முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டு அடிப்பவர்களுக்கு வீசுவது

தென்னாப்பிரிக்காவின் யான்சன் மட்டையாடும்போது கவனியுங்கள் - அவர் தனக்குத் தடுத்தாடும் திறன் இல்லாததால் குச்சிகளை விட்டு ஆடுகிறார் - அதனால் அவர் பந்துகளை அவற்றின் நீளத்தைப் பார்த்தே அடிக்கிறார், திசையை நோக்கி அல்ல. அதாவது அவர் திசையைத் தன் கணக்கில் இருந்தே எடுத்து விடுகிறார். நடுக்குச்சியில் விழும்பந்து அவருக்கு ஆப் குச்சியாகவும், கால் குச்சியில் விழுவது நடுக்குச்சியாகவும் இருக்கும். இது பந்துகளை நேராகவும் மிட்விக்கெட் மேலும் தூக்கி அடிக்க சுலபமாகும். ஓரளவுக்கு கண்-கை ஒருங்கிணைப்பு கொண்ட மட்டையாளர்களுக்கு அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆட இது வெகுவாக உதவும் பாணி. எல்.பி.டபிள்யு, வைடை வெளியே எடுத்துவிடலாம். இப்படியான மட்டையாளர்களுக்குப் பந்து வீசுவதன் பால பாடமே பந்தை 5-6வது குச்சிகளில், குறைநீளத்திலோ யார்க்கர் நீளத்திலோ வீச வேண்டும் என்பதுதான். இந்தப் பாணி ஆட்டத்தைச் செறிவாகப் பயன்படுத்தியவர்கள் தோனியும், டிவில்லியர்ஸும். அவர்கள் இருவரும்கூட கேட்ச் கொடுத்தே அதிகமான முறைகள் அவுட் ஆனார்கள். இன்று அந்த இடத்தில் இருப்பவர் குட்டி ஏ.பி என அழைக்கப்படும் தெவால்ட் பிரெக்ஸிஸ். அடுத்துதான் யான்சன், போஷ் போன்ற ஆல்ரவுண்டர்கள் வருகிறார்கள். அவர்களும் இதையேதான் செய்ய முயல்கிறார்கள். தென்னாப்பிரிக்க மட்டையாளர்கள் பொதுவாகவே சுழல் பந்து முழுநீளமாக விழும்போது எ.பி.டபிள்யூவைத் தவிர்க்கும் நோக்கில் குச்சிகளைக் காட்டி நடுக்குச்சியில் இருந்தே ஸ்வீப் செய்கிறார்கள். இதை ஒரு தடுப்பாட்ட பாணியென்றே அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்றைய அதிரடி மட்டையாளர்களும் கீழ்வரிசை மட்டையாளர்களும் தோனி, ஏ.பி டிவில்லியர்ஸ், பொலார்ட் பாணியில்தான் பயிற்சியெடுக்கிறார்கள்.

ஆக, எண் 5இல் இருந்து 8 வரை தென்னாப்பிரிக்க மட்டையாளர்களுக்கு வைடாக குறைநீளத்தில் வீசுவதும் அதற்கேற்ப வைடாகத் தடுப்பாட்ட களம் அமைப்பதும் முக்கியம். இன்று இந்திய அணி தொடர்ச்சியாக மிட்விக்கெட், லாங் ஆன், பைன் லெக் வைத்தே நடுக்குச்சியில் வீசி அடி வாங்கிக்கொண்டேஇருந்தார்கள். ஹர்ஷித் ரானா வந்ததும்தான் அவர் களத்தை மாற்றி வைடாக ஒரு பந்தை வீசி பிரெவிஸைத் தூக்கினார். அதன்பிறகும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. யான்சனுக்கும் இப்படியே வீசினார்கள்.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகவே பெரும்பாலான மட்டையாளர்கள் குச்சிகளைத் தடுத்தே பந்தை ஆப் பக்கத்தில் விரட்டினார்கள். ஆகையால் பந்துகளை நேராக உள்ளே வீசுவது அவசியப்பட்டது. அப்படியான நிலையில் தோனி, டிவில்லீயர்ஸ், இப்போது பிரெவிஸ், யான்சன் போன்றோர் வந்து நேராக விளாசும்போது அவர்களுடைய வியூகம் அவர்களுக்கே விரோதமாகி விடுகிறது. இப்படியான மட்டையாளர்களின் ஆட்டத்தைப் பார்த்து ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தயாரக வருவது அவசியம். ஆனால் நம் வீச்சாளர்களால் இப்படி மட்டையாளருக்கு ஏற்ப தங்கள் திசையை மாற்ற முடிவதில்லை.
இதனால் 220க்கு ஆல் அவுட் ஆக வேண்டிய தென்னாப்பிரிக்கா கிட்டத்தட்ட 300ஐ நெருங்கிவிட்டது.
அடுத்த ஆட்டதிலாவது கற்றுக்கொண்டு வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.