முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணைய முறைகேடு 1


 

ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியலைமைப்புச் சட்டநூலை வைத்து செய்த பிரச்சாரம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது அதைப் போல தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜக வென்றது போலி வாக்காளர்களை கோடிக்கணக்கில் உருவாக்கி ஓட்டுக்களைத் திருடியா என்று அவர் எழுப்பும் கேள்வி மக்களிடம் ஏற்கனவே உள்ள சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது. என்னைச் சுற்றிலும் பலரும் அதை விவாதிப்பதைக் காதால் கேட்கிறேன்.

ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளது என்பது நிச்சயம். ஆனால் அதன் பரப்பும் வீச்சும் என்ன என்பதை தேர்தல் ஆணையம் தரவுகளை பொதுவில் வைத்தால் மட்டுமே ஆய்வு பண்ணிக் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் செய்ய முடியாத காகிதங்களை பக்கம்பக்கமாக அலசி இந்த தரவுகளை ராகுலின் குழு எடுத்திருப்பதே இமாலய சாதனைதான். நியாயமாக இதை நம் ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் பாஜாவின் மசாஜ் பார்லர் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனக்கு ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே மாற்றுக் கருத்து உள்ளது: தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதை உறுதிபண்ண குற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது எனக் கேட்க வேண்டும். குற்றத்தின் மூலம் ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரமே. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்தே ஒன்றிய அரசுகள் எந்த accountabilityயும் இல்லாத கிட்டத்தட்ட சர்வாதிகாரங்களாகவே உள்ளன. எதிர்காலத்தில் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையத்தைத் தம் கைப்பாவைகளாக நடத்தமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.