முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்காவின் பொற்காலம்


 

வெறுமனே மத்திய வரிசை மட்டையாட்டத் திறமை என்று எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்க அணி நம்மைவிட பலமடங்கு மேல். இன்று பல அணிகளிடமும் ஓரளவுக்கு நல்ல துவக்க வீரர்கள் உண்டு. ஆனால் மத்திய வரிசையின் பலமே ஒரு அணியின் வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. பிரீட்ஸ்கி பார்க்க அந்த காலத்து டிவில்லியர்ஸைப் போல இருக்கிறார். அடுத்து குட்டி ஏ.பி பிரெவிஸ். அடுத்து இரண்டு பிரமாதமான ஆல்ரவுண்டர்கள் - யான்ஸனும் போஷும் - இருவருமே 25-60 சராசரி வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார்கள். இது போக மார்க்ரமும் டிகாக்கும். கிட்டத்தட்ட எந்த இடத்தில் இருந்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறம் படைத்த வீரர்கள். இந்தியாவின் மட்டையாட்ட வரிசையை ஒப்பிட்டுப் பாருங்கள் - நம்மிடம் யாருமே இல்லை. ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என எடுத்துக்கொண்டாலும் இந்த மட்டையாட்ட ஆற்றல் இல்லை. மேலும் வயதும் அவர்கள் வசமே (இந்திய மட்டையாளர்களுக்கு ஒன்று திறமை இல்லை அல்லது கோலி, ரோஹித்தைப் போல வயதில்லை). ஆக, இதுதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் பொற்காலம். வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்ப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் அவர்கள் வராவிட்டால் ஆச்சரியப்படுவேன். டி20யில் அவர்களுடைய அணி இன்னமும் செட்டில் ஆகவில்லை என நினைக்கிறேன். ஆனால் விரைவில் இந்த அணியை வைத்தே அதிலும் மேலே வருவார்கள்.

தென்னாப்பிரிக்கா செய்கிற உருப்படியான விசயம் டெஸ்டுக்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் தனித்தனியான வீரர்களை வைத்திருக்கிறார்கள் (ஒருசிலர் இரண்டிலும் ஆடுகிறார்கள் என்றாலும்). அவர்களுடைய டெஸ்ட் மட்டையாளர்கள் டெஸ்ட் போட்டிக்காகவே ஆடுகிறார்கள் (டி20யில் இடம்பிடிக்கும் பயிற்சியாகக் காண்பதில்லை.) அவர்கள் தம் தடுப்பாட்டத்தை நம்பிப் போராடுகிறார்கள் (நெருக்கடியில் சொதப்புவதில்லை.) அடுத்து, அவர்கள் தம் பழைய இனத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொஞ்சம் நெகிழ்வாகக் கையாள்கிறார்கள். இப்போதைய அணியிலேயே மூன்று கறுப்பு / பழுப்பு நிறத்தவர்கள் தாம் (பவுமா வந்ததும் அது நான்காகிவிடும்). ஒரு போட்டியில் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தாலே அது போட்டியுணர்வு ஊக்கப்படுத்தும். இதன் நல்விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...