Skip to main content

கூட்டத்தில் ஒருவர்

 




"தனித்தனியாக செயல்படுவதும், புறவயமான கட்டமைப்பு, அதிகாரமும் பி.ஆர்.ஓவும் இல்லாமல் இருப்பதே எழுத்தாளரின் இயல்பு. தொடர்ந்து தம் எழுத்தை மறுபரிசீலனை செய்வதும், மேம்படுத்துவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு எழுத்தைக் கொண்டு போவதுமே நோக்கம். ஏனென்றால் எழுத்தென்பது மைக்கினால் எழுதுவது அல்ல. இலக்கியம் என்பது நீ போய் சாம்பார்ல உப்பைப் போடு, அவன் போய் மேடையில குண்டு வைக்கட்டும் என்று ஆணையிடுவது அல்ல. எழுத்தாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அங்கும் தனியாகவே உணர்வர். ஏனென்றால் அவர்களின் சாராம்சமே தனிமையில், முரணில், சுயமுரணில், தீர்க்க முடியாத புதிர்களில் இருக்கிறது. எழுத்தாளர்களால் ஒரு குழுவின் மொழியில் பேச இயலாது. அப்படிப் பேச ஆரம்பித்தால் அவர்களால் எழுத்தாளராக இருக்கவும் இயலாது." என்று புரவிக் கூடுகையின் பின்பான மாலைப் பொழுதில் நண்பர் டி.ஐ அரவிந்தனின் அறையில் அமர்ந்து உரையாடுகையில் சொன்னேன். அவர் ஆமோதித்தார். எழுதுவதும் பேசுவதும் சுயமாக, தணிக்கையின்றி இருக்க வேண்டும். நன்றியுணர்வாலோ கண்காணிக்கப்படுகிறோம் எனும் எச்சரிக்கையுணர்வாலோ அவை கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஆனால் இன்று இலக்கியச் சூழல் அவ்வாறாகத்தான் மாறிவிட்டது, சில அற்பமான தேவைகளுக்காக, அங்கீகாரத்துக்காக சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறோம் என்று எங்கள் உரையாடல் நகர்ந்தது. எனக்கு அவரது "பயணம்" நாவலே இச்சூழலுக்கான உருவகக் கதை என்று தோன்றும். அதை அவரிடம் சொல்லவும் செய்திருக்கிறேன். தன் நண்பர் ஒருவர் இப்படி சட்டென அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோது சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்ததாகவும் தலைகீழாக மாறியதாகவும் அதைக் குறித்த அதிர்ச்சியில் ஆராயும் பொருட்டு எழுதியதே அந்நாவல் என்றார். நாம் ஒன்றை நோக்கிப் பயணிக்கிறோம், ஆனால் அதற்கு நேரெதிரான இலக்கை அடைகிறோம். நாம் நமக்கே விரோதியாவதை உணராமல் வாழ்கிறோம். நாம் வெறுத்த ஒன்றாக நாமே மாறுகிறோம். இந்த உள்முரண் அந்த காலத்தில் (70-90கள்) எழுதப்பட்ட சில நாவல்களில் பேசப்பட்டுள்ளன. தகழியின் "மாடிப்படிகள்" ஒரு உதாரணம். அதிகார மோகம் ஒருவரை தன்னில் இருந்தே அந்நியமாக்கும், அந்த அந்நியமாக்கலே அவருக்கு அதிகாரத்தையும் பெற்றுத் தரும், தன்னை இழக்கிறவர், அதிகாரத்தை ஈட்டுகிறார் என்று அரசு அதிகார எந்திரத்தின் பின்னணியில் இதை தகழி சித்தரிப்பார். அரவிந்தன் இதையே ஒரு இயக்கத்தின் பின்னணியில் பேசியிருப்பார். வினோதமாக இந்த விசயம் இன்றைக்கு அதிகப் பொருத்தமானதாக மாறி இருக்கிறது. இன்று நாம் ஒரு குழுவாகவோ இப்படி நமக்கு எதிரான விசயங்களை அதிகாரத்துக்காகவும் செல்வாக்குகாகவும் செய்கிறோம். செய்கிறோம் என்பதை விட நிகழ்த்துகிறோம், நம் நிகழ்த்துதலை பண்டமாக மாற்றி விற்கிறோம், இப்படியே நம்மையே இழக்கிறோம். அன்றைய உரையாடலில் நான் இதையும் சொன்னேன்.


இதைப் போன்ற பல விசயங்களில் அரவிந்தனுக்கும் எனக்கும் ஒத்திசைவான அலைவரிசை இருக்கும். யாருக்கும் அவசியமின்றி அடிபணியக் கூடாது, யாரையும் அவமதிக்கவும் கூடாது எனும் அவரது கொள்கை எனக்குப் பிடித்தமானது.

இப்படியானவர்களை இழப்பது ஒரு கை ஒடிவதற்கு ஈடானது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...