"தனித்தனியாக செயல்படுவதும், புறவயமான கட்டமைப்பு, அதிகாரமும் பி.ஆர்.ஓவும் இல்லாமல் இருப்பதே எழுத்தாளரின் இயல்பு. தொடர்ந்து தம் எழுத்தை மறுபரிசீலனை செய்வதும், மேம்படுத்துவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு எழுத்தைக் கொண்டு போவதுமே நோக்கம். ஏனென்றால் எழுத்தென்பது மைக்கினால் எழுதுவது அல்ல. இலக்கியம் என்பது நீ போய் சாம்பார்ல உப்பைப் போடு, அவன் போய் மேடையில குண்டு வைக்கட்டும் என்று ஆணையிடுவது அல்ல. எழுத்தாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அங்கும் தனியாகவே உணர்வர். ஏனென்றால் அவர்களின் சாராம்சமே தனிமையில், முரணில், சுயமுரணில், தீர்க்க முடியாத புதிர்களில் இருக்கிறது. எழுத்தாளர்களால் ஒரு குழுவின் மொழியில் பேச இயலாது. அப்படிப் பேச ஆரம்பித்தால் அவர்களால் எழுத்தாளராக இருக்கவும் இயலாது." என்று புரவிக் கூடுகையின் பின்பான மாலைப் பொழுதில் நண்பர் டி.ஐ அரவிந்தனின் அறையில் அமர்ந்து உரையாடுகையில் சொன்னேன். அவர் ஆமோதித்தார். எழுதுவதும் பேசுவதும் சுயமாக, தணிக்கையின்றி இருக்க வேண்டும். நன்றியுணர்வாலோ கண்காணிக்கப்படுகிறோம் எனும் எச்சரிக்கையுணர்வாலோ அவை கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஆனால் இன்று இலக்கியச் ச...