முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ச. தமிழ்ச்செலவனுக்கு சாகித்ய அகாடெமி விருத





ச. தமிழ்ச்செல்வன் என் பிரியத்துக்குரிய படைப்பாளி அல்லர். அவரைக் குறித்துச் சிந்திக்கையில் எல்லாம் அவரது பலமும் பலவீனமும் மானுடவாதமும் மிகையான எளிமையும்தான் எனத் தோன்றும்.

ச. தமிழ்ச்செல்வன் முதன்மையாக ஒரு மானுடவாத எழுத்தாளர். சிறுகதையாளர். 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டு வருகிறார்.ஆனால் நிறைய எழுதிக் குவித்தவரோ தமிழில் சிறுகதைகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை செரித்தோ மறுத்தோ தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அல்லர். அதனாலே அவர் முழுமையாகத் தன்னை எழுத்தாளர் என்று மட்டுமே கருதி வாழ்ந்தார் என்று கருத முடியாது. இடதுசாரி முற்போக்கு செயல்பாட்டாளர், ஆனாலும் தன் கதைகளில் அவர் மார்க்ஸிய பொருளாதார நோக்கில் சமூக அவலங்களைக் கண்டதில்லை என்பது என் பார்வை. அவர் மானுடவாத நோக்கிலேயே கொஞ்சம் கற்பனாவாதத்துடன் மனிதர்களைச் சித்தரித்தார். இது என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்திய ஒன்று.
வண்ணதாசனின் கதையுலகை எளிய மக்களிடம் வைத்து மென்னுணர்வுகளை தழைதழைப்பு இன்றி நேரடியாகச் சொன்னால் தமிழ்ச்செல்வனின் கதையுலகம் தோன்றிவிடும் என எனக்குத் தோன்றும்.
ச. தமிழ்ச்செல்வன் ராணுவத்தில் இருந்திருக்கிறார் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் - தமிழ் நவீன எழுத்தாளர்கள் பொதுவாக மென்மையான, அலுவலக நாற்காலிகளில் சமையும் பணிகளிலே இருப்பார்கள். ஆனால் ராணுவம், தேசியம், யுத்தங்களின் குரூரம், அபத்தம் குறித்தெல்லாம் கெர்ட் வெனெகெட், ஹெமிங்வேயைப் போல இவர் பேச மாட்டார்.
பெண்கள், பெண்ணுரிமை என்று வந்துவிட்டால் ச. தமிழ்ச்செல்வன் பயங்கர woke ஆகப் பேசுவார் என்பதைக் கவனித்திருக்கிறேன். உதாரணமாக ஆண்கள் நன்றாக சமைக்க ஆரம்பித்தால் குடும்பத்துக்குள் சமத்துவம் வந்துவிடும் எனும் தோரணையில் அவர் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதேநேரம் நம் இளம்தலைமுறைப் பெண்களில் சிலரோ ஒன்று சமைக்கத் தெரிந்த கணவர் கிடைத்துவிட்டால் அவரை அடிமையாக்கித் துன்புறுத்துகிறார்கள் அல்லது கணவருக்கும் சமையலுக்கும் தொலைவு என்றால் அவருக்குச் சோறே போடாமல் ஸ்விக்கியில் ஆர்டர் போட்டே கொல்கிறார்கள் என்பதும் எதார்த்தம்தான்.
ச. தமிழ்ச்செல்வனின் முக்கியத்துவம் அவர் மானுடவாதச் சிறுகதைகளுக்கு அளித்த பங்களிப்புதான். அதனாலே வரலாற்றளவில் அவர் தவிர்க்க முடியாதவர். அவருக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.