Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மொண்டெய்ன் - ஒழுங்கின் கொடுங்கோன்மை


 

மொண்டெய்ன் தனது On Experience எனும் கட்டுரையில் வழக்கறிஞர்கள் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றுக்கு மத்தியஸ்தம் பண்ணிவைத்து சம்பாதிப்பவர்கள், அதனாலே காலனிகளைத் தேடிச் செல்லும் குழுவினரிடம் மன்னர் பெர்டினெண்ட் வழக்கறிஞர்களை மட்டும் அழைத்துச் செல்லக்கூடாது எனச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். அது இந்த காலத்துக்கு வெகுப்பொருத்தமாக உள்ளது. இன்று ஒரே வித்தியாசம் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு இணையாக தேர்தல் ஆணையமும் தவறு செய்யாத மக்களை பிரஜைகள் அல்லரென்றும், ஆவணங்கள் இல்லாதவர்கள் என்றும் தம் இஷ்டத்துக்கு பாவித்து அவர்களை "நீங்களே உங்களை அப்பழுக்கற்றவர்கள் என ஆவணங்களைத் தாக்கல் செய்து நிரூபியுங்கள்" என்கிறது. அரசு கண்ணை மூடித்திறக்கும் முன் ஒரு சட்டத்திருத்தம் பண்ணி பெருங்குழப்பத்தில் மக்களை ஆழ்த்துகிறது; மக்கள் இடையே சச்சரசவும் குழப்பமும் தோன்ற அதைத் தீர்ப்பதாகச் சொல்லி தன்னை தலைமையாக நிறுவுகிறது. தானே ஏற்படுத்திய வரிகளைத் தானே குறைத்து தன்னைப் பாராட்டிக் கொள்கிறது. தான் திணித்த எதேச்சதிகாரச் சட்டத்தை தானே மட்டுப்படுத்தியோ தற்காலிகமாக நிறுத்திவைத்தோ அதை மனிதநேயமும் என்றும் பண்பென்றும் சுயமாகப் பாராட்டிக் கொள்கிறது. எண்ணற்ற சிக்கல்களை தனது அனுதினமும் தோற்றுவிக்கப்படும் விதிமுறைகளால் உருவாக்கி மக்களைக் கடும்பதற்றத்தில் வைக்கிறது.


ஒரு அறையில் உட்கார்ந்து சட்டங்களைப் பிறப்பிப்பவர்கள், அவற்றைப் பின்பற்ற விதிமுறைகளை உருவாக்குபவர்கள், அதைவைத்து பணமும் அதிகாரமும் சம்பாதிப்பவர்கள், தரவுகளைக் கொண்டு மக்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துபவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். அல்லது அவர்களின் அதிகாரம் பெருகிவிட்டது. வாழ்க்கையை மிகவும் சிக்கலானதாக, துன்பமானதாக இவர்கள் மாற்றுகிறார்கள். அதேநேரம் தம் உடலுழைப்பால் மாற்றங்களைக் கொண்டு வருவோர், பிறருக்கு உதவுவோர், படைப்பூக்கத்துடன் செயல்படுவோர் மக்களுக்கு நன்மை பயப்பவர்களாக உள்ளர். படித்தவர்களையும் ஒழுக்கமானவர்களையும் விட படிக்காதவர்களும் ஒழுங்கற்றவர்களும் நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் தெரிகிறார்கள். அந்தளவுக்கு கல்வியும் அறிவும் கண்காணிப்பும் அதிகாரமும் கைகோர்த்து அதிகாரத்துவத்துவத்தின், நிர்வாகக் கட்டுப்பாடுகளின் பெயரில் மக்களைத் துன்புறுத்தும் காலத்தில் வாழ்கிறோம். மோடியின் ஆட்சியில் நாடே ஒரு பெரும் நீதிமன்றமாகவும் அதிகார மையங்கள் வக்கீல் அலுலவகங்களாகவும் மாறிவிட்டது.

"King Ferdinand, sending colonies to the Indies, wisely provided that they should not carry along with them any students of the long-robe, for fear lest suits should get footing in that new world, as being a science in its own nature, the mother of altercation and division."

எதையும் அப்பழுக்கற்றதாக, ஒழுங்கானதாக, பிசிறற்றதாக, குற்றமற்றதாக மாற்ற நினைக்கும்போதே பெருங்குழப்பமும் பிரச்சினைகளும் குற்றங்களும் நாட்டில் பெருகுவதாக மாண்டெய்ன் சொல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இயல்பான படைப்பூக்கமான வாழ்க்கையென்பது சரியான வரையறைக்குள் வராததே. அதுவே தன்னளவில் அழகானதாகவும் நியாயமாகவும் உள்ளது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...