Skip to main content

Posts

Showing posts from December, 2013

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது?

நான் பொதுவாக வாசகர் கடிதங்களை வெளியிடுவது அபத்தம் என நினைப்பவன். பொதுவெளியில் எழுத நினைத்தால் அதை வாசகர்களே செய்யலாம். ஆனால் மாறாக ஒரு சுவாரஸ்யமான கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். படிப்பதற்கு ஒரு நல்ல கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? என் பதில் ஒரு பொது விவாதத்திற்கு தேவையானது என தோன்றுவதால் பிரசுரிக்கிறேன். இனி… பேராசிரியர் அவர்களுக்கு , நான் ஒரு குறிப்பிட்ட பல்கலையில் பட்ட படிப்பில் சேர்வதற்கு முன் தங்களின் ஆலோசனையைப் பெற விரும்புகிறேன் . அப்பல்கலை , பட்டபடிப்பு , பாடத்திட்டம் பற்றிய குறிப்பேட்டை இதனுடன் அனுப்பியிருக்கிறேன் . தங்களின் கருத்தினைக் கேட்க அலைபேசியில் அழைக்கலாம் எனில் , அலைபேசி எண் , எப்போது அழைக்கலாம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவும் . இப்படிக்கு , சூ . தோமஸ் சூசன் உயிர்மை வாசகன் & முகநூல் நண்பன் அன்புள்ள தோமஸ் சூசன் பாடத்திட்டத்தை பார்த்தேன் . பழைய ஒன்று தான் . ஆனால் பொதுவாக அது எப்படி இருந்தாலும் ஒரு துறையை கல்லூரி அளவில் ஆழமாகவோ ஆத்மார்த்தமாகவோ கற்பது சிரமம் . கல்லூரிப்...

தீமையும் திறமையும்: சலீம் கௌஸும் மோகன்லாலும்

மோகன்லாலின் முக்கிய படமாக அறியப்படுகிற, எம்.டி திரைக்கதை எழுதி, பரதன் இயக்கிய “ தாழ்வாரம் ” பார்த்த போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு. கௌஸின் ராஜு என்கிற பாத்திரம் சுவாரஸ்யமான ஒன்று. அவன் தீமையின் உருவம் ஒன்றும் அல்ல. அவனுடைய ஒரே பிரச்சனை அறவுணர்வோ குற்றம் செய்யும் தயக்கமோ இல்லை என்பது. அச்சமும் ஆசையும் அவனை தொடர்ந்து பிடித்தாட்டுகிறது. கொலைகள் செய்ய வைக்கிறது. அங்கங்கே வரும் சிறு சிறு வசனங்கள் மூலம் அவனை புரிந்து கொள்கிறோம்.

கருணையற்ற அந்த பெண் - கீட்ஸ்

தனியாய் வெளிறிப் போய் அலையும் போர் வீரனே உன்னை வாட்டுவது என்ன? ஏரியின் செட்ஜ் புற்கள் காய்ந்து போயின பறவைகள் மௌனமாயின துரதிர்ஷ்டம் பீடித்தவனாய் தளர்ந்து தோன்றும் போர்வீரனே அப்படி உன்னை என்ன ஏங்க செய்கிறது? அணிலின் பொந்து நிறைந்து வழிகிறது அறுவடை முடிந்து விட்டது

சச்சின்: கடவுள் இல்லாத உலகம்

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு சிறுபகுதியினரால் தான் பார்க்கப்படுகிறது. இந்தியா விளையாட்டு பண்பாடு கொண்ட நாடே அல்ல. ஆனாலும் சச்சினின் இறுதி ஆட்டம் மொத்த நாட்டாலும் கொண்டாடப்பட்டது. கிரிக்கெட் நுணுக்கங்கள் அறியாதோரும் கண்ணீருடன், தாளாத வலியுடன் அவருக்கு விடையளித்தளனர். பிரிவுரையில் சச்சின் தான் சிறுவயதில் கிரிக்கெட் ஆடி களைத்து தூங்குகையில் சாப்பாடு ஊட்டிய அத்தையை பற்றி குறிப்பிடுகையில், தனது முதல் மட்டையை வாங்கித் தந்த அக்காவைப் பற்றி கூறுகையில், அம்மாவை, அப்பாவை நினைவுகூரும் போது மைதானத்தில் கூடியிருந்த, டி,வி முன் வீற்றிருந்த எண்ணற்றோரும் கண் கலங்கினர்.

காப்பிஷாப் டூ சாட்ரூம்

”ஹலோ சார் நாங்க ….” “ஆங் எதுன்னாலும் ஜனவரியில ஒரு காப்பி ஷாப்புல பேசிக்கலாம்” “உங்க மளிகை பாக்கி 350 தர வேண்டியிருக்குன்னு சொல்ல கூப்பிட்டேன்” “ஓ அப்டியா என் அக்கவுண்ட் நம்பர் தரேன். அதுல அந்த முன்னூத்தம்பதை போட்டுடு” “நீங்க் தர வேண்டிய காசுங்க. நான் எதுக்கு உங்களுக்கு…?” “எதுன்னாலும் ஈவனிங் சலூன் ஷாப்புல மீட் பண்ணி பேசிக்கலாம்” “எனக்கு புல் வழுக்கைங்க. நான் சலூன் வந்து என்ன பண்ண?” “அதுக்கென்ன? ஷேவ் பண்ணிக்கிட்டே பேசலாம். எங்கிட்ட இலவசமா பேச முடியாது. நான் ரொம்ப ஸ்டிரிக்ட். இன்னொரு கால் வெயிட்டிங்ல இருக்கு. பேசிட்டு வந்திடறேன். ஹலோ” “சார் நான் டீ ஷாப்ல இருந்து பேசறேன்” “காப்பி ஷாப் தான் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன டீ ஷாப்?” “உங்களுக்காக ஒருத்தர் இங்கே ரொம்ப நேரமா டீ வாங்கி வச்சு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஒவ்வொரு டீயா இருபது டீ சாப்டு லூஸ் மோஷன் ஆகி மயங்கி விழுந்திட்டாரு. சீக்கிரம் வாங்க கடைய மூடப் போறேன்” “இன்னொரு கால் வெயிட்டிங்ல இருக்கு. அப்புறமா கூப்பிடறேன். ஹலோ” “சார் நான் உங்களோட பரம ரசிகை” “ஓ அப்டியா உன் குரல் ஸ்வீட்டா இருக்கு. நா...

தெய்வம் நின்று கொல்லும் (தொடர்ச்சி)

நாள் 3 காட்சி 19 டீனின் அறை. தலைக்கட்டுடன் குமார், அவனது மனைவி, சில செவிலிகள் நிற்கிறார்கள். டீன்: “இது உனக்கு கடைசி வார்னிங் குமார். இதோட உன்னப்பத்தி ரெண்டாவது கம்பிளயிண்ட் வந்திருக்கு. ஆனால் உனக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்ல. அதோட சம்மந்தப்பட்ட பெண்கள் உனக்கு ஆதரவா தான் பேசி இருக்காங்க. ஸோ அதுனால் உனக்கு எதிரா எந்த ஆக்‌ஷனும் எடுக்கல. அது மட்டுமில்ல உன்னோட பொதுவான பிஹேவியர், வேலையில உன் ரெக்கார்டு நல்லா இருக்கு. பொதுவா நர்ஸஸ் மத்த ஸ்டாப் கூட உன்ன பத்தி நல்ல ரிபோர்ட் தான் குடுத்திருக்காங்க. உனக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. குடும்பஸ்தனா ஒழுங்கா இருக்க பாரு”