முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

 


How Tamil author Charu Nivedita has created a cult following for his books  (and his persona)

எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம்.

எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வரும்போது தான் கொண்டாடுகிறவற்றின் (இலக்கியம், காதல், நட்பு, லட்சியம்) நிகழாத எதிர்மறைக்குள் நம்மைக் கொண்டு போவார். காதல் காதல் என்று மருகுவோர் அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதை அவர் பகடி செய்வதை எடுத்துக் கொள்வோம். அங்கு அவர் காதலைப் பகடி செய்யவில்லை, காதல் குறித்த அணுகுமுறையையும் பகடி செய்யவில்லை - ஒருவித பாசாங்கை, முரணைப் பகடி செய்கிறார் என்றும் கொள்ள முடியாது. ஏனென்றால் அடுத்த சில பக்கங்களிலேயே அவர் அதே பாசாங்கைத் தானும் நிகழ்த்தத் தொடங்குவார். அதிலும் அவர் தீவிரமான நம்பிக்கையை வைக்கிறாரா அல்லது அதுவும் ஒருவித விளையாட்டா என்று அறிய முடியாது. இப்படி அவரது பகடி எதிர்மறையை ஊடுருவி அதே எதிர்மறைக்குள் போய் நம்மை நிறுத்துகிறது. அது ஒன்றுமில்லாத இடத்துக்குப் போகிறது. எதிர்மறைக் கடப்புநிலைப் பொருள் எனும் பதமே சற்று கடுமையாகத் தெரியலாம். நிகழாத இன்மை என்பது இன்னும் பக்கத்தில் வருமென நினைக்கிறேன்.
சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை எனக்குப் பக்தி கவிதைகளுக்குவெகு நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி தோன்றும். அதனாலே அவரது பகடியை நாம் தனித்துப் படிக்கலாகாது - அதை அவரது காதல் வரிகள், கொண்டாட்ட விவரணைகளுக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அப்போதே அது ஏன் நம்மை அகத்தே அவ்வளவு சுத்தப்படுத்துகிறது என விளங்கும்.

கெர்ட் வொனெகட்டின் பகடியும் நகைச்சுவை உணர்வும் நிச்சயமாக சாருவை நினைவுபடுத்துகிறது. எதையும் விட்டுவைக்காத முழுமையான அம்மண விளையாட்டாக அவர் பகடியை மாற்றுகிறார். உதாரணமாக Breakfast for Champions நாவலில் தன் மனைவியை இழந்த ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு முழுமையான பைத்திய நிலையில் சரிவதைச் சித்தரிக்கும்போது அவர் எதார்த்தவாத எழுத்தில் வீழ்ச்சியை கசப்புடன் சுய-இரக்கத்துடன் காட்டுவதற்கு நேரெதிராகச் செல்கிறார். முழுக்க முழுக்க கேலி, கிண்டல், பகடிதான், ஆனால் அந்த எள்ளலிலும் கசப்பு இருக்காது. அதே போலத்தான் அவர் பதிப்பு வணிகம் எப்படி இலக்கியத்தையும் போர்னோகிரபிக்கு பக்கத்தில் கொண்டு போகிறது எனக் காட்டும் இடங்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் சாருவின் எழுத்து னெகெட்டை விட பலமடங்கு மேலானது - ஏனென்றால் சாரு இந்த பகடியைக் கொண்டு நம்மை இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்று நம்மை சுத்திகரிக்கிறார். இதை வெனெகெட்டால் செய்ய முடிவதில்லை. அவர் மறுப்புநிலைவாதத்துடன் நின்றுகொள்கிறார். தன்னுடைய அரசியல் தரப்பையும் (இடதுசாரி, சர்வாதிகார எதிர்ப்பு) அவரால் கடக்க முடிவதில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.