முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிம்மதியும் வாசிப்பும்

வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது.


வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல).

தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் பெரும்பகுதியினர் வாசிப்பதில்லை. இதற்கு ஓய்வோ, வசதியின்மையோ காரணமல்ல. நாம் இன்று இந்தியாவில் உள்ள செல்வச்செழிப்பான மாநிலங்களில் ஒன்று. அரசே வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் முயற்சி எடுக்கிறது. ஆனால் நாம் அகத்தில் இன்னும் ஆழமாக நம்மை உணர பயிற்சி எடுக்கவில்லை. துரத்தப்படும் விலங்கைப் போன்றே எப்போதும் உணர்கிறோம். குடும்பத்தில், வீட்டில், வேலையிடத்தில், வெளியே.

வாசிப்பு ஒரு ஆன்மீகப் பயிற்சி என வரவர எனக்குத் தீவிரமாகவே தோன்றுகிறது. ஆலயம் தொழுவது, மத ஊர்வலங்களில் பங்கெடுப்பது, கடவுள் சிலை முன் கண்ணீர் உகுப்பதை நான் சொல்லவில்லை. தயங்காமல் கலங்காமல் ஒன்றினுள் இருப்பதைச் சொல்கிறேன். அதற்குச் சிறந்த புத்தகங்களைப் படிக்க அவசியமில்லை என்றாலும் சிறந்த புத்தகங்கள் நாம் வாசிப்புக்குள் நுழைய அதிகமாகவே உதவுகின்றன.

இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு அறிமுகமாகிறவர்கள் நேரமின்மையைக் குறித்துப் பேசுகிறார்கள். நமக்கு ஆழமாகப் படிக்க பத்து நிமிடங்கள் கூடப் போதும். அது இல்லாமல் இல்லை. வாசிப்பை நாம் ஒரு நுகர்வாகப் பார்க்கும் வழக்கம் அதிகரித்து விட்டதால் 'நேரமில்லை', 'புத்தகம் அலுப்பூட்டுகிறது' போன்ற கருத்துக்களைச் சொல்கிறோம். நுகர்வு நிலையில் இருந்து நகரும்போதே நல்ல வாசிப்புக் கலாச்சாரம் உருவாகிறது.

அதற்கான பயிற்சியை பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்து துவங்கலாம். சமூக வலைத்தளத்தில் கூடப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் மதத்தை விட, தெய்வத்தை விட வாசிப்பு முக்கியம் எனும் மனப்பான்மை வர வேண்டும். வாசிப்பில் இருந்து அனைவரும் தாம் நினைப்பதைச் சொல்லில் வடிக்கும் கலையைப் பழக வேண்டும். அதுவும் ஆன்மீகப் பயிற்சிதான். மகிழ்ந்திருப்பது என்பது இங்கிருந்தே வருகிறது. நாம் மகிழ்ச்சியற்று, நிம்மதியற்று இருக்கும்போது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட நிம்மதியாகப் படிக்க முடியாது என்பதை உணர்ந்திருப்போம். வாசிக்கையில் நம்முடன் இருக்கும், வாசிக்க நம்மை அனுமதிக்கும் இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் உள்ளிருந்து ஊறி வருவதே. இதை நாம் வெளியே இருந்து பெறத் தேவையில்லை. அது புத்தகத்தில் இருந்து வருவதும் அல்ல. புத்தகம் அதைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறது. அதுவும் புத்தகத்தின் அணுக்கத்தை விரும்புகிறது.

வாசிப்புக்கான நேரமில்லை என்பதை விட வாசிப்புக்கான 'நிம்மதி' இல்லை என்பதே சரியான விளக்கம்.

நாம் ஏன் நிம்மதியற்ற சமூகமாக இருக்கிறோம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...