Skip to main content

Posts

Showing posts from May, 2013

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அரசியல்வாதிகளை, காவலர்களை கொல்லுவது

சட்டீஸ்கர் முதல்வர் “மாவோயிஸ்டுகள் போலீஸ்கார்களை கொன்றால் அது மனித உரிமை மீறல் இல்லையா?” என கேட்டுள்ளார். முக்கியமான கேள்வி. சமீப மாவோயிஸ்டு தாக்குதலை ஒட்டி அறிவுஜீவிகளின் மாவோயிஸ ஆதரவை கண்டித்தும் இத்தாக்குதலை தீவிரவாத நடவடிக்கையாக பாவித்தும் டி.வி விவாதங்கள் நடந்தன. அதில் காங்கிரஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் மட்டும் தான் இந்நிலைப்பாட்டை எடுத்தனர்.

இலக்கிய உலகில் பிராமணன் ஆவது எப்படி?

மனுஷ்யபுத்திரனை யாராவது தன்னை பாராட்டினால் “நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்” என பதில் தருவார். இது என்ன திமிரான பதில் என தோன்றும். ஆனால் இதற்கு பின் ஒரு உண்மை உள்ளது.

செயலின்மையின் இயல்பு

செயலின்மையின் போதை பற்றி சமீபமாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அதில் அவர் செயலின்மைக்கு அகங்காரம் மற்றும் சவால்களை சந்திப்பதற்கான தயக்கத்தை காரணங்களாக கூறுகிறார். உண்மை. ஆனால் இது உண்மையின் ஒரு பகுதி மட்டும் தான்.

கற்றது தமிழ் ராம் ஏன் குறும்படங்களை, தமிழ் இலக்கியத்தை எதிர்க்கிறார்?

விஜய்டிவி குறும்பட போட்டியின் போது “கற்றது தமிழ்” ராம் குறும்படம் எடுப்பது முழுநீளப் படம் எடுப்பதற்கான தகுதி அல்ல என்று பேசி இளைய இயக்குநர்களை கசப்படைய வைத்தார். சமீபமாக அவர் குறும்படம் எடுத்து முழுநீள வடிவிலும் வெற்றி பெற்ற “பீட்சா”, “சூது கவ்வும்” ஆகிய படங்களையும் சூழலை கெடுக்கும் முயற்சிகள் என கண்டித்திருப்பதாக ஒரு நண்பர் என்னிடம் கவலை தெரிவித்தார்.

வேலையற்ற வேலை

எதற்கெல்லாம் அஞ்சுகிறோம்? வேலை போய் விடுமோ என்று, நம்மை நட்பு வட்டத்தில் மறந்து விடுவார்களோ என்று, சமூகத்தில், வேலையிடத்தில், சொந்தங்கள் மத்தியில் மதிக்காமல் இருப்பார்களோ என்று. இந்த அச்சம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பலவீனமாக்குகிறது. துர்சொப்பனங்களை, மன அழுத்தத்தை, தனிமையை தருகிறது. இன்னொரு புறம் வீட்டுக்குள், அலுவலகத்தில் பொறுப்பாக அக்கறையாக இயங்கவும் வைக்கிறது. ஒரு கணவனாக, பெற்றோராக, ஊழியனாக உங்களுக்கு இருக்க முழு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த அச்சம் உங்களை ஆவேசத்துடன் இந்த பணிகளை செய்ய வைக்கிறது.

சாதி சங்கங்களை தடை செய்யலாமா?

பா.ம.கவை முன்வைத்து ஜெயா சாதி சங்கங்களை தேவைப்பட்டால் தடை செய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல் இந்நாட்டில் உள்ள சாதி பிரச்சனைகளுக்கு சாதி சங்கங்கள் தாம் காரணம் என்கிற நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. சாதி சங்கங்கள் தாம் தமிழ் நாட்டில் உள்ள சாதி வன்முறைக்கு காரணம் என நம்மை நம்ப சொல்கிறாரா ஜெயா?

மதுரைக்கார படங்களும் வன்முறை பண்பாடும்

மதுரைக்கார படங்களில் வன்முறை ஒரு போர்னோ இணையதளத்தில் வருவது போல் விதவித வடிவங்கள் எடுக்கின்றன. ஒவ்வொன்றும் தம் விகார வகைமையால் நம்மை வியப்புறவும் ரசிக்கவும் அருவருப்படையவும் வைக்கின்றன. மதுரைக்கார வன்முறைப் பண்பாடு கணிசமான வணிக வெற்றியும் கண்டுள்ளது. மக்கள் விரும்புகிறார்கள். கலை ரசிகமணிகளும் அதன் எதார்த்தத்தை மெச்சுகிறார்கள். மதுரைக்கார இயக்குநர்கள் “எங்க மதுரை நிஜத்தில் இதை விட நூறு மடங்கு வன்முறையானது” என்று கிலி காட்டுறார்கள். ஆனால் மதுரை நேரில் போய் வருபவர்கள் ஏன் சினிமாவில் பார்ப்பது போல் நிஜ மதுரை இல்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். விமர்சனமுகமாக ஒரு சாரார் “மதுரைக்கார இயக்குநர்கள் தம் இளம்பிராயத்தில் பார்த்த மதுரையை திரும்பத் திரும்ப படமாக எடுக்கிறார்களே ஒழிய அவர்களுக்கு சமகால மதுரை தெரியாது” என்கிறார்கள். ஏன் இவ்வளவு முரண்பாடு?

ஜி.நாகராஜன் நினைவோடை: வீழ்ச்சியும் காரணங்களும்

இந்த சின்ன நூலில் சு.ரா ஜி.நாகராஜன் குறித்த நினைவுகளை நிறைய கவனம், கொஞ்சம் கோபம், எரிச்சலுடன் கசப்பு ஏமாற்றம் மற்றும் துக்கம் ஆகியவற்றை விளக்க முடியாத ஒருவகை அன்புடன் கலந்து பேசுகிறார். சு.ராவுக்கு உரித்தான மென்மையான அங்கதமும் கூர்மையும் கூடிய குரல் இதிலும் ஒலிக்கிறது. தனக்கு தெரியாத எதையும் கூறி விடக் கூடாது, ஜி.நாகராஜனை மிகைப்படுத்தி ஒரு சீரழிவு நாயகனாக சித்தரிக்க கூடாது என்கிற அக்கறையும் இருக்கிறது. இந்த நேர்மை தான் இப்புத்தகத்தின் பலம். வாசகனை ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனிப்புகள் எதையும் செய்யவில்லை.

மந்திர தந்திர வசீகரமும் பேனா நட்பும்

இன்று தினகரனின் விளம்பரங்களில் பார்வையோட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று சுவாரஸ்யம் ஏற்பட்டது. சில ஆண்குறியை வளர்க்கும் மருந்து விளம்பரங்கள். அதில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூட குறிப்பிட்டிருந்தார். இந்த கூச்சமும் பயமும் மிகை கற்பனையும் ரொம்ப காலமாய் நம்மவர்களுக்கு இருக்கிறது போலும். சின்ன வயதில் மாத்ருபூதம் டி.வியில் இதிலுள்ள அபத்தத்தை நக்கலாய் விளக்கியது நினைவு வந்தது.   பெண்களின் மார்பகத்தை பெரிசாக்குவதற்கு கூட மருந்து விளம்பரம். அதைப் பார்த்து ஏதோ ஒரு பெண் ரகசியமாய் அஞ்சலில் பணம் அனுப்பலாம். அடுத்ததாய் ஆண், பெண்ணை, தம்பதியிரனரை வசீகரிக்கும் மந்திரவாதிகள் மூவர் விளம்பரம் செய்திருந்தனர். இன்னொருவர் நாலே மணி நேரத்தில் மந்திரவாதம் கற்றுத் தருகிறாராம். பக்கத்தில் மூவர் மெழுகுவர்த்தி செய்ய கற்றுத் தருவதாக ஒரே போல் விளம்பரம் செய்திருந்தனர். என்னன்னவோ மனிதர்கள் கற்கும் இக்காலத்தில் கேவலம் மெழுகுவர்த்தி செய்வதற்கு அவ்வளவு டிமாண்டா என்ன? ஆனால் மாந்திரகம் போல் சுவாரஸ்யமாக இராது. அதுவும் நாலே மணிநேரத்தில்! இதெற்கெல்லாம் உச்சம் பேனா நண்பர்கள். ஒருவர் ரெண்டு செல் நம்பர்கள் கொடுத்து ...