Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்திய டெஸ்ட் அணி ஒரு போலி T20 அணி


இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன் இந்தியாவின் பலவீனம் பந்து வீச்சு தான் என பலரும் சொன்னார்கள். மட்டையாளர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு ஒரு காரணம் இங்கிலாந்தின் மட்டையாட்டம் பலவீனம் என்பதால் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க தொடர்களில் அவர்கள் தட்டையான ஆடுதளங்களை தயார் பண்ணினது. இந்தியாவுடனான முதல் டெஸ்டிலும் அப்படியான ஆடுதளம் தான். அப்போது இந்திய மட்டையாளர்கள் முன்னூறு ஓட்டங்களை நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டில் அடித்தார்கள். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைத்து இங்கிலாந்து வேறு முயற்சி செய்தது.


கிட்டத்தட்ட வென்ற நிலையில் மோசமாக அடித்தாடி இங்கிலாந்து தோற்றது. அதற்கு அடுத்த டெஸ்டில் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் உள்ள ஆடுதளம் தயார் பண்ணினார்கள். அதில் இந்தியா மோசமாக பந்து வீசியது. இந்தியா தோற்றது. காரணம் வேகமும் பவுன்ஸும் கொண்ட பந்து வீச்சாளர்கள் நமக்கு இல்லை. மேலும் இப்படியான ஆடுதளங்களில் வேகமாக வீசும் பந்துகள் தாம் அதிக ஸ்விங் ஆகின்றன. இதை சவுத் ஆம்ப்டனில் நான்காவது டெஸ்டில் அரோன் நிரூபித்தார். சவுத் ஆம்ப்டனிலும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் மிக்க ஆடுதளம் தான். ஆனால் மழை காரணமாய் அதிகம் ஸ்விங் ஆனது. ஒட்டுமொத்தமாய் நான்கு டெஸ்டுகளிலும் நம் வேகவீச்சாளர்கள் போன இங்கிலாந்து பயணத்தொடரை விட இம்முறை நன்றாக பந்து வீசினர். எதிர்பார்ப்புக்கு மாறாக மட்டையாளர்கள் மிக மோசமாய் ஆடினர்.
நம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்காவில் சில வேளை நன்றாக மட்டையாடினர். நியுசீலாந்திலும் சில ஆட்டங்களில் நன்றாக மட்டையாடினர். ஆனால் அவர்கள் வேகமாய் விக்கெட்டுகளை கொடுத்து ஐம்பது ஓவர்களுக்கு உள்ளாகவே இரண்டு தொடர்களிலும் ஆட்டம் இழந்தனர். தடுப்பாட்டம் இன்மையால் தான் நாம் இத்தொடர்களை இழந்தோம். ஒரு மட்டையாட்ட அணிக்கு இரண்டு வகை ஆட்டங்களும் – தடுப்பாட்டம் + தாக்குதல் ஆட்டம் – கைவர வேண்டும். அணி தோல்வியை நோக்கி நகரும் போது பிரேக் போட நம்மிடம் தடுப்பாட்டம் இல்லை. தோனியால் முடிந்ததெல்லாம் அணியை ஏதாவது மரம் அல்லது மதில் மீது மோதி வண்டியை நிறுத்துவது தான். நம் அணியில் தவான், கம்பீர், ஜடேஜா, தோனி, ரோஹித் ஆகியோருக்கு தடுப்பாட்டமே இல்லை. கம்பீர் கடுமையாய் உழைத்து சில டெஸ்டுகளில் நீண்ட நேரம் ஆடியிருக்கிறார், ஆனால் அவரது தொழில்நுட்பம் இன்று சிதிலமாகி விட்டது. மிச்ச பேரில் கோலி, புஜாரா, ஆகியோரின் தடுப்பாட்டம் ஒருநாள், t20 ஆட்டங்களில் தாக்கத்தால் பலவீனமாகி உள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் செய்வதெல்லாம் கோலிக்கு பந்தை வைடாக குட் லெங்தில் வீசுவது தான். கோலிக்கு ஆரம்ப முப்பது பந்துகளில் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் முக்கியம். அதன் பின் தான் அவரது கால்கள் சரியாக இயங்க துவங்கும். அதற்கு அவர் கால் பக்கமும் நேராகவும் உள்ள பகுதிகளில் ஒற்றை ஓட்டங்களை நம்பி இருக்கிறார். ஆனால் இந்த ஷாட்களை இங்கிலாந்து வீச்சாளர்கள் பிளாக் செய்திட தோனி பதற்றமாகிறார். அவரது காலாட்டம் தாறுமாறாகிறது. அவரது தடுப்பாட்ட தொழில்நுட்பத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவை விரிவாக அலசப்பட்டுள்ளன. அவற்றை அவர் சரிசெய்ய வேண்டும். குறிப்பாய் நேராக ஆடவும் பந்துகள் ஆப் குச்சிக்கு வெளியே பொறுமையாய் விடவும் ஆரம்பிக்க வேண்டும். பட்டினி போட்டு கொல்வது தான் இங்கிலாந்து பந்து வீச்சின் இலக்கு. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு 300 பந்துகளையாவது ஆட தயாரானால் தான் கோலி அவர்களுக்கு எதிராக சதம் ஆடிக்க முடியும்.
புஜாராவின் டெஸ்ட் மட்டையாட்டம் கடந்த ஒரு வருடமாகவே பிரச்சனையில் உள்ளது. நிறைய உள்வரும் பந்துகளை அவர் அடிக்கவோ தடுக்கவோ தவறுகிறார். ஏனென்றால் அவரது காலாட்ட நிலை (stance) பல சமயம் அகன்று போய் உள்ளது. அவர் மிடில் குச்சி பந்தை கூட ஆப் பக்கம் அடிக்கும் நோக்கில் உள்ளார். இதனால் பந்து சட்டென உள்ளே வரும் போது திணறுகிறார். இந்த தொடரில் அவரது தடுப்பாட்டம் மேலும் கோளாறாகி உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது ஒருநாள் அணியில் இடம்பெறும் ஆசை. ஏனென்றால் இந்தியாவில் நீங்கள் ஒருநாள் அணியில் ஆடினால் தான் நட்சத்திரம். இதன் காரணமாய் அவரது கவனம் முழுக்க அதிக ஸ்டுரோக்குகளை அடிப்பதில் உள்ளது. அவரது இயலான தடுப்பாட்டத்தையும் கவனம் பொறுமையையும் இழந்து விட்டார்.

டெஸ்ட் ஓரளவு மட்டையாளர்களாக ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்கள் ரஹேனேவும் அஷ்வினும் தான். ரஹேனேவுக்கு சில பலவீன்ங்கள் உள்ளன. குறிப்பாய் பந்தை விரட்டும் போது அவரது முன் கால் ஆட்டம் போதுமானதாக இல்லை. விஜய் வெகுவாக முன்னேறி இருக்கிறார். உயரமாக பந்து எழுகிற ஆடுதளங்களிலும் பந்துகளை விடும் திறனை அவர் வளர்க்க வேண்டும். ஒரு நல்ல டெஸ்ட் அணியை உருவாக்க இன்னும் மூன்று மட்டையாளர்களும் ஒரு நல்ல கீப்பரும் வேண்டுமே! இப்போது அணியில் உள்ள நான்கு பேர்களும் டெஸ்ட் வகைமைக்கு ஏற்றவர்கள் அல்ல. ஆனால் இந்தியாவுக்கு மாற்று வீர்ரகளும் அதிகம் இல்லை. உண்மையில் இன்று இந்தியாவில் நல்ல தடுப்பாட்ட வீரர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் தோனி இவர்களை நம்பி இருக்கிறார்கள். தடுப்பாட வராவிட்டால் அடித்தாவது ஆடுங்கள் என்கிறார். இதனால் இந்தியா சில ஆட்டங்களை இழக்கும் என அவர் அறிந்தே இருக்கிறார். ஆனால் அடிப்படையில் மோசமான டெஸ்ட் மட்டையாளரான தோனி அணித்தலைவராக இருக்கையில் அவரால் வேறெப்படி அணியை மாற்ற முடியும்.

இப்போதைக்கு இந்திய அணி எதேச்சையாக டெஸ்டுகளில் ஆடும் ஒரு ஒருநாள், T20 அணி. வெறும் நட்சத்திரங்களின் அணிவரிசை. இன்னும் சற்று காலத்துக்கு அப்படித் தான் இருக்கும். இந்திய டெஸ்ட் அணியின் முன்னேற்றத்திற்கு ரெண்டு விசயங்கள் நடக்க வேண்டும்.
1, அணித்தலைவர் மாற வேண்டும். அதற்கு நாம் அடுத்த உலகக்கோப்பையில் இந்தியா தோற்பது வரை காத்திருக்க வேண்டும்.

2. டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு தனியான அணியை உருவாக்க வேண்டும். ஒருநாள் வீரர்களை எடுக்க கூடாது. டெஸ்ட் வீரர்கள் T20 ஆடக் கூடாது. அதற்கான வருமானத்தை BCCI ஈடு செய்ய வேண்டும். இங்கிலாந்து வாரியம் அப்படித்தான் செய்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...