முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணைய முறைகேடு 1


 

ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியலைமைப்புச் சட்டநூலை வைத்து செய்த பிரச்சாரம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது அதைப் போல தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜக வென்றது போலி வாக்காளர்களை கோடிக்கணக்கில் உருவாக்கி ஓட்டுக்களைத் திருடியா என்று அவர் எழுப்பும் கேள்வி மக்களிடம் ஏற்கனவே உள்ள சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது. என்னைச் சுற்றிலும் பலரும் அதை விவாதிப்பதைக் காதால் கேட்கிறேன்.

ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளது என்பது நிச்சயம். ஆனால் அதன் பரப்பும் வீச்சும் என்ன என்பதை தேர்தல் ஆணையம் தரவுகளை பொதுவில் வைத்தால் மட்டுமே ஆய்வு பண்ணிக் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் செய்ய முடியாத காகிதங்களை பக்கம்பக்கமாக அலசி இந்த தரவுகளை ராகுலின் குழு எடுத்திருப்பதே இமாலய சாதனைதான். நியாயமாக இதை நம் ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் பாஜாவின் மசாஜ் பார்லர் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனக்கு ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே மாற்றுக் கருத்து உள்ளது: தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதை உறுதிபண்ண குற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது எனக் கேட்க வேண்டும். குற்றத்தின் மூலம் ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரமே. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்தே ஒன்றிய அரசுகள் எந்த accountabilityயும் இல்லாத கிட்டத்தட்ட சர்வாதிகாரங்களாகவே உள்ளன. எதிர்காலத்தில் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையத்தைத் தம் கைப்பாவைகளாக நடத்தமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...