முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருணையற்ற அந்த பெண் - கீட்ஸ்






தனியாய் வெளிறிப் போய் அலையும்
போர் வீரனே
உன்னை வாட்டுவது என்ன?
ஏரியின் செட்ஜ் புற்கள் காய்ந்து போயின
பறவைகள் மௌனமாயின

துரதிர்ஷ்டம் பீடித்தவனாய் தளர்ந்து தோன்றும்
போர்வீரனே அப்படி உன்னை என்ன ஏங்க செய்கிறது?
அணிலின் பொந்து நிறைந்து வழிகிறது
அறுவடை முடிந்து விட்டது


பதற்றத்தின் ஈரமும் ஜுரத்தின் பனித்துளிகளும் கொண்டு
லில்லி மலர் போல் வெளுத்துப் போய் விட்டது உன் நெற்றி
உன் கன்னத்தில் ஒரு வாடிய ரோஜாவின் தோற்றம்
வேகமாய் காய்ந்து சருகாகும் ரோஜாவின் தோற்றம்

புல்வெளியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்,
தீராத அழகு – தேவதையின் மகள்,
நீள்கூந்தல், காற்றில் மிதக்கும் கால்கள்,
ஆவேசக் கண்கள்.
அவள் அணிய ஒரு மலர்க்கிரீடம் செய்தேன்,
கையணிகளும் பூக்களாலே செய்தேன்,
அவளை வாசத்தின் வளையத்தில் வைத்தேன்
என்னோடு சேர்கையில் கண்களையே பார்த்தாள்
இனிமையாய் முனகினாள்.

விரையும் என் புரவியில் வைத்தேன் அவளை,
பகல் எல்லாம் என் கண்முன் வேறேதையும் காணேன்
சதா அவள் பக்கவாட்டாய் சாய்ந்து என்னை நோக்கி
தேவதைப் பாடல்கள் பாடி வந்தாள்.

இனிய கிழங்களை கண்டு தந்தாள்
காட்டுத்தேனும் பனித்த அமிழ்தும் தந்தாள்
பின் ஒரு விநோத மொழியில்
தன் உண்மைக் காதலைச் சொன்னாள்.

மனம் லயித்து தூங்கச் செய்தாள்
அப்போது ஒரு கனவு வந்தது – கொடூரமான கனவு
குளிரில் உறையும் மலைச்சரிவில்
சமீபமாய் நான் கண்டேன் அக்கனவில்
வெளிறிய அரசர்களையும் இளவரசர்களையும்,
வெளிறிய வீரர்களும் நின்றனர், மரண சோகை அவர்களிடம் கண்டேன்
அவர்கள் கத்தினர் ”கருணையற்ற அந்த பெண்ணின் வசியத்தில் கட்டுண்டு இருக்கிறாய்”
அவர்களின் பட்டினி உதடுகளை அந்தி ஒளியில் கண்டேன்
குரூரமான எச்சரிக்கை அகலமாய் பிளந்து தோன்ற.

விழித்துப் பார்க்கையில் இங்கு
குளிர்ந்து உறையும் மலைச்சரிவில் நான்.

அதனாலே நான் அலைகிறேன்
தனியாய் சோகையாய்
செட்ஜ் புல் சருகாகி வந்தாலும்
பறவைகள் பாடலை மறந்தாலும்
குறிப்பு:
மனம் வாடும் போதெல்லாம் கீட்ஸின் La Belle Dame Sans Merci நாடோடிப் பாடலின் வரிகள் நினைவு வர முணுமுணுத்துக் கொள்வேன். ஏனோ இப்பாடல் என்னை மீண்டும் மீண்டும் ஆற்றுப்படுத்துகிறது. காதல் பாடல் போல் தோன்றினாலும் இதன் பின்னே உள்ள கைவிடப்பட்டவனின் வலி, நிராசை, காலத்தின் முன் நிர்கதியாய் நிற்பது போன்ற தனிமை ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை. இதில் வரும் தேவதைப் பெண் வாழ்க்கை அல்லது லட்சியங்களின்/நம்பிக்கைகளின் குறியீடு என புரிந்து கொள்கிறேன். அதனாலே இப்பாடல் மீள மீள ஈர்க்கிறது – ஒன்றுமில்லாமல் தனியாய் புற்கள் காய்ந்த ஏரிக்கரையில் நிற்பவனின் வலி மறக்க முடியாதது.
மேலும் இப்பாடல் என் கல்லூரிக் கால நினைவுகளோடும் தொடர்பு கொண்டது. பேராசிரியர் ஜனார்த்தனன் மிகுந்த லயிப்போடு கருணையற்ற பெண்ணின் வஞ்சகத்தை வாசித்த குரல் நினைவில் இருக்கிறது. அந்த மஞ்சள் அட்டை புத்தகமும், அதன் சொரசிர தாள்களும் கூட மறக்கவில்லை. எனக்கு மனம் கனக்கும் சில வேளைகளில் இரண்டு மூன்று தடவையாவது இதனை மொழியாக்கி தொலைத்திருக்கிறேன். இம்முறை பதிவிடுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.