முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரள்வதன் பிரச்சினை

 பெருநகரங்களின் தோற்றத்திற்கும் பாசிசத்துக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான மற்றொரு உண்மைதான் பண்பாட்டில் வேரற்று, வாழ்வில் அர்த்தத்தை இழந்து தவிக்கும் நவீனத் தனிமனிதர்கள் தம் பதற்றத்தில் இருந்து தப்பிக்க பெருந்திரளை நோக்கி வருவார்கள், அவர்கள் கிடைக்கும் வெளிகளில் எல்லாம் திரள்வார்கள், அவர்களைப் பயன்படுத்தி தம் அதிகாரத்தை நிரூபிக்க ஆளும் அரசுகள் விரும்பும் என்பதும்.

புத்தாண்டுக்கான பெருந்திரள் கொண்டாட்டங்கள் உண்மையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல, நோய்மையின் வெளிப்பாடுதான். அதாவது புத்தாண்டைக் கொண்டாடுவது அல்ல பிரச்சினை. திடீரென தனியர்களும் சிறுகுழுக்களுமான மக்கள் பெருங்கூட்டத்தை நாடுவதுதான். மக்கள் பெருங்கூட்டமாவதில்லை. மக்கள் தம் கற்பனையில் உள்ள பெருந்திரளை நாடுகிறார்கள். அவர்கள் அவ்வடிவத்திற்கும் தாமாகவே வந்து இணைகிறார்கள். இடம், வசதி, சூழல் இவை மட்டும் இருந்தால் போதும்.
ஆனால் இந்தியாவைப் போன்ற நாட்டில் இடம் குறைவு, ஜனங்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
அரசு நினைத்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பார்கள்.
ஏனென்றால் அரசுக்கு எப்போதுமே தன் இருப்பை நியாயப்படுத்த திரள் எனும் குறியீட்டைக் காட்டுவது அவசியம். இந்தியாவில் முதல் கூட்ட நெரிசல் விபத்து நடந்ததே வெள்ளைக்காரர்களின் அரசு இங்கு கும்ப மேளாவை அனுமதித்தபோதுதான். வெள்ளையர் அரசும் தம்மை அரசென அங்கீகரிக்க இந்தியத் தேசம் என ஒரு கருத்தமைவை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். தேசத்தைக் கட்டமைக்க சிறந்த வழி கூட்டத்தைத் திரட்டுவதே. அதற்கு அவர்கள் மதச் செண்டிமெண்டைப் பயன்படுத்தினார்கள். சமஸ்கிருத வைதீக ஆய்வுக்கு, பரப்புரைக்கு நிதியளித்தார்கள். இன்னொரு பக்கம் இஸ்லாமியரை தனித்தேசமாகக் கட்டமைக்கும் பணியையும் செய்தார்கள். அதன் பிறகு சுதந்திரம் கிடைக்க இந்திய அரசுகள் தோன்றின. இந்திய ஆட்சியாளர்களும் வெள்ளையர்களைப் போன்றே மக்களை நடத்தினார்கள். அவர்களும் தவறாமல் கும்ப மேளாக்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் சாவதற்கு வழிவகுத்தார்கள். இந்திய ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக இப்போது மக்களைத் திரட்டி தம் வலிமையைக் காட்ட மதத்தைத் தாண்டி இசை அரங்கு, நடன அரங்கு, கொண்டாட்ட மைதானங்கள், மது போதை, சமூக வலைதளங்கள் வந்துவிட்டன.
மக்கள் திரள்வதன் மிகப்பெரிய சிக்கல் கூட்ட நெரிசல் விபத்துகள் கூட அல்ல. அது உள்ளார்ந்த ஒரு பாசிச மனநிலையின் நோய்க்குறியாக வளர்க்கிறது என்பதே. 'எனது திரள் என்பது சிறியது, அது என் உடனடி குழு, என் குடும்பம், என் நண்பர்கள்' என்று ஒருவர் நினைக்கும்போது மட்டுமே அவர் பாசிசத்துக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறார். நான் என்பவர் என் சாதி, என் மதம், என் ஊர், என் மொழி, என் அடையாளம், என்னவர்களை நான் எனக்கு வெளியே பெருந்திரளில் அடையாளம் கண்டு, அதில் என்னை மறைக்க வேண்டும், கட்டற்ற அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என ஒருவர் நினைக்கும்போது அவரிடம் இருந்து பாசிசம் புறப்பட்டுச் சென்று மக்களாட்சி உணர்வை எரித்து பெருநெருப்பாகத் தோன்றி கொழுந்துவிட்டு எரிகிறது.
எல்லா விதமான கூட்டங்கள், பேரணிகள், திரட்சியையும் நாம் இதனாலே எதிர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எவருடனும் உடன்படாத தனிமனிதர்கள், அடையாளமற்ற சிறுகுழுக்களில் தம்மைக் காணும், அமைதி கொள்ளும் மனிதர்கள் மேலானவர்கள். சுயமாகச் சிந்தித்து விமர்சிக்கிறவர்களால் திரளில் போய் ஒளிய முடியாது. திரள் நம் மூளையை மழுங்கடித்து மக்களாட்சியை அழித்துவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...