முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பாத சுழலர்கள்

 


குல்தீப்பை ஏன் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் ஆட வைக்கவில்லை என்று கடந்த இரு டெஸ்ட் பயணங்களின்போதும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவருக்குப் பந்து வீச பின்னர் வாய்ப்புகள் அமைந்தபோது சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு அவரிடம் இருந்த ஒன்று இன்று இல்லை. 2024இல் அவருக்கு ஏற்பட்ட கவட்டுப் பகுதி காயம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் காயத்திற்குப் பிறகு ஆசியக் கோப்பையில் நன்றாக வீசி நிறைய விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த ஐ.பி.எப்பில் அவரது ரன் ரேட்டும் விக்கெட்டுகளும் எதிர்பார்த்தபடிக்கு இல்லை. டெஸ்டுகளில் மே.இ தீவுகளுக்கு எதிரான மலிவான விக்கெட்டுகள் உதவினாலும் நியுசிலாந்துக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் எதிராக அவர் திணறினார். எந்த விதத்தில்?

காயத்திற்கு முன்பு குல்தீப்பின் பந்துவீச்சில் வேகமும் திருப்பமும் இருந்தது. பந்து விர்ரென்று சுழன்றது. இதுவும் அவரது பந்துவீச்சில் இயல்பாகவே உள்ள மர்மத்தையும் கொண்டு அவர் கச்சிதமான சுழலராகத் தெரிந்தார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அவர் தன் பந்தை வீசாத வலது கையை (non-bowling arm) பயன்படுத்திய விதம், ஓடிவரும் பாணியில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டினார்கள். அதன்பிறகு காயம் ஏற்பட நாம் கண்ட குல்தீப்பால் பந்தை வேகமாகப் போட இயன்றது, ஆனால் திருப்ப இயலவில்லை. இதை அஷ்வின் தன் யுடியூப் சேனலில் ஒரு உரையாடலில் குறிப்பிட்டார் - குல்தீப்பின் பந்து பெரிதாகத் திரும்புவதில்லை, எந்தப் பக்கம் அது திரும்பும் எனும் மர்மமே அவரது பலம். அதையும் கணிக்க முடிந்தால் அவரால் விக்கெட் எடுக்க முடியாது என்றார். தென்னாப்பிரிக்க ஆப் சுழலர் ஹார்மரின் பந்துகள் 5 பாகைக்கு மேல் திரும்ப, இந்திய சுழலர்களோ சராசரியாக 3 பாகையே சுழற்றினார். அதுவும் குல்தீப் மட்டும்தான் 3.5 பாகை திருப்பினார். அதனாலே மற்றவர்களைவிட அதிக விக்கெட்டுகளும் எடுத்தார். ஆனால் மட்டையாளர்கள் அவரைப் பின்னங்காலுக்குச் சென்று ஆடி அவ்வப்போது ஸ்வீப்பும் செய்யும்போது அவர் தடுமாறினார். ஏனென்றால் பந்து அதிகமாகத் திரும்பினாலே பின்னங்காலில் போய் தடுத்தாடும்போதும் பந்து எகிறும் (ஹர்பஜன், அஷ்வினை நினைத்துப் பாருங்கள்).
குல்தீப்பை விடுத்தால் ஜடேஜாவும், வாஷிங்டனும் 2.5 பாகை மட்டுமே திருப்புகிறார்கள். இன்று ரஞ்சிக் கோப்பையிலும் பந்தை அதிகமாகத் திருப்புவோர் கிடையாது. ஆக இந்தியாவின் சுழல் எதிர்காலம் இப்போதைக்கு கவலைக்கிடமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் சற்று மேலான சுழலர்கள் உள்ளனர். இதை அஷ்வின் பலமுறைகள் குறிப்பிட்டு எச்சரித்து வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே (உத்தப்பா 18 ஆண்டுகளாக என்று சொல்கிறார்) நமது ஆடுதளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக மாற்றப்பட்டது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். இப்போது சுழல் பந்தைத் திருப்பவோ ஆடவோ ஆள் இல்லை.
இதைத் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க நாம் எடுத்த முயற்சியுடன் ஒப்பிடலாம். ஆங்கில வழிக் கல்வியால் நம் மாணவர்களுக்கு சரிவர ஆங்கிலம் பேசவும் வரவில்லை, தமிழும் தெரியவில்லை. கலந்துகட்டி ஏதோ பீகாரிகளைப் போலப் பேசுகிறார்கள். (அதுவும் மத்திய, கீழ்மத்திய மாணவர்களே ஓரளவுக்காவது வட்டார வழக்கிலாவது பேசுகிறார்கள். உயர்த்தட்டினர் ரொம்ப மட்டமாகப் பேசுகிறார்கள்.) ஒட்டுமொத்தமாக அவர்களுக்குத் தாம் நினைப்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தவே தெரியவில்லை. எழுதுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
இதுதான் அதீதத் திருத்தத்தின் எதிர்-விளைவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...