முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

 


How Tamil author Charu Nivedita has created a cult following for his books  (and his persona)

எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம்.

எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வரும்போது தான் கொண்டாடுகிறவற்றின் (இலக்கியம், காதல், நட்பு, லட்சியம்) நிகழாத எதிர்மறைக்குள் நம்மைக் கொண்டு போவார். காதல் காதல் என்று மருகுவோர் அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதை அவர் பகடி செய்வதை எடுத்துக் கொள்வோம். அங்கு அவர் காதலைப் பகடி செய்யவில்லை, காதல் குறித்த அணுகுமுறையையும் பகடி செய்யவில்லை - ஒருவித பாசாங்கை, முரணைப் பகடி செய்கிறார் என்றும் கொள்ள முடியாது. ஏனென்றால் அடுத்த சில பக்கங்களிலேயே அவர் அதே பாசாங்கைத் தானும் நிகழ்த்தத் தொடங்குவார். அதிலும் அவர் தீவிரமான நம்பிக்கையை வைக்கிறாரா அல்லது அதுவும் ஒருவித விளையாட்டா என்று அறிய முடியாது. இப்படி அவரது பகடி எதிர்மறையை ஊடுருவி அதே எதிர்மறைக்குள் போய் நம்மை நிறுத்துகிறது. அது ஒன்றுமில்லாத இடத்துக்குப் போகிறது. எதிர்மறைக் கடப்புநிலைப் பொருள் எனும் பதமே சற்று கடுமையாகத் தெரியலாம். நிகழாத இன்மை என்பது இன்னும் பக்கத்தில் வருமென நினைக்கிறேன்.
சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை எனக்குப் பக்தி கவிதைகளுக்குவெகு நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி தோன்றும். அதனாலே அவரது பகடியை நாம் தனித்துப் படிக்கலாகாது - அதை அவரது காதல் வரிகள், கொண்டாட்ட விவரணைகளுக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அப்போதே அது ஏன் நம்மை அகத்தே அவ்வளவு சுத்தப்படுத்துகிறது என விளங்கும்.

கெர்ட் வொனெகட்டின் பகடியும் நகைச்சுவை உணர்வும் நிச்சயமாக சாருவை நினைவுபடுத்துகிறது. எதையும் விட்டுவைக்காத முழுமையான அம்மண விளையாட்டாக அவர் பகடியை மாற்றுகிறார். உதாரணமாக Breakfast for Champions நாவலில் தன் மனைவியை இழந்த ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு முழுமையான பைத்திய நிலையில் சரிவதைச் சித்தரிக்கும்போது அவர் எதார்த்தவாத எழுத்தில் வீழ்ச்சியை கசப்புடன் சுய-இரக்கத்துடன் காட்டுவதற்கு நேரெதிராகச் செல்கிறார். முழுக்க முழுக்க கேலி, கிண்டல், பகடிதான், ஆனால் அந்த எள்ளலிலும் கசப்பு இருக்காது. அதே போலத்தான் அவர் பதிப்பு வணிகம் எப்படி இலக்கியத்தையும் போர்னோகிரபிக்கு பக்கத்தில் கொண்டு போகிறது எனக் காட்டும் இடங்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் சாருவின் எழுத்து னெகெட்டை விட பலமடங்கு மேலானது - ஏனென்றால் சாரு இந்த பகடியைக் கொண்டு நம்மை இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்று நம்மை சுத்திகரிக்கிறார். இதை வெனெகெட்டால் செய்ய முடிவதில்லை. அவர் மறுப்புநிலைவாதத்துடன் நின்றுகொள்கிறார். தன்னுடைய அரசியல் தரப்பையும் (இடதுசாரி, சர்வாதிகார எதிர்ப்பு) அவரால் கடக்க முடிவதில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...