ்வளவு அறிவுக் காதல் கொண்டவர்கள் எனில் இவ்வளவு பெரும் தொகையில் ஒரு கட்டுரை நூல் அங்கு விற்க வேண்டும். நம் ஊரில் கோபிநாத்தாலும் திரைநட்சத்திரங்களாலும் மட்டுமே அது இயலும். இலக்கிய வாசிப்பு, பண்பாட்டு நாட்டத்தைப் பொறுத்தமட்டில் நமக்கு ஏதோ மரபணுக் கோளாறு உள்ளது.
எனக்கென்னமோ போன ஜென்மத்தில் நல்வினைகள் நிறைய செய்தவர்கள் இப்பிறவியில் சினிமாக்காரர்களாகிப் படமெடுக்கிறார்கள் என நினைக்கிறார்கள். போன ஜென்மத்தில் கேடு கெட்டவர்களாக இருந்தவர்களோ இலக்கிய வெறியுடன் தமிழ்நாட்டில் பிறந்து ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...