முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவண அரசியல் 3

 நம்மூரில் தரப்படும் அடையாள அட்டைகளில் பெரும் வேடிக்கை பெயர் பதியப்படும் விதம். என் வாக்காளர் அட்டையில் முதற் பெயர், குடும்பப் பெயர் ஒட்டியிருக்கிறது, ஆதாரில் என் இனிஷியல் முன்னிலையில் இருந்தால் இன்னொரு அட்டையில் கடைசியில் இருக்கிறது. இதில் எந்த முறையையும் நம் அமைப்புகள் பின்பற்றுவதில்லை. கொடுப்பதை தோன்றினபடி பதிவு பண்ணி வைக்கிறார்கள். இவை ஒன்றுபோல இருக்காவிடில் பின்னர் நிராகரித்துவிடுகிறார்கள். MK Stalin என்பது Stalin MK என்றிருந்தால் என்ன தப்பு? அதனால் அவர் இன்னொருவர் ஆகிவிடுவாரா? ஆனால் நம்முர் ஆவணச் சரிபார்ப்பு மண்டைகளுக்கு இருவரும் ஒருவர் அல்லர். எல்லா அட்டைகளிலும் பெயரை ஒரே போல வரவழைத்தாலும் வேறு புதுப் பிரச்சினைகள் புற்றீசல் போல புறப்பட்டு வரும்.

நான் என் வருங்கால வைப்புநிதிக்காக ஆவணத்தை அளிக்கையில் ஆதாரமாக ஆதாரைக் கொடுத்தேன். அதில் மேற்சொன்ன காரணத்துக்காக என் பெயரை மாற்ற வேண்டி வந்தது - அதாவது இனிஷியலை முன்பிருந்து பின்பாக மாற்றினேன். ஆனால் இணையதளத்தைக் கட்டமைத்தவர்கள் மென்பொருளே தாமாகத் தேடி பெயர் மாற்றங்கள் இருப்பின் தடைசெய்யும்படி அமைத்திருக்கிறார்கள். எனக்கு இது ஆரம்பத்தில் தெரியாது. வைப்புநிதியைப் பணத்தேவையின் பொருட்டு எடுக்க முயன்றால் பயனர் அடையாளப பெயர் தப்பு எனக் கூறியது. அலுவலகங்களில் முன்னும்பின்னுமாகப் பந்தாடப்பட்ட பின்னர் இந்த உண்மை சொல்லப்பட்டது. இதைச் சரிசெய்ய இன்னொரு ஆவணத்தை - விண்ணப்படிவம், சான்றாதாரங்கள் - தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் சரியாகவில்லை.
அரசின் பொதுக் கணக்கில் நம் வைப்பு நிதியைச் சேமிப்பதன் பிரச்சினை இது. இதற்குப் பதிலாக ஊழியர்களின் ஒரு தனியான நிலை வைப்புக் கணக்கில் இந்நிதியை அரசும் (சம்பளத்தில் 1.16%) தனியார் நிறுவனங்களும் (12%) நாமும் (12%) போடும்படி வைத்தால், அதற்கு ஒரு லாக் இன் காலமும் இருக்கையில் இதைவிடச் சுலபமாக இருக்கும். நாம் அரசு நிறுவனங்களில் அலைய அவசியம் இருக்காது. ஆவணங்களின் சுழல்வட்டப் பாதையில் சிக்க வேண்டியிருக்காது. நம் பணத்தை யாரும் திருடவும் முடியாது. இவர்கள் கொடுக்கிற பிச்சைக்கார 1.16% ஏன் இவ்வளவு பாதுகாப்பு, தடையுத்தரவு, ஆவணத் தாக்கல் பந்தா எல்லாம்? நீங்க கொடுக்கிற ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அலுவகம், கணினி எல்லாம் எதற்குங்க? இது அநாவசிய செலவில்லையா? மேற்சொன்ன கேள்விகள் நமக்கு இயல்பாகவே எழும் - ஆனால் அரசுக்கு இது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள ஒரு வழி.
"வரவு எட்டணா செலவு பத்தணா" படத்தில் அப்பா தன் பிள்ளைகளின் பணத்தை வாங்கிவைத்து கராறாகச் செலவு பண்ணி இல்லாத பிள்ளைகளைப் பாதுகாத்து இருக்கிற பிள்ளைகளை அடக்கி வைப்பார். ஒரு கட்டத்தில் அவர்கள் என் காசை ஏன் உன்கிட்ட கொடுக்கணும் என கொடுப்பதை நிறுத்துவார்கள். அப்போது அப்பாவின் அதிகாரம் காலியாகும் (அதன்பிறகு பிள்ளைகளின் சீரழிவைக் காட்டி நம்மைப் பயமுறுத்துவது வேறு கதை). அரசின் அதிகாரமும் இப்படித்தான் - நம்மிடம் வாங்கி நம்மைக் கட்டுப்படுத்தி உருட்டி மிரட்டி அதிகாரம் பண்ணுவது, அதன் மீது இருப்பை நிறுவுவது. அதைத் தாண்டி (மத்திய வர்க்கத்தினருக்கு) அரசு எங்கு நிலைக்கிறது? தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...