முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிம்மதியும் வாசிப்பும்

வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது.


வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல).

தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் பெரும்பகுதியினர் வாசிப்பதில்லை. இதற்கு ஓய்வோ, வசதியின்மையோ காரணமல்ல. நாம் இன்று இந்தியாவில் உள்ள செல்வச்செழிப்பான மாநிலங்களில் ஒன்று. அரசே வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் முயற்சி எடுக்கிறது. ஆனால் நாம் அகத்தில் இன்னும் ஆழமாக நம்மை உணர பயிற்சி எடுக்கவில்லை. துரத்தப்படும் விலங்கைப் போன்றே எப்போதும் உணர்கிறோம். குடும்பத்தில், வீட்டில், வேலையிடத்தில், வெளியே.

வாசிப்பு ஒரு ஆன்மீகப் பயிற்சி என வரவர எனக்குத் தீவிரமாகவே தோன்றுகிறது. ஆலயம் தொழுவது, மத ஊர்வலங்களில் பங்கெடுப்பது, கடவுள் சிலை முன் கண்ணீர் உகுப்பதை நான் சொல்லவில்லை. தயங்காமல் கலங்காமல் ஒன்றினுள் இருப்பதைச் சொல்கிறேன். அதற்குச் சிறந்த புத்தகங்களைப் படிக்க அவசியமில்லை என்றாலும் சிறந்த புத்தகங்கள் நாம் வாசிப்புக்குள் நுழைய அதிகமாகவே உதவுகின்றன.

இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு அறிமுகமாகிறவர்கள் நேரமின்மையைக் குறித்துப் பேசுகிறார்கள். நமக்கு ஆழமாகப் படிக்க பத்து நிமிடங்கள் கூடப் போதும். அது இல்லாமல் இல்லை. வாசிப்பை நாம் ஒரு நுகர்வாகப் பார்க்கும் வழக்கம் அதிகரித்து விட்டதால் 'நேரமில்லை', 'புத்தகம் அலுப்பூட்டுகிறது' போன்ற கருத்துக்களைச் சொல்கிறோம். நுகர்வு நிலையில் இருந்து நகரும்போதே நல்ல வாசிப்புக் கலாச்சாரம் உருவாகிறது.

அதற்கான பயிற்சியை பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்து துவங்கலாம். சமூக வலைத்தளத்தில் கூடப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் மதத்தை விட, தெய்வத்தை விட வாசிப்பு முக்கியம் எனும் மனப்பான்மை வர வேண்டும். வாசிப்பில் இருந்து அனைவரும் தாம் நினைப்பதைச் சொல்லில் வடிக்கும் கலையைப் பழக வேண்டும். அதுவும் ஆன்மீகப் பயிற்சிதான். மகிழ்ந்திருப்பது என்பது இங்கிருந்தே வருகிறது. நாம் மகிழ்ச்சியற்று, நிம்மதியற்று இருக்கும்போது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட நிம்மதியாகப் படிக்க முடியாது என்பதை உணர்ந்திருப்போம். வாசிக்கையில் நம்முடன் இருக்கும், வாசிக்க நம்மை அனுமதிக்கும் இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் உள்ளிருந்து ஊறி வருவதே. இதை நாம் வெளியே இருந்து பெறத் தேவையில்லை. அது புத்தகத்தில் இருந்து வருவதும் அல்ல. புத்தகம் அதைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறது. அதுவும் புத்தகத்தின் அணுக்கத்தை விரும்புகிறது.

வாசிப்புக்கான நேரமில்லை என்பதை விட வாசிப்புக்கான 'நிம்மதி' இல்லை என்பதே சரியான விளக்கம்.

நாம் ஏன் நிம்மதியற்ற சமூகமாக இருக்கிறோம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...